NEW
Font size
WorksheetsBahasa Tamil T3
Total questions: 15
Worksheet time: 8mins
இள வயதிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் _____________ இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.
நோய் நொடி
உயர்வு தாழ்வு
கள்ளங் கபடு
____________ நிறைந்த சகுனி பாண்டவர்களின் உடைமைகளைத் தந்திரமாக அபகரிக்க , அவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கும்படி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான்.
அகமும் புறமும்
கள்ளங் கபடு
நாணிக் கோணி
மகான்களின் ___________ கருணையூற்றாகவும் அப்பழுக்கற்றதாகவும் இருப்பதால் மக்கள் எந்நாளும் அவர்களை விரும்பி நாடிச் சென்று போற்றி மகிழ்கின்றனர்
நாணிக் கோணி
தங்கு தடை
அகமும் புறமும்
நல்ல இலட்சியத்தை அடைவதற்கு முனைந்த பின் எத்தகைய __________ ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது.
சட்டத் திட்டம்
கள்ளங் கபடு
தங்கு தடை
மக்களை அவர்களிடம் இருக்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு ________ பார்ப்பது அறியாமையாகும்.
அகமும் புறமு
உயர்வு தாழ்வு
தங்கு தடை
கோடை காலத்தில் மழை பெய்யாததாலும் பாய்ச்சுவதற்குப் போதிய நீர் இல்லாததாலும் செடிகொடிகள் __________ காணப்பட்டன.
வாடி வதங்கி
உள்ளும் புறமும்
நாணிக் கோணி
இன்றைய நவநாகரிக உலகிலும் கூட சில பெண்கள் புதியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் __________ முகம் சிவந்து பேசத் தடுமாறுவதைக் காணமுடிகிறது
நாணிக் கோணி
அகமும் புறமும்
நோய் நொடி
நாட்டின் பாதுகாப்புக் கருதி விதிக்கப்படும் _____________ மீறுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என காவல்துறை அறிவித்துள்ளது.
தங்கு தடை
சட்டத் திட்டம்
நோய் நொடி
மஞ்சுவிரட்டு விளையாட்டில் வெற்றி பெற்ற இலைஞர்களோடு வேடிக்கைப் பார்த்த பொதுமக்களும் சேர்ந்து _____________ கொண்டாடினர்
தங்கு தடை
அகமும் புறமும்
ஆடிப் பாடி
தீபாவளிப் பண்டிகை காலத்தில் இந்துக்கள் வீட்டின் ____________ சுத்தம் செய்வார்கள்.
உள்ளும் புறமும்
தங்கு தடை
அகமும் புறமும்
பெற்ற பிள்ளைகளுக்குச் ______________________ சேர்ப்பதைவிட கல்வி செல்வத்தை
வழங்குவதே சிறப்பு.
இரவு பகல்
சொத்து சுகம்
குற்றம் குறை
_________________ ஓய்வில்லாமல் உழைத்து தம் குடும்பத்தைக் கரை சேர்த்தார் திரு
அன்பரசன்.
ஆற அமர
இரவு பகல்
சொத்து சுகம்
அகிலனும் நகுலனும் எப்பொழுதும் _________________________________ ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர்.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்புப் போல
ஒளியைக் கண்டா இருள் போல
தாயில்லாத குழந்தைகளைக் கவனித்து வந்த அந்தக் குடும்பத் தலைவர்.சாலை விபத்தில் இறந்ததும் அந்தக் குடும்பத்தினர் __________________________________ தவித்துப் போனர்.
ஒளியைக் கண்ட இருள் போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
அருளனைப் பற்றி அமுதன் இல்லாததும் பொல்லாததுமாக அவனது அம்மாவிடம் சொல்லி மாட்டிவிட்டான்.
கை தவறுதல்
இரண்டெட்டில்
பற்ற வைத்தல்
