wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 6

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இன்றைய திருக்குறள் என்ன ?

a)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு

b)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

c)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

d)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

2.

கீழ்காணும் திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

புகழ்பட _________________ தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது ________________

a)

புகழ்பட, தம்மை

b)

தந்நோவார், தம்மை

c)

புகழ்பட, தந்நோவார்

d)

வாழாதார், எவன்

3.

'புகழ்பட வாழாதார்' திருக்குறளின் பொருள் யாது ?

a)

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .

b)

எழுத்துக்களெல்லாம் அ என்ற எழுத்தைத் தமக்கு முதலாக உடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய கடவுளைத் தனக்கு முதலாக வைத்துள்ளது.

c)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

d)

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.

4.

இன்றைய திருக்குறளின் எண் என்ன ?

a)

237

b)

001

c)

1330

d)

234

5.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

எனும் திருக்குறளை உணர்த்தும் சூழலைத் தெரிவுச் செய்க.

a)

மகிழ்மதி தன்னைக் கேலிச் செய்தவர்களைப் பொருட்படுத்தாது விடாமுயற்சியுடன் மேடையில் பேசினாள்.

b)

மலர் தன்னை இகழ்ந்தவர்கள் மேல் கோபப்பட்டாள்.

c)

வெற்றி தன்னைக் கேலிச் செய்த நண்பர்களை அடித்தான்.

d)

பிரபு கடலில் ப்யணம் செய்ய ஆசைப்பட்டான்.

6.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்

எனும் திருக்குறளை உணர்த்தாத சூழல் எது ?

a)

யாழினி தன்னை இகழ்ந்தவர்களைப் பொருட்படுத்தாது விடாமுயற்சியுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெற்றாள்.

b)

அண்ணன் உறவினர்களை நொந்து கொள்ளாமல் தமக்குப் புகழ் உண்டாகுமாறு முயற்சியுடன் படித்து பட்டதாரியாக உருவாகினான்.

c)

கலைமதி தன்னை இகழ்ந்தவர்களிடம் சண்டை போட்டள்.

d)

கவிதா நண்பர்கள் அவளைக் கேலி செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது, விடாமுயற்சியோடு கற்றுக் கொண்டு திறமை பெற்றாள்.