wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி புதிர் (எது சரி?)

Total questions: 7

Worksheet time: 2hrs 45mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் பழமொழியின் சரியான பொருளைத் தேர்வு செய்க.


ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

a)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.

b)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியற்று போகும்.

c)

குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். பழமொழியை நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.

2.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

3.

_____________ சோம்பல் _____________ மிடிமை .



மேற்காணும் பழமொழியை நிறைவு செய்க.

a)

இளமையிற் …… சோம்பலில்

b)

முதுமையிற் …… இளமையில்

c)

இளமையிற் …… முதுமையில்

4.

கீழ்க்காணும் பழமொழியில் கருமையாக்கப்பட்டச் சொல்லின் சரியான பொருளைத் தேர்வு செய்க.


ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

a)

நாலடியார் … பழமொழி

b)

நாலடியார் … திருக்குறள்

c)

திருக்குறள் … திருவாசகம்

5.

கீழ்காணும் சூழல் கதைக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

அன்பழகன் ஒரு சிறந்த பாடகர். தான் ஒரு பிரபலமான பாடகராக வேண்டும் என்கிற வேட்கைச் சிறு வயது முதற்கொண்டே அவருக்கு இருந்தது. தனது இலக்கை அடைவதற்குப் பல முயற்சிகளையும் பயிற்சிகளையும் முழு கவனத்துடன் மேற்கொண்டார். 2018 - ஆம் ஆண்டு வானவில் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவரது பாடல் திறமையை வெளிக்காட்டி முதல் பரிசினை வாகை சூடினார். தனது வாழ்க்கையில் நினைத்ததை அடைய வெறுமனே இல்லாமல் முயற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என அவர் கூறும் சிந்தனையானது _________________________________எனும் பழமொழியை நமக்கு உணர்த்துகின்றது.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

6.

அன்பழகன் தனது அன்றாட வாழ்விலும் இயற்கை, உடல் தூய்மை என அனைத்திலும் அதிகம் அக்கறைக் காட்டுபவர். அவர் ஒவ்வொரு நாளும் ஆலங் குச்சியிலும் வேப்பங் குச்சியிலும் பல் துலக்குவார். இயற்கைப் பொருள்களைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும் என நன்கு அறிந்தவர். இசையில் மட்டுமல்லாமல் தமிழின் பால் கொண்ட பற்று அவரை இலக்கியத்தையும் முழுமையாகக் கற்றுத்தேர ஊக்குவிப்பாக அமைந்தது. அவர் அன்றாடம் நண்பர்களுடன் உரையாடும் போது நாலடியாரின் பாடல்களையும் திருக்குறளையும் கொண்டு திறம்பட பேசுவார். எப்போதும் சொல்வன்மையோடு பேசும் இவரைக் காண்கையில் ____________ எனும் பழமொழியே நினைவிற்கு வருகிறது.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

7.

அன்பழகன் இளமையில் நாம் சோம்பலைத் தவிர்த்து உழைப்பதில் என்றும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்துவார். அவ்வாறு, இளமையில் உழைக்காமல் இருப்பவர்கள் முதுமையில் சிரமம்பட வித்திடும், வறுமை சூழ்ந்துவிடும் என்று ____________________________________ பழமொழிக்கு இணங்க அறிவுரை கூறுவார்.

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை