wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Category A (Round 3)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சமஸ்கிருத மொழியில், sāman மற்றும் veda என்பவற்றை சேர்த்து உருவாக்கப்பட்டது தான் sāmaveda. அதில் sāman என்றால் என்ன ?

a)

வேள்வி

b)

அறிவு

c)

பாடல்கள்

d)

செய்யுள்

2.

மாயோன் மேய காடுறை உலகம்” எனும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள வரிகள் எதனை உணர்த்துகின்றது?

a)

திருமால் குறிஞ்சி நிலக் கடவுளாக வழிபட பெற்று வந்திருப்பதை உணர்த்துகின்றது.

b)

திருமால் மருதம் நிலக் கடவுளாக வழிபட பெற்று வந்திருப்பதை உணர்த்துகின்றது.

c)

திருமால் முல்லை நிலக் கடவுளாக வழிபட பெற்று வந்திருப்பதை உணர்த்துகின்றது.

3.

அஷ்டமி ரோகிணி என்று கேரளாவில் எந்த நாளை அழைப்பர்?

a)

பொங்கல்

b)

கிருஷ்ண ஜெயந்தி

c)

தெலுங்கு வருடப்பிறப்பு

d)

தீபாவளி

4.

தட்சண கைலாயம் எனக் குறிப்பிடப்படும் சிவன் கோவில் என்ன?

a)

கபாலீஸ்வரர் கோவில்

b)

தியாகேசர் கோவில்

c)

தஞ்சை பெரியகோவில்

d)

காசி விசுவநாதர் கோவில்

5.

திருவாவினன்குடி என்ற பெயருடைய முருகனின் அறுபடை வீடு எது?

a)

பழனி

b)

திருவண்ணமலை

c)

சிதம்பரம்

d)

திருபறங்குன்றம்

6.

இறைவன் உலகையும், உலகப் பொருள்களையும், உயிர்களுக்கான உடம்பையும் ஏன் படைத்தார்?

a)

உயிர்களைப் பற்றியுள்ள அழுக்கையும் ஆணவத்தையும் நீக்கி உயிர்களைப் பக்குவப்படுத்துவதற்கு

b)

அன்பை உயிர்களிடத்தில் சேர்ப்பதற்கு

c)

மனிதனைப் பற்றியுள்ள மும்மலத்தை அகற்றுவதற்கு

d)

முக்தியடைவதற்கு

7.

சிலப்பதிகாரத்தில், மாதவி, கோவலன் அல்ல வேறொருவனை தான் காதல் கொண்டது போல் பாடியதை மன்னிக்க வேண்டி எந்தக் கடவுளை வழிபட்டாள் ?

a)

முருகன்

b)

திருமால்

c)

வருணன்

d)

இந்திரன்

8.

மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைக்கப்படும் திருநாள் எது?

a)

பிரதோஷம்

b)

சதுர்த்தி

c)

தமிழ்ப் புத்தாண்டு

d)

ஹோளி

9.

திவ்வியப்பிரபந்த வரிகளைக் கொண்டே இராமாயணம் இயற்றியவர் யார்?

a)

பெரியவாச்சான் பிள்ளை

b)

நம்பிள்ளை

c)

திருவாய்மொழிப் பிள்ளை

d)

திருவாசிரியம் நம்மாழ்வார்

10.

கீழே கொடுத்தவற்றுள் எது சைவ நூல் அல்ல?

a)

தேவாரம்

b)

சிவபுராணம்

c)

திருப்பாவை

d)

அபிராமி அந்தாதி

11.

குடும்பக் கடமைகளைச் செம்மையாக நிறைவு செய்தவர்கள் அடையும் படிநிலை யாது?

a)

கிரகஸ்தம்

b)

சன்யாசம்

c)

வனப்பிரஸ்தம்

d)

பிரம்மச்சரியம்

12.

இவற்றில் கந்த புராணத்தை எழுதியவர் யார்?

a)

மாணிக்கவாசகர்

b)

கச்சியப்ப சிவாச்சாரியார்

c)

கம்பர்

d)

தொல்காப்பியர்

13.

விபூதி என்பது எவ்வாறு செய்யப்படுகிறது?

a)

யாகத்தின் சாம்பலைக் கொண்டு செய்யப்படுவது

b)

மயாணத்தில் உள்ள சாம்பலைக் கொண்டு செய்யப்படுவது

c)

பசுவின் சாணத்தை அக்கினியாலே சுட்டு செய்யப்படுவது

14.

பெருமாலுடன் ஜோதி வடிவத்தில் இரண்டறக் கலந்த ஆழ்வார் யார்?

a)

நம்மாழ்வார்

b)

திருப்பாணாழ்வார்

c)

குலசேகர ஆழ்வார்

d)

ஆண்டாள்

15.

திருநாளைப்போவார் என்ற பட்டப் பெயருடைய நாயன்மாரின் பெயர் என்ன?

a)

சிறுதொண்டர்

b)

இடங்கழி நாயனார்

c)

நந்தனார்

d)

அதிபத்த நாயனார்

16.

சிவபெருமானின் லோகத்தை எப்படி அழைப்பார்கள்?

a)

சுவர்க்கம்

b)

வைகுண்டம்

c)

திருக்கைலாயம்

d)

சத்தியலோகம்

17.

அப்பர் சூலை நோயிலிருந்து விடுப்பட அவர் பாடிய தேவாரப் பாடல் எது?

a)

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

b)

தோடுடைய செவியன் விடைஏறியோர்

c)

கூற்றா யினவாறு விலக்ககிலீர்

d)

சொற்றுணை வேதியன் சோதி

18.

ஞான சம்பந்தருக்குப் பெற்றோர் இட்ட பெயர் என்ன?

a)

முத்தமிழ் விரகர்

b)

சைவசிகாமணி

c)

சேக்கிழார்

d)

ஆளுடைய பிள்ளையார்

19.

சிவபெருமான் செய்யும் தொழில்கள் யாவை?

a)

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல்

b)

படைத்தல், காத்தல், அழித்தல்

c)

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்

20.

சிவ வழிபாட்டில் தென்முகக் கடவுள் என்பவர் யார்?

a)

தட்சணாமூர்த்தி

b)

மகாகாளர்

c)

பைரவர்

d)

ருத்திரர்