wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி படிவம் 5 (1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சூழலுக்கு ஏற்ற பழமொழியினைக் கண்டறி?

' ஆடாத ஆட்டம் ஆடினான் இன்று அனுபவிக்கிறான்"

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

கெடுவான் கேடு நினைப்பான்

d)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

2.

இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் சுமதி முதல் வகுப்பு மாணவ தோழிகளிடம் மட்டும் பேசி பழகி வருகிறாள். அதனால் தான் பரீட்ச்சையில் நல்ல புள்ளிகளை எடுக்கிறாள்

a)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

b)

சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்.

c)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

d)

துணை போனாலும் பிணை போகாதே

3.

நோய்வாய்ப்பட்டிருந்த கோகிலனுக்கு தாமான் தெராத்தாய் மக்கள் ஒன்றுகூடி பணந்திரட்டி உதவினர். கோகிலனின் தாத்தா அக்காலத்தில் பலருக்கு உதவியதை யாரும் மறக்கவில்லை.

a)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

தர்மம் தலை காக்கும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்

4.

தள தள வென இரவுச்சந்தையில் வாங்கிய கீரைகள் காலையில் இப்படி வாடி பூச்சியடித்தது போல் உள்ளதே?!!

a)

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்

b)

சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்

c)

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

d)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

5.

சிறுவயது முதல் அவன் சேமித்தப் பணம் தான் அவன் அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு உதவியது.

a)

தர்மம் தலை காக்கும்

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

மனக் கவலை பலக் குறைவு

d)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

6.

குறள்: நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன். மூன்றைக்கண்டு பிடி?

a)

காலம் நீட்டித்தல்

b)

அவமதித்தல்

c)

சோம்பல்

d)

மறதி

7.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

'நகு' என்றால் என்ன?

a)

ஏசுவது

b)

சிரிப்பது

c)

அழுவது

d)

உதவுவது

8.

நல்ல குணமுடையவர்கள் தங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கு நன்மையே செய்ய வேண்டும்.

a)

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்

b)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

c)

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்தோ சால்பு

d)

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

9.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

--------------------------------------------------------

a)

அவ்வ துறைவது அறிவு

b)

பண்புடை யாளர் தொடர்பு

c)

ஊக்க முடையா னுழை

d)

மேற்சென்று இடித்தற் பொருட்டு

10.

மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான். பழமொழி?

a)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

b)

தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை

c)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

d)

கெடுவான் கேடு நினைப்பான்