wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 150

Worksheet time: 1hrs 15mins

Name
Class
Date
1.

ஔவையார் நெல்லிக்கனியை உண்பது கண்டு அதியமான் _________________________

a)

பெருமகிழ்ச்சியுறுவான்

b)

பெருமகிழ்ச்சியுற்றோன்

c)

பெருமகிழ்ச்சியற்றான்

d)

பெருமகிழ்ச்சியுற்றான்

2.

இஞ்சே. யாகோப் குடும்பத்தினர் பலவிதமான கூடைகள் ____________________ விற்கும் சிறு தொழிலில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

a)

வனைந்து

b)

நெய்து

c)

பின்னி

d)

முடைந்து

3.

எது சரியான வாக்கியம்?

a)

சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

b)

சிறுவர்கள் ஆடிப்படி மகிழ்ந்தன.

c)

சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.

4.

சோதனையில் சிறப்பாகத் தேர்ச்சி _________________ மாணவர்களுக்கு விருது ____________________ சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

a)

பெற்று / அணிவித்து

b)

பெறும் / சூட்டப்பட்டது

c)

பெற்றால் /வழங்கி

d)

பெற்ற / வழங்கி

5.

திருமதி வோங் விருந்தினர்களுக்குக் குளிர்பானத்தை கவனமாக கையில் ______________________ வந்தார்.

a)

கொண்டு

b)

ஏந்தி

c)

அணைத்து

d)

எடுத்து

6.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

கவிஞர் கண்ணதாசன் பல புகழ்பெற்ற மரபுக் கவிதைகளை ______________.

a)

எழுதியுள்ளார்

b)

இயக்கியுள்ளார்

c)

இயற்றியுள்ளார்

d)

அமைத்துள்ளார்

7.

கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

வேட்டையாட காட்டிற்குச் சென்ற பாலன், வழித் தவறி பாதையைத் தேடி __________________.

a)

அலையும்

b)

அலைந்தார்

c)

அலைந்தான்

d)

அலைந்த

8.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் வகையைத் தெரிவு செய்க.

அம்மா தன் பிள்ளையை மடியில் படுக்க வைத்து தாலாட்டுப் பாடினாள்.

a)

வேற்றுமை உருபு

b)

எழுவாய்

c)

செயப்படுப்பொருள்

d)

பயனிலை

9.

படம் உணர்த்து பெயர்ச்சொல் யாது ?

a)

சினைப்பெயர்

b)

பொருட்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பண்புப்பெயர்

10.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற பொருட்பெயரைத் தெரிவு செய்க.

---------------- மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றான்.

a)

குயவன்

b)

தச்சன்

c)

வனையன்

d)

இடையன்

11.

இராமுவிற்கு பொங்கல் கொண்டாட முக்கியமான பொருள் ஒன்று தேவைப்படுகிறது. அவன் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

a)

சிற்பி

b)

தச்சன்

c)

குயவன்

d)

இடையன்

12.

பண்புப்பெயரை உணர்த்தும் படத்தை தேர்ந்தெடு.

a)
b)
c)
d)
13.

மேற்க்காணும் படம் எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் கொண்டதாகும் ?

a)

சினைப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

இடப்பெயர்

14.

கீழ்காணும் படத்தின் உடல் உறுப்புகளின் தொடர்பான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

இடப்பெயர்

d)

சினைப்பெயர்

15.

கோடிடப்பட்ட சொல்லின் பெயர்ச்சொல்லைத்

தெரிவு செய்க.


இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.

a)

பொருட்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

16.

சரியான பொருட்பெயருக்கு வட்டமிடுக.

a)

கண்

b)

வாழைப்பழம்

c)

பென்சில்

d)

குழந்தை

17.

பண்புப்பெயரைத் தேர்வு செய்க.


மாறன் அழகான மலர்மாலையைத் தொடுத்தான்.

a)

மாறன்

b)

அழகான

c)

மலர்மாலையைத்

d)

தொடுத்தான்.

18.

தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

47

b)

147

c)

247

d)

347

19.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

8

b)

12

c)

16

d)

20

20.

மெய்யெழுத்துகள் எத்தனை?

a)

12

b)

14

c)

16

d)

18

21.

மெய்யெழுத்துகள் யாவை?

a)

வல்லினம், மெல்லினம், குறிலினம்

b)

இடையினம், மெல்லினம், வல்லினம்

c)

வல்லினம், இடையினம், குறிலினம்

d)

மெல்லினம், இடையினம், குறிலினம்

22.

ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது..

a)

குற்றெழுத்து

b)

மாத்திரை

c)

நெட்டெழுத்து

d)

மெய்யெழுத்து

23.

சரியானதைத் தேர்ந்தெடுக.

a)

க் + அ = அ

b)

க் + ஆ = ஆ

c)

அ + க் = க்

d)

க் + அ = க

24.

உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?

a)

80

b)

90

c)

100

d)

110

25.

பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.

a)

தங்கம்

b)

உணவு

c)

கன்று

d)

அம்பு

26.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

27.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

28.

மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

29.

சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?

a)

பகுதிப் பெயர்

b)

விகுதிப் பெயர்

c)

தொகுதிப் பெயர்

d)

தகுதிப் பெயர்

30.

முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

31.

வினைச்சொல் குறித்த பிழையான விளக்கத்தைத் தெரிவு செய்க.

a)

வேற்றுமை உருபு ஏற்கும்

b)

காலங் காட்டும்

c)

திணை காட்டும்

d)

பால் காட்டும்

32.

வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

பாடிய

b)

பாடுகின்ற

c)

பாடும்

d)

பாடினான்

33.

உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாய்ந்து போ!

b)

ம்ம்ம், என்னே சுவை!

c)

பல்லாண்டு வாழ்க!

d)

பாடம் செய்!

34.

பின்வரும் வாக்கியத்தை நேர்க்கூற்றாக மாற்றுக.

தன் திறன்பேசியை விற்கப் போவதாக மாறன் கூறினான்.

a)

நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்.

b)

"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்" என்று மாறன் கூறினான்.

c)

"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்," என்று கூறினான் மாறன்.

d)

"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்." என்றான் மாறன்.

35.

செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.

a)

படித்தான், செய்தான்

b)

பாடங்களை, தேர்வினை

c)

முறையாகப், சிறப்பாகச்

d)

பாடங்களைப் படித்தான்

36.

நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

d)

செய்தி வாக்கியம்

37.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
38.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
39.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
40.
மச்சம்
a)
குரங்கு
b)
யானை
c)
குதிரை
d)
மீன்
41.
பிதா
a)
தாய்
b)
தந்தை
c)
அண்ணன்
d)
தங்கை
42.
மாதா
a)
தாயார்
b)
அப்பா
c)
தமக்கை
d)
தம்பி
43.
தோழன்
a)
பெற்றோர்
b)
தமக்கை
c)
தோழி
d)
நண்பன்
44.
தமக்கை
a)
அண்ணன்
b)
அக்காள்
c)
அம்மா
d)
அப்பா
45.
செவி
a)
கால்
b)
கண்
c)
காது
d)
மூக்கு
46.
விழி
a)
கால்
b)
காது
c)
கை
d)
கண்
47.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

மகிழுந்து

c)

நெகிழிகள்

d)

குழந்தைகள்

48.

கீழ்க்காணும் வாக்கியத்தில் ஆண்பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.


வனவிலங்கு அதிகாரியான நக்கீரன், ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பானதென்று எச்சரித்தார்.

a)

நக்கீரன்

b)

மிருகங்களை

c)

மக்களிடம்

d)

புலி

49.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.


குயவன் _________-திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.

a)

குரத்தி

b)

குயத்தி

c)

குவத்தி

d)

குலத்தி

50.

பின்வருவனவற்றுள் பலவின்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
51.

கீழ்க்கண்ட வாக்கியங்களில் சரியான பலர்பால் பயன்பாட்டைக் கொண்ட வாக்கியத்தைக் கண்டெடுக.

a)

வானில் குருவிகள் பறந்தன

b)

சரவணன் வேகமாக ஓடினான்.

c)

மலேசியா மக்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள்.

d)

ஆற்றில் மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன.

52.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது; ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை வழியாக சென்றனர்.

மேலே உள்ள உரைநடையிலுள்ள பலர்பாலை அடையாளம் காண்க.

a)

பழநி

b)

தண்டாயுதபாணி

c)

சுவாமி

d)

பக்தர்கள்

53.

அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

சிறுவன், பாடகன்

b)

சிருவன், பாடகர்

c)

சிறுவர், பாடகன்

d)

சிறுவர்கள், பாடகன்

54.

ஏற்ற பால் வகையைத் தெரிவு செய்க.

a)

பெண்பால்

b)

ஆண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

55.

கீழ்க்காணும் வாக்கியங்களில் ஒன்றன்பால் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிறுவர்கள் உரக்க வாசித்தனர்.

b)

இராமனின் கதையைக் கேட்ட சீடர்கள் மனமுருகி நின்றனர்.

c)

காளை மாடு வயலை உழுதது.

d)

மாணவ மணிகள் தேசிய கீதத்தைப் பாடி மகிழ்ந்தனர்.

56.

கதிரவன் பல் துலக்கினான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

d)

கெட்ட காலம்

57.

ஔவையார் நெல்லிக்கனியை உண்பது கண்டு அதியமான் _________________________

a)

பெருமகிழ்ச்சியுறுவான்

b)

பெருமகிழ்ச்சியுற்றோன்

c)

பெருமகிழ்ச்சியற்றான்

d)

பெருமகிழ்ச்சியுற்றான்

58.

திருமதி. தேன்மொழி தம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த ஆறு வருடமாக பெரும்பாடுபட்டு உழைப்பார்.

a)

சரி

b)

பிழை

59.

நாதன் உயர்க்கல்வி கற்க வெளிநாட்டிற்குச் சென்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.

a)

நிகழ்காலம்

b)

இறந்தகாலம்

c)

எதிர்காலம்

60.

கல்விச் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்கள் வரும் புதன்கிழமை அனுமதி பாரத்தை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

61.

விவசாயி நெல் வயலில் நெற்பயிர்களை அறுவடை செய்கிறார்.

a)

சரி

b)

பிழை

62.

திரு. கண்ணன் தம் மகளின் எதிர்வரும் திருமணத்திற்காக பல முன் ஏற்பாடுகளைச் செய்தார்.

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

63.

இவற்றில் எது நிகழ்கால வாக்கியம்?

a)

எதிர்வரும் குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பர்.

b)

வளர்மதி பட்டிமன்றத்தில் முதல் பரிசு பெற்றாள்.

c)

பூங்கொடி நாளை நடக்கவிருக்கும் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற மீள்பார்வை செய்கிறாள்.

64.

இவற்றுள் எவை நாம் படித்த காலங்களில் இடம்பெறவில்லை?

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

நல்ல காலம்

d)

எதிர்காலம்

65.

நகுலன் கடைக்குச் சென்றான். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?

a)

நிகழ்காலம்

b)

இறந்த காலம்

c)

எதிர்காலம்

d)

எதிர்த்த காலம்

66.

வ் + ஓ =

a)

வே

b)

வொ

c)

வோ

67.

பிரித்தெழுதுக மை

a)

ம் +அ

b)

ம் + ஓ

c)

ம்+ ஐ

68.

உயிர் எழுத்துகளில் இது அடங்காது

a)

b)

c)

d)

69.

ஆய்த எழுத்தினை தேர்வு செய்க

a)

க்

b)

த்

c)

d)

ம்

70.

பறவையின் மூக்கு

a)

அலகு

b)

அழகு

71.

சத்தம்

a)

ஒளி

b)

ஒலி

72.

பயம்

a)

கிலி

b)

கிளி

73.

தால்

a)

நாக்கு

b)

தாழ்ப்பாள்

74.

மாரி

a)

மலை

b)

மழை

75.

கூப்பிடு

a)

விழி

b)

விளி

76.

கிரகம்

a)

கோள்

b)

கோல்

77.

_________________தொடர்களின் அழகை இரசித்தேன்.

a)

மலை

b)

மழை

c)

மளை

78.

அமுதா தண்ணீரை ____________னாள்.

a)

அள்ளி

b)

அல்லி

c)

அழ்ழி

79.

தாரணி வங்கிக்குச் செல்லும் _________ தெரியாமல் தடுமாறினாள்.

a)

வலி

b)

வழி

80.

அம்மா வாசலில் அழகிய _______ போட்டார்.

a)

கோலம்

b)

கோளம்

81.

கோபியின் காலில் ______ குத்தியதால் அவன் கத்தினான்.

a)

முள்

b)

முல்

82.

பொங்கல் இனிப்பாக இருக்க , அம்மா அதில் ____________ சேர்த்தார்

a)

வெள்ளம்

b)

வெல்லம்

83.
  1. எறும்புகள் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளன; எனினும் சுறுசுறுப்பு மிகுந்த உயிரினமாகும்.
a)

சரி

b)

தவறு

84.

உதயனுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆகவே, அவன் அனைவரிடமும் நெருங்கிப் பழக மாட்டான்.

a)

சரி

b)

தவறு

85.

முகநூல் பயன்பாட்டினால் பல தீமைகள் விளைகின்றன. ___________ மக்கள் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

a)

எனவே

b)

ஆனாலும்

c)

மேலும்

86.

கமலம் கெட்டிக்கார மாணவி. _________, நண்பர்களுடன் குறைவாகவே கருத்துகளைப் பகிர்ந்து கொள்வாள்.

a)

இருந்தாலும்

b)

உம்

c)

அல்லது

87.

நேற்று அக்காள் வந்தாள். நேற்று மாமா வந்தார்.

a)

நேற்று அக்காள் மாமா வந்தனர்.

b)

நேற்று அக்காளும் மாமாவும் வந்தனர்.

88.

உனக்குச் சிறுவர் கதைகள் பிடிக்குமா?

உனக்கு மரம நாவல் பிடிக்குமா?

a)

உனக்குச் சிறுவர் கதைகளும் மரம நாவலும் பிடிக்குமா?

b)

உனக்குச் சிறுவர் கதைகள் பிடிக்குமா அல்லது

மரம நாவல் பிடிக்குமா?

c)

உனக்குச் சிறுவர் கதைகள் பிடிக்குமா எனினும்

உனக்கு மரம நாவல் பிடிக்குமா?

89.

புனிதா கலகலப்பாகப் பழகுவாள். இருந்தாலும், சில நேரங்களில் மௌனமாகவே இருப்பாள்.

a)

சரி

b)

தவறு

90.

அகல்யா ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு அழகான ஓவியம் வரைந்தாள். ___________, அவளுக்குப் போட்டியில் முதல் பரிசு கிடைக்கவில்லை.

a)

அல்லது

b)

ஆகவே

c)

எனினும்

91.

நாம் எப்போது தவறு செய்வோம் என்று எதிரிகள் காத்திருக்கின்றனர். __________, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

a)

ஆகவே

b)

ஏனென்றால்

c)

உம்

92.

என் பள்ளிக்கூடம் சிறியது. ________, என் பள்ளிக்கூடம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

a)

ஆகையால்

b)

ஆனால்

c)

ஆயினும்

93.

ஆத்திசூடியை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

திருவள்ளுவர்

94.

'வையம்' எனும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு

a)

பாடல்

b)

உலகம்

c)

கடல்

d)

காலை

95.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையை அடையாளங்காண்க.


மதியழகி மல்லிகை மலர்களைப் பறித்தாள்.

a)

மதியழகி

b)

மல்லிகை

c)

பறித்தாள்

d)

மலர்களைப்

96.

கீழ்க்காணும் வாக்கியங்களில் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

தம்பி தண்ணீர் குடித்தான்.

b)

அப்பா பழத்தைக் கடித்துச் சாப்பிட்டார்.

c)

அம்மா துணி வாங்கினார்.

d)

புகழ் பாடல் பாடினான்.

97.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

3 (எ,ஏ,யா)

b)

5 (எ, ஏ, யா, ஆ, ஓ)

c)

5 (அ, ஏ, எ, ஓ, ஆ)

98.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது ஒருமையைக் குறிக்கிறது?

a)

மலர்கள்

b)

வானவில்

c)

மக்கள்

d)

கப்பல்கள்

99.

சங்கர் கடைக்குச் ______________________.

a)

சென்றான்.

b)

சென்றது.

c)

சென்றாள்.

d)

சென்றனர்.

100.

அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

சிறுவன், பாடகன்

b)

சிருவன், பாடகர்

c)

சிறுவர், பாடகன்

d)

சிறுவர்கள், பாடகன்

101.

உன் பெயர் என்ன

a)

வினாக்குறி

b)

முற்றுப்புள்ளி

102.

ஆரஞ்சு எப்படி இருக்கும்

a)

வினாக்குறி

b)

முற்றுப்புள்ளி

103.

சூரியன் கிழக்கில் உதிக்கும்

a)

முற்றுப்புள்ளி

b)

வினாக்குறி

104.

அப்பா வேலைக்குச் சென்றார்

a)

முற்றுப்புள்ளி

b)

வினாக்குறி

105.

குன்று, ஆலயம் ,காடு

மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்?

a)

தொழிற்பெயர்

b)

காலப்பெயர்

c)

இடப்பெயர்

106.

கீழ்க்காண்பனவற்றுள் பண்புபெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சிறுவர்கள் ஓடி விளையாடினர்

b)

கேமரன் மலைப்பகுதி பசுமை நிறந்த இடமாகும்

c)

அமுதா சமைத்த உணவுதான் அது

107.

விஞ்ஞானி, ஆசிரியர், மருத்துவர்

போன்றவை________________________

a)

பொருட்பெயர்களாகும்

b)

தொழிற்பெயர்களாகும்

c)

சினைப்பெயர்களாகும்

108.

தொழிற்பெயரைக் குறிக்காத பெயரைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர்

b)

ஓடுதல்

c)

பாடுதல்

109.

தோன்றல் விகாரத்தில்_________________________________________.

a)

ஒர் எழுத்துப் புதிதாகத் தோன்றும்

b)

ஒரு சொல் புதிதாகத் தோன்றும்

c)

இரண்டு எழுத்துப் புதிதாகத் தோன்றும்

110.

க்

எந்த வகை மெய்யெழுத்தைக் குறிக்கிறது?

a)

மெல்லினம்

b)

இடையினம்

c)

வல்லினம்

111.

ஓர் ஆடு இலைகளைத் தின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எத்தனை உயிர் நெட்டெழுத்துகள் உள்ளன.

a)

2

b)

3

c)

0

d)

1

112.

திணை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

திணை மூன்று வகைப்படும்

b)

திணை இரண்டு வகைப்படும்

c)

மனிதர், தேவரைக் குறிப்பது அஃறிணையாகும்.

d)

ஆமை உயர்திணையாகும்.

113.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

114.

_________________ என்ற சொல்லின் முன் வருவது ஓர் உயிரெழுத்து ஆகும்.

a)

கடல் ஆமை

b)

இல்லம்

c)

சாட்டை

d)

மல்லிகை

115.

மேற்காணும் படத்திற்கு ஏற்ற தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.

a)

கட்டு

b)

குவியல்

c)

தோப்பு

d)

கும்பல்

116.

கொடுக்கப்பட்ட உரையாடலில் வண்ணமிடப்பட்டுள்ள சொல் உணர்த்தும் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.


ஆசிரியர் : நேற்று கொடுத்த வீட்டுப்பாடத்தைச்

செய்து முடித்து விட்டீர்களா?


மாணவன் : ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்

கையில் காயம் ஏற்பட்டு விட்டதால்

என்னால் எழுத முடியவில்லை.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

117.

பணம் + இல்லை

a)

பணமில்லை

b)

பணம்மில்லை

c)

பணவில்லை

118.

ஒரு + ஒரு

a)

ஓரொரு

b)

ஒவ்வொரு

c)

ஒவ்வோர்

119.

கண்டு + போனான்

a)

கண்டுப்போனான்

b)

கண்டு போனான்

c)

கண்ட போனான்

120.

வேலை + ஆள்

a)

வேலையாள்

b)

வேலைஆள்

c)

வேலைய்யாள்

121.

அ + படம்

a)

அபடம்

b)

அப்படம்

c)

அந்தப்படம்

122.

கண் + ஓட்டம்

a)

கண் ஓட்டம்

b)

கண்ணோட்டம்

c)

கண்ணொட்டம்

123.

வானமளந்தது- பிரித்து எழுதுக

a)

வானம் + அளந்தது

b)

வான்+அளந்தது

c)

வான்+மளந்தது

124.

உன் கடிதத்தைப் பெற்றேன்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

125.

நாங்கள் பேரங்காடி சென்றோம்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

126.

அவர்கள் காற்பந்து விளையாடுகிறார்கள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

127.

உமது பெயரை அறிவேன்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

128.

சிங்கம் மானை வேட்டையாடியது.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

129.

எழிலன்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

130.

யாம்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

131.

நீவிர்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

132.

சிறுவர்கள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

133.

சொற்றொடரைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


"நூலகம் சென்று புத்தகத்தை __________________."

a)

விதிமுறையைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

அமைதியாக வாசி

d)

இரவல் பெறு

134.

"நூலகத்தில்________________ ."

a)

விதிமுறைகளைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

அமைதியாக வாசி

d)

இரவல் பெறு

135.

" புத்தகங்களை அழகாக ___________________."

a)

விதிமுறைகளைக் கடைப்பிடி

b)

அடுக்கி வை

c)

இரவல் பெறு

d)

அமைதியாக வாசி

136.

ங், ஞ், ண், ந், ம், ன் எனும் எழுத்துகளின் வகைகளை இலக்கணம் எவ்வாறு அழைக்கின்றது?

a)

மெல்லினம்

b)

வல்லினம்

c)

இடையினம்

137.

"வாசலில் சாணம்__ மஞ்சள் தெளித்துக் கோலமிடுவர்."

a)

,

b)

.

c)

!

d)

?

138.

2. வாக்கியத்தில் படர்க்கை சொல்லைத் தெரிவு செய்க.


கந்தனும் அவனது நண்பர்களும் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

a)

பல்லாங்குழி

b)

கந்தனும்

c)

நண்பர்களும்

d)

அவனது

139.

பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.


மலேசிய மக்கள் __________ நாட்டில் ஒற்றுமை நிலவ பாடுபட வேண்டும்.

a)

தன்

b)

தாம்

c)

தங்கள்

d)

தாங்கள்

140.

தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அறிந்துக் கொண்டேன்.

b)

விட்டுச் சென்றார்.

c)

தைத் திங்கள்

d)

கன்றுக் குட்டி

141.

பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் யாது?

a)

புஷ்பம்

b)

ஐயை

c)

ஜாடி

d)

ஸர்பம்

142.

அப்பாவின் மகிழுந்தில் முன் இருக்கையில் அமர்ந்தேன். ________________மறவாமல் அணிந்து கொண்டேன். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

முகக்கவசம்

b)

பாதுகாப்புப் பட்டை

c)

தலைக்கவசம்

d)

பாதுகாப்பு வலை

143.

அங்கு + தங்கிய மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

a)

அங்குத் தங்கிய

b)

அங்கு தங்கிய

c)

அங்குத் தங்கி

144.

இங்கு + சொன்ன கருத்துகள் எங்களைக் கவர்ந்தன.

a)

இங்கு சொன்ன

b)

இங்குச் சொன்ன

c)

இங்கு சொன்னச்

145.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.

a)

ஆயினும்

b)

ஏனென்றால்

c)

ஏனெனில்

d)

இன்னும்

146.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?


மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

147.

முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.

a)

எழுவாய் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

c)

செயபடுபொருள் வேற்றுமை

148.

வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் குமார் ______ திட்டினார்.

a)

இன்

b)

c)

கு

149.

அரிச்சந்திரன் தன் வாழ்நாளில் பொய்யே பேசக்கூடாது என உறுதி கொண்டிருந்தான். ________ பல இன்னல்களுக்கு ஆளானான். _______ , உண்மையே பேசினான்.

a)

ஆகையால், ஆயினும்

b)

ஆகவே, அல்லது

c)

எனினும், அதற்காக

d)

ஏனென்றால், ஆகையால்

150.

கீழ்க்காணும் வாக்கியங்களில் மூன்றாம் வேற்றுமை உருபை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குணவதி கார்த்திகை திருநாளன்று அகல்விளக்குகளை ஏற்றினாள்.

b)

சிவபாலனின் ஓவியம் சிறந்த ஓவியத்திற்கான பரிசைத் தட்டிச் சென்றது.

c)

அப்பாவோடு கடைக்குச் சென்ற தங்கை, பனிக்கூழ் வேண்டும் என்று அடம்பிடித்தாள்.

d)

கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க குணாளன் கடுமையாகப் பயிற்சி செய்தான்.