NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 10
Worksheet time: 2hrs 53mins
Name
Class
Date
1.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
2.
எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவருக்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி
a)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
b)
நத்தை வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
c)
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
d)
பதறாத காரியம் சிதறாது
3.
சபைக் கூடலின் போது பேச்சாளர் சுத்தத்தைப் பற்றி __________ உரை, வருகையாளரின் கைத்தட்டலைப் பெற்றது.
a)
ஆற்றி
b)
ஆற்றும்
c)
ஆற்றிய
d)
ஆற்ற
4.
சபைக் கூடலின் போது பேச்சாளர் சுத்தத்தைப் பற்றி __________ உரை, வருகையாளரின் கைத்தட்டலைப் பெற்றது.
a)
ஆற்றி
b)
ஆற்றும்
c)
ஆற்றிய
d)
ஆற்ற
5.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தாத்தா தோட்டத்தில் இருந்து இரண்டு வாழைத்தார் வெட்டி வந்தார்.
b)
உன் அண்ணன் இரு மொழிகளில் அறிவு பெற்றவன்.
c)
என் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
d)
நம் நாட்டில் பலவகை இனம் வாழ்கிறது.
6.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
7.
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
a)
அருமை பெருமை
b)
குறை நிறை
c)
கல்வி கேள்வி
d)
நன்மை தீமை
8.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
9.
ஆதாயத்திற்காக உருவான நட்பு ஆபத்தில் முடிகிறது. __________, உணர்வுப் பூர்வமாக உருவான நட்பு கடைசி வரை நீடிக்கிறது.
a)
ஆகையால்
b)
ஆனால்
c)
ஏனெனில்
d)
அல்லது
10.
பெற்றோரின் __________ யை உணராத வனஜா பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டாள்.
a)
குறை நிறை
b)
எலும்பும் தோலும்
c)
ஆடல் பாடல்
d)
அருமை பெருமை
Reset
