wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

thirukkural 1

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அகர முதல ___________________ ஆதி

பகவன் முதற்றே உலகு


கோடிட்ட இடத்தை சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.

a)

கல்வி

b)

அதற்கு

c)

எழுத்தெல்லாம்

d)

கனியிருப்ப

2.

இனிய உளவாக இன்னாத கூறல்

_________________________________________


திருக்குறளின் இரண்டாம் அடியை தேர்ந்தெடுக.

a)

பகவன் முதற்றே உலகு

b)

காயிருப்பக் கனிகவர்ந் தற்று

c)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

d)

நிற்க அதற்கு தக

3.

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.


மேற்காணும் பொருளை உள்ளடக்கிய திருக்குறள் எது?

a)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

4.

மாணவன் : ஐயா, தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து எது ?


ஆசிரியர் : தம்பி, தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்து 'அ' எனும் எழுத்தாகும்.


மேற்கண்ட உரையாடல் குறிக்கும் திருக்குறள் எது?

a)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

5.

கற்க கசடறக் _______________ கற்றபின்

நிற்க அதற்குத் தக

a)

அகர

b)

உளவாக

c)

கற்பவை

6.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.


மேற்கண்ட குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்கள் எதனைக் குறிக்கின்றன?

a)

A. பொறாமை , பேராசை , கோபம் , துரோகம்

b)

B. கோபம் , பொறாமை , கடுஞ்சொல் , பேராசை

c)

C. பொறாமை , பேராசை , கோபம் , கடுஞ்சொல்

d)

D. கடுஞ்சொல் , பேராசை , துரோகம் , கோபம்

7.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.


____________________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

A. கற்றதனா பாய பயனின் கொல்

b)

B. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

c)

C. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

D. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

8.

முயற்சி திருவினை யாக்கும் _______

இன்மை புகுத்தி விடும்

a)

முயற்சி இன்மை

b)

முயற்றின்மை

c)

முயற்சியின்மை

d)

முயற்சி இல்லாமை

9.

கொடுக்கப்படும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


நன்கு கல்விகற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

d)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

10.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

b)

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது நீராகும்.

c)

விளைப்பவருக்குத் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

d)

மனிதர்களுக்குர் தக்க உணவுப் பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.