wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி கழகம்

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

இள வயதிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் _____________ இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.

a)

நோய் நொடி

b)

உயர்வு தாழ்வு

c)

கள்ளங் கபடு

2.

____________ நிறைந்த சகுனி பாண்டவர்களின் உடைமைகளைத் தந்திரமாக அபகரிக்க , அவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கும்படி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான்.

a)

அகமும் புறமும்

b)

கள்ளங் கபடு

c)

நாணிக் கோணி

3.

மகான்களின் ___________ கருணையூற்றாகவும் அப்பழுக்கற்றதாகவும் இருப்பதால் மக்கள் எந்நாளும் அவர்களை விரும்பி நாடிச் சென்று போற்றி மகிழ்கின்றனர்

a)

நாணிக் கோணி

b)

தங்கு தடை

c)

அகமும் புறமும்

4.

நல்ல இலட்சியத்தை அடைவதற்கு முனைந்த பின் எத்தகைய __________ ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது.

a)

சட்டத் திட்டம்

b)

கள்ளங் கபடு

c)

தங்கு தடை

5.

மக்களை அவர்களிடம் இருக்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு ________ பார்ப்பது அறியாமையாகும்.

a)

அகமும் புறமு

b)

உயர்வு தாழ்வு

c)

தங்கு தடை

6.

கோடை காலத்தில் மழை பெய்யாததாலும் பாய்ச்சுவதற்குப் போதிய நீர் இல்லாததாலும் செடிகொடிகள் __________ காணப்பட்டன.

a)

வாடி வதங்கி

b)

உள்ளும் புறமும்

c)

நாணிக் கோணி

7.

இன்றைய நவநாகரிக உலகிலும் கூட சில பெண்கள் புதியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் __________ முகம் சிவந்து பேசத் தடுமாறுவதைக் காணமுடிகிறது

a)

நாணிக் கோணி

b)

அகமும் புறமும்

c)

நோய் நொடி

8.

நாட்டின் பாதுகாப்புக் கருதி விதிக்கப்படும் _____________ மீறுபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர் என காவல்துறை அறிவித்துள்ளது.

a)

தங்கு தடை

b)

சட்டத் திட்டம்

c)

நோய் நொடி

9.

மஞ்சுவிரட்டு விளையாட்டில் வெற்றி பெற்ற இலைஞர்களோடு வேடிக்கைப் பார்த்த பொதுமக்களும் சேர்ந்து _____________ கொண்டாடினர்

a)

தங்கு தடை

b)

அகமும் புறமும்

c)

ஆடிப் பாடி

10.

தீபாவளிப் பண்டிகை காலத்தில் இந்துக்கள் வீட்டின் ____________ சுத்தம் செய்வார்கள்.

a)

உள்ளும் புறமும்

b)

தங்கு தடை

c)

அகமும் புறமும்

11.

பெற்ற பிள்ளைகளுக்குச் ______________________ சேர்ப்பதைவிட கல்வி செல்வத்தை

வழங்குவதே சிறப்பு.

a)

இரவு பகல்

b)

சொத்து சுகம்

c)

குற்றம் குறை

12.

_________________ ஓய்வில்லாமல் உழைத்து தம் குடும்பத்தைக் கரை சேர்த்தார் திரு

அன்பரசன்.

a)

ஆற அமர

b)

இரவு பகல்

c)

சொத்து சுகம்

13.

அகிலனும் நகுலனும் எப்பொழுதும் _________________________________ ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பர்.

a)

கீரியும் பாம்பும் போல

b)

கருடனைக் கண்ட பாம்புப் போல

c)

ஒளியைக் கண்டா இருள் போல

14.

தாயில்லாத குழந்தைகளைக் கவனித்து வந்த அந்தக் குடும்பத் தலைவர்.சாலை விபத்தில் இறந்ததும் அந்தக் குடும்பத்தினர் __________________________________ தவித்துப் போனர்.

a)

ஒளியைக் கண்ட இருள் போல

b)

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல

c)

கருடனைக் கண்ட பாம்பு போல

15.

அருளனைப் பற்றி அமுதன் இல்லாததும் பொல்லாததுமாக அவனது அம்மாவிடம் சொல்லி மாட்டிவிட்டான்.

a)

கை தவறுதல்

b)

இரண்டெட்டில்

c)

பற்ற வைத்தல்

16.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
17.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
18.
நனையும்படி + போட்டான் =
a)
நனையும்படிப் போட்டான்
b)
நனையும்படி போட்டான் 
19.
இசைக்கும்படி + கேட்டாள் =
a)
இசைக்கும்படி கேட்டாள்
b)
இசைக்கும்படிக் கேட்டாள்
20.
வினா எழுத்துகள் 5. அவை
a)
எ, ஏ, யா, ஆ, ஓ
b)
ஏ,யா, ஆ, அ, இ
c)
ஓ, ஏ, யா, ஈ, ஒ
d)
ஓ, ஒ,எ, ஏ, யா
21.
சேய்மைச் சுட்டு சொற்கள்....
a)
இங்கு
b)
அங்கு
c)
அவன்
d)
உங்கு
22.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
23.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது