WorksheetsGRADE-10 [21.09.20]
Total questions: 30
Worksheet time: 15mins
1.காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள் எவை?
குச்சு
சுள்ளி
சினை
2.செடியிலிருந்து பூ கீழே விழுந்த நிலை
செம்மல்
வீ
போது
3.மூங்கிலின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?
கழை
கழி
கோல்
4.கரும்பின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் .
குருத்து
தளிர்
கொழுந்தாடை
5.மூசு என்பது _________________ ஐக் குறிக்கும்.
எள்பிஞ்சு
மாம்பிஞ்சு
பலாப்பிஞ்சு
6.காய்ந்த தாளும், தோகையும் ______________ என அழைக்கப்படும்.
சண்டு
சருகு
ஓலை
7.மடலி அல்லது வடலி என்பது _________ ஆகும்.
விளாவின் இளநிலை
பனையின் இளநிலை
தென்னையின் இளநிலை
8.மூச்சுப்பயிற்சி வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்?
ஒளவையார்
திருமூலர்
திருஞானசம்பந்தர்
9.வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசும் காற்று எது?
கோடை
கொண்டல்
தென்றல்
10.வடகிழக்குப் பருவக்காற்று ________________ மாதங்களில் மழைப்பொழிவைத் தருகின்றது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
11.கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று கூறியவர் யார்?
மாங்குடி மருதனார்
மதுரை இளநாகனார்
ஐயூர் முடவனார்
12.நிலக்கரி என்பது ______________ வளம் ஆகும்.
ஆற்றல் வளம்
கனிம வளம்
எரி சத்தி
13.காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் __________ குறைவதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
சிந்தனை ஆற்றல்
உடல் வளர்ச்சி
மூளை வளர்ச்சி
14.குளிர்பதனப்பெட்டி வெளியிடும் நச்சுக் காற்று எது?
குளோரோ புளோரோ கார்பன்
ஹைட்ரோ புளோரோ கார்பன்
நைட்ரோ புளோரோ கார்பன்
15.அமில மழை பெய்யக் காரணமான ஆக்சைடு எது?
கார்பன் டை ஆக்சைடு
நைட்ரஜன் டை ஆக்சைடு
நைட்ரோ கார்பன்
16."விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண" இவ்வடி இடம் பெற்றுள்ள நூல் எது?
கலிங்கத்துப்பரணி
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
17.''அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்'' என்று கூறிய நூல் எது?
புறநானூறு
அகநானூறு
நற்றிணை
18.கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்த செய்தியைக் கூறிய நூல் எது?
புறநானூறு
நற்றிணை
பரிபாடல்
19.நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று விருந்தளித்த செய்தியைக் கூறும் நூல் எது?
கலிங்கத்துப்பரணி
சிறுபாணாற்றுப்படை
புறநானூறு
20.மருந்தே ஆயினும் விருந்தொடுஉண்- என்று கூறியவர் யார்?
ஒளவையார்
செயங்கொண்டார்
இளங்கோவடிகள்
21.இல்லத்தின் வாயிலை இரவில் மூடுவதற்கு முன் விருந்தினரை அழைக்கும் வழக்கம் இருந்ததைக் கூறிய நூல்.
நற்றிணை
குறுந்தொகை
திருக்குறள்
22.திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்திய இயல் எது?
துறவறவியல்
அரசியல்
இல்லறவியல்
23.உலகளாவிய வணிகத்துக்கு உதவும் தொழில்நுட்பம் எது?
இணையம்
கனிணி
செயற்கை நுண்ணறிவு
24.உயிரினங்களில் மனிதனை உயர்த்திக் காட்டுவது எது?
கல்வியறிவு
அறிவியல் ஆற்றல்
சிந்தனை ஆற்றல்
25.இலா என்பது என்ன?
எழுது மென்பொருள்
உரையாடு மென்பொருள்
படிக்கும் மென்பொருள்
26.இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள் எது?
எழுத்தாளி
உரையாடு மென்பொருள்
இலா
27.சூட்டினால் பழுத்த பிஞ்சு எது?
அளியல்
சொண்டு
வெம்பல்
28.உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
தேவநேயப்பாவாணர்
மீனாட்சி சுந்தரனார்
நெல்லை.சு.முத்து
29.நெல், கம்பு முதலியவற்றின் மூடி எது?
கொம்மை
தோல்
உமி
30.''விருந்தே புதுமை'' என்று கூறிய நூல் எது?
தொல்காப்பியம்
நன்னூல்
வெண்பாமாலை
