WorksheetsGrade 05 Tamil by Fathima Shakeeka
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
சந்திரன் உதயமாகும் போது மலரும் மலர் எது?
ஆம்பல்
தாமரை
அல்லி
ஓடம் என்பதன் பொருள் யாது?
ஆகாயம்
தோணி
மனம்
'மீன் + இனம்' என்பதை சேர்த்தெழுதினால் வருவது,
மீன்இனம்
மீன்னம்
மீனினம்
அரசனைக் குறிப்பது,
ஆ
கோ
பை
உயிர் எழுத்துக்கள் எத்தனை?
30
18
12
சூரியன் உதிக்கும் திசை யாது?
கிழக்கு
தெற்கு
மேற்கு
கதிரவன் என்ற சொல்லுக்குரிய ஒத்தகருத்துச் சொல்,
திங்கள்
நிலா
சூரியன்
'புற்றரைகள்' என்பதை பிரித்தெழுதினால் வருவது,
புள் + தரைகள்
புற்று + அரைகள்
புற் + றரைகள்
'க' என்னும் எழுத்து இயல்பொலியாக வரும் சொல்லைத் தெரிவு செய்க.
தாகம்
பாகம்
கட்டில்
ஆசிரியர் என்பது,
அஃறிணை
உயர்திணை
தன்மை
.............. மப்பும் மந்தாரமுமாக இருண்டு காணப்பட்டது.
வாணம்
வாநம்
வானம்
வீடுகள் என்பது,
ஒன்றன்பால்
பலவின்பால்
பலர்பால்
இலாபம் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,
இம்மை
அழிவு
நட்டம்
விதவை என்பதன் எதிர்ப்பாற் சொல்,
தபுதாரன்
மனைவி
கணவன்
'சரியான விடையை தெரிவு செய்து அதன் கீழ்க் கோடிடுக' என்பது,
அறிவித்தல்
அறிவுறுத்தல்
கட்டளை
'மாணவர்கள்' என்பதன் ஒருமை வடிவம்,
மாணவர்
மாணவி
மாணவன்
'நீங்கள்' என்பது,
தன்மை
முன்னிலை
படர்க்கை
'முயச்சி' என்பதன் எழுத்து வழக்கு,
முயர்ச்சி
முயற்ச்சி
முயற்சி
நாளை மழை ...........
பெய்தது
பெய்கிறது
பெய்யும்
படர்க்கைப் பன்மைச் சொல்,
கிளிகள்
மரம்
நான்
அம்புலி என்பதன் பொருள்,
ஞாயிறு
சந்திரன்
கதிரவன்
கண் கட்டு வித்தையைக் குறிக்கும் இன்னொரு சொல்,
நட்சத்திரக்கூட்டம்
உள்ளம்
இந்திரசாலம்
மெய் எழுத்துக்கள் எத்தனை?
12
18
30
வல்லின எழுத்துக்கள் எவை?
ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்
க் , ச் , ட் , த் , ப் , ற்
'காலையில் சேவல் கூவியது' என்பது,
அஃறிணை வாக்கியம்
உயர்திணை வாக்கியம்
ஆண்பால் வாக்கியம்
'அளை' என்பதன் பொருள்,
திரை
புற்று
கூப்பிடு
நீதிபதி என்பது,
ஆண்பால்
பெண்பால்
பொதுப்பால்
முழுச் சந்திரன் எவ்வாறு அழைக்கப்படும்?
பௌர்ணமி
அமாவாசை
தேய்பிறை
அழைக்கும் எழுத்து,
போ
வா
தை
உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?
12
18
216
மணியோசை என்பதை பிரித்தெழுதினால் வருவது,
மணி + யோசை
மணி + ஓசை
மணியோ + சை
'ச' எனும் எழுத்து இயல்பொலியாக வரும் சொல்லைத் தெரிவு செய்க.
மஞ்சள்
தஞ்சம்
சட்டி
பால் எத்தனை வகைப்படும்?
5
4
3
தன்மையைக் குறிக்கும் சொல்,
எழுதினான்
படித்தேன்
ஓடினாய்
'தையல், என்பதன் பொருள்,
சுற்றத்தார்
புலவர்
பெண்
'தேத்தண்ணி' என்ற சொல்லின் எழுத்து வழக்கு,
தேநீர்
தேனீர்
நீர்
'நான் கதைப் புத்தகம் வாசிப்பேன்' என்பது,
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
'தமிழ் புத்தகத்தை எடுங்கள்' என்பது,
அறிவித்தல்
கட்டளை
அறிவுறுத்தல்
'தக தக' என்பது,
இரட்டைக்கிளவி
அடைமொழி
இடப்பெயர்
'தோல்வி' என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,
வீழ்ச்சி
வெற்றி
பின்னடைவு
'பவனி வரும் நிலா' என்ற கவிதையை (a) எழுதினார். (1 தேசிக விநாயகம் பிள்ளை / 2 நவாலியூர் சோமசுந்தர புலவர்)
(a) கடிகாரப் பறவைகளாகும். (1 கிளி,புறா / 2 சேவல், காகம்)
நாம் காலையும் மாலையும் (a) வழிபட வேண்டும். (1 இரைவனை / 2 இறைவனை)
சின்ன தம்பி புலவர் (a) வாழ்ந்தார். (1 நல்லூரில் / 2 திருகோணமலையில்)
'பவளக்கொடி' எனும் பாடலை (a) எழுதினார். (1 தேசிக விநாயகம் பிள்ளை / 2 நவாலியூர் சோம சுந்தர புலவர்)
நாவலியூர் சோம சுந்தர புலவர் (a) எனும் ஊரில் பிறந்தார். (1 நவாலி / 2 நல்லூர்)
மா,பலா,வாழை என்பன (a) ஆகும். (1 முத்தமிழ் / 2 முக்கனிகள்)
(a) பாடசாலை எங்கே உள்ளது? (1 உமது / 2 அவை)
(a) இனிமையாகப் பாடுகிறாள். (1 அவள் / 2 நீ)
(a) தினமும் உடற்பயிற்சி செய்வோம். (1 நாம் / 2 நீங்கள்)
