NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும்
Total questions: 10
Worksheet time: 5mins
வீட்டிற்கு வரும் விருந்தினரை_______________________ மலர வரவேற்க வேண்டும்
அகமும் முகமும்
உயர்வு தாழ்வு
தங்கு தடை
வாழையடி வாழை
நாம் எப்பொழுதும் மற்றவர்களிடம் _____________________ பாராமல் பழக வேண்டும்
கள்ளங்கபடு
உயர்வு தாழ்வு
அகமும் முகமும்
ஏட்டிக்குப் போட்டி
தாம் கூறும் கருத்துகளுக்கு ____________________ பேசிக்கொண்டிருந்த அந்த இளைஞர்களை அப்பெரியவர் கண்டித்தார்
வெட்டிப்பேச்சாக
ஏட்டிக்குப் போட்டியாக
கள்ளங்கபடாக
அரைப்படிப்பாக
வான்மதி ராணியுடன் ________________ பேசி நேரத்தைப் பயனற்ற வழியில் கழித்தாள்.
வெட்டிப்பேச்சு
தோள் கொடுத்து
தங்கு தடையாக
கள்ளங்கபடாக
முகிலன் அனைவரிடமும் _________________ இல்லாமல் பழகுவதால் பலரால்
விரும்பப்பட்டான்
அரைப்படிப்பு
நோய் நொடி
கள்ளங்கபடு
அகமும் புறமும்
விடுமுறை நாட்களில் தந்தையின் பலசரக்குக் கடைக்குச் சென்று அவருக்குத்
_______________________ மாலனுக்குப் பிடித்த பொழுதுபோக்காகும்.
தங்கு தடையாக இருத்தல்
தோள் கொடுத்தல்
வெட்டிப்பேச்சு பேசுதல்
நோய் நொடி கொடுத்தல்
பாம்பைக் கண்டதும் கயல்விழியின் உடல் பயத்தால் _____________ வென ஆடியது.
கட கட
பர பர
வெட வெட
சட சட
மழைச்சாரல் அடித்ததால் ___________ வென்று ஆன தன் வீட்டு முற்றத்தைக் கழுவினாள் கமலா
கிடு கிடு
வெட வெட
கட கட
நச நச
கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்க.
வாசிப்புப் பழக்கத்தைத் தன் பொழுதுபோக்காக கொண்டுள்ள சுகிர்தன் __________________________ என்பது போல பல விஷயங்களை அறிந்து வைத்துள்ளான்.
.
தன் கையே தனக்கு உதவி
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம் எனும் பழமொழிக்கு பொருள் யாது?
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுய முயற்சியும் தேவை
ஆடத்தெரியாவிடில் ஆடக்கூடாது.
தன்னுடைய இயலாமையை மறைக்கப் பிறரைக் குறைச் சொல்லக்கூடாது.
ஆடுவதற்கு முன் கூடம் சரியாக உள்ளதா என பார்க்க வேண்டும்
