wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் (ii) ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

தீயவை தீய பயத்தலால் தீயவை

______________________________________

a)

தீயினாற் சுட்ட புண்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

தீயினும் அஞ்சப் படும்

d)

தீமை இலாத சொலல்

2.

கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் யாது?


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

a)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

b)

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

c)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

d)

ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.

3.

பயத்தல் எனும் சீரின் பொருள் என்ன?

a)

அச்சம்

b)

கொடுக்கும்

c)

பயம்

d)

எடுக்கும்

4.

இக்குறளின் பொருள் என்ன?

a)

ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.

b)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

c)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

d)

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

5.

ஞாலம் எனும் சீரின் பொருள் என்ன?

a)

அகிலம்

b)

ஆகாயம்

c)

இதயம்

d)

கடல்

6.

கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


சரண் தனது வகுப்புத் தோழர்கள் போதைப் பொருள் உட்கொள்வதை அறிந்தான். அவர்கள் சரணையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி ஆசை வார்த்தைகளைக் கூறினர். ஆயினும் போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து சரண் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டான்.

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

7.

இக்கூற்றுக்கு ஏற்ற குறளின் இரண்டாவது அடி என்ன?

a)

ஞாலத்தின் மாணப் பெரிது

b)

தீயினும் அஞ்சப் படும்

c)

நோக்கக் குழையும் விருந்து

d)

தீமை இலாத சொலல்

8.

கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


சங்கீதா அன்றைய தினம் கூடுதல் வகுப்பிற்கான மதிய உணவைக் கொண்டு வர மறந்து விட்டாள். தன் தந்தை கொடுத்த செலவுப் பணத்தில் சில நோட்டுப் புத்தங்கங்களை வாங்கி அவற்றையும் செலவு செய்து விட்டாள். பசி வயிற்றைக் கிள்ளியது. அவளின் நிலமையை உணர்ந்த அவளின் தோழி மீனா, தான் கொண்டு வந்த மதிய உணவை அவளுடன் பகிர்ந்து உண்டாள்.

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

9.

தீயவை தீய பயத்தலால் தீயவை

______________________________________


இக்குறளின் அடுத்த அடியின் பொருள் என்ன?

a)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்

b)

நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

c)

முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்

d)

ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

10.

கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


கபிலன் தனது கலைக்கல்வி தேர்வுக்கான உபகரணங்களை எடுத்து வந்தான். ஆயினும் தன் அருகில் அவனுடன் பயிலும் நண்பன் சிவா, தன் உபகரணங்களை மறந்து வைத்து விட்டதை அறிந்து அவனுடன் பகிர்ந்து கொண்டான். சிவா தக்க சமயத்தில் கபிலன் தனக்கு உதவியதை எண்ணி நன்றி கூறினான்.

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.