wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு ( P6 Unit 5, Book B)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கல்வி அமைச்சர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு _____________ நிகழ்த்தினார். அவர் ஆசிரியப்பணி அறப்பணி எனக்கூறி ஆசிரியர்களைப் பாராட்டினார்.

a)

உறை

b)

உரை

2.

நெருப்பு மூட்டிச் சோளத்தை வாட்டுவதற்கு __________தேவைப்பட்டது. எனவே, அத்தை கடைக்குச் சென்று அதை வாங்கி வந்தார்.

a)

கரி

b)

கறி

3.

வீட்டு __________ மீது ஏறிய பூனை கீழே இறங்க முடியாமல் தவிப்பதை அப்பா பார்த்தார். அவர் ஏணியில் ஏறி அதை இறக்கிவிட்டார்.

a)

கூறை

b)

கூரை

4.

பிறர் நலன் கருதி வாழ்வதே _______ வாழ்க்கை ஆகும். ஆகவே, நாம் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும்.

a)

சீறிய

b)

சீரிய

5.

குமரன் பழங்களை வெட்டச் சிறிய கத்தியைப் பயன்படுத்தினான். அப்போது, கவனக்குறைவினால் கத்தியின் ___________ முனை அவனுடைய விரலில் கீறிக்காயம் ஏற்பட்டது.

a)

கூரிய

b)

கூறிய

6.

விடுமுறையில் அமுதா ‘மணிமேகலை’ காப்பியத்தைப் படித்தாள். அதில் ஏழை எளியவருக்கு __________ இட்டு வாழ்ந்த பெண்ணின் கதை சித்தரிக்கப்பட்டிருந்தது.

a)

அன்னம்

b)

அண்ணம்

7.

பல மணி நேரம் வெயிலில் தோட்ட வேலை செய்தவர் _______ போனார். அதனால், அவர் சற்று நேரம் மரநிழலில் அமர்ந்து ஓய்வெடுத்தார்.

a)

களைத்து

b)

கலைத்து

8.

கமலா தொலைந்துபோன தன் மூக்குத்தியை வீட்டின் மூலை முடுக்குகளில் தேடினாள். திடீரென்று ஓர் எலி துள்ளிக் குதித்து ஓடியதைக் கண்ட அவள் அதிர்ச்சியில் ஒரு ___________ உறைந்து போனாள்.

a)

கணம்

b)

கனம்

9.

உலகிலுள்ள சில தொன்மையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இதனை ________________ ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் உறுதிபடுத்துகின்றன.

a)

அகல்

b)

அகழ்

10.

காட்டிற்குச் சென்ற சாரணர்களில் ஒருவர் ________ தவறி எங்கோ சென்றுவிட்டார். அவரை ஆசிரியர் தேடிக்கண்டுபிடித்தார்.

a)

வலி

b)

வழி

11.

கத்தியைத் தீட்டுவதற்கு ____________ தேவைப்பட்டது. அதனால், அப்பா அதை அலமாரியில் தேடி எடுத்தார்.

a)

அரம்

b)

அறம்

12.

பிறர் நலன் கருதி உதவுவதே ____________ ஆகும். ஆகவே, நாம் நம்மாலான உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.

a)

அரம்

b)

அறம்

13.

பள்ளி முகாமில் இரவு நேர நடவடிக்கைக்குத் தீ மூட்ட அடுப்புக் _________ தேவைப்பட்டது. அதனால், மாணவர் தலைவர் கரித்துண்டுகளை எடுத்து வைத்தார்.

a)

கரி

b)

கறி

14.

மணப்பெண் _________புடவை அணிந்து மணமேடைக்கு வந்தார். அவர் பார்க்க மிகவும் அழகாக இருந்தார்.

a)

கூரை

b)

கூறை

15.

நான் வளர்க்கும் பூனை அதன் _______________ நகங்களால் என்னைக் கீறிவிட்டது. அதனால், நான் அதனுடைய நகங்களை வெட்டினேன்.

a)

கூரிய

b)

கூறிய

16.

சீதா நோயாளிகளை அக்கறையோடும் பரிவோடும் கவனிப்பவர். அவருடைய ___________ சேவைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.

a)

சீறிய

b)

சீரிய

17.

வீட்டுக் _________________ மீது குரங்கு ஒன்று உட்கார்ந்திருந்தது. மாமா அதை அங்கிருந்து விரட்ட முயன்றார்.

a)

கூறை

b)

கூரை

18.

பண்டிகை நாளன்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அம்மாவும் பாட்டியும் கோழிக் __________சமைத்து அவர்களுக்குப் பரிமாறினார்கள்.

a)

கரி

b)

கறி

19.

ஆசிரியர் ____________ ஆலோசனையின்படி நான் ஓட்டப்பந்தயத்திற்குப் பயிற்சி செய்தேன். அதனால், ஓட்டப்பந்தயத்தில் நான் வெற்றி பெற்றேன்.

a)

கூரிய

b)

கூறிய

20.

விலங்குக் காட்சியில் _____________ புலியைக் கண்டு பிள்ளைகள் பயந்தார்கள். உடனே, விலங்குக்காப்பாளர் புலியை அடக்கினார்.

a)

சீறிய

b)

சீரிய