wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TAHUN 6

Total questions: 50

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

கை + தொழில் =

a)

கைக்தொழில்

b)

கைதொழில்

c)

கைத்தொழில்

2.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
3.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

90

b)

126

c)

247

d)

18

4.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
5.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
6.
ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டறிக .
பூமி 
a)
பார் 
b)
கடவுள் 
c)
திங்கள் 
d)
மகிழ்ச்சி 
7.
'இன்னாச்சொல் ' என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
a)
பேராசை 
b)
கடுஞ்சொல் 
c)
கோபம்
d)
பேராசை 
8.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால் 
9.
கிரந்த எழுத்துகள் யாவை
a)
ஸர்ப்பம்
b)
பலர்
c)
புஷ்பம்
d)
காஜா
10.

1. கோடிடப்பட்டுள்ள இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


நேற்று கோலாலம்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகமான அடுக்குமாடி வீடுகள் நொடி பொழுதில் _________________ வென சரிந்து விழுந்தன

a)

மள மள

b)

மட மட

c)

கிடு கிடு

d)

A. தர தர

11.

ஏழை எளியோருக்கு ___________________ செய்து வந்த செல்வந்தர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்

a)

வரவு செலவு

b)

பேரும் புகழும்

c)

தான தருமம்

d)

அன்றும் இன்றும்

12.

தனவள்ளியின் தாயார் இறந்தபின் அவள் அவளுடைய சிற்றன்னையின் அரவணைப்பிலும் பாதுக்காப்பிலும் பராமரிக்கப்படுகிறாள்.


மேற்கண்ட கூற்றை விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க

a)

ஈடுகட்டுதல்

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கைக் கொடுத்தல்

d)

ஈவிரக்கம்

13.

கணவனின் அகால மரணத்திற்குப் பின் திருமதி.சங்கீதா பல துன்பங்களை எதிர்நோக்கினாள். தன் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தெடுக்கக் காலநேரம் பாராது உழைத்தாள். ஆயினும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கும்; பராமரிப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாள்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

d)

மலரும் மணமும் போல

14.

கராத்தே

துறையில் நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த மாஸ்டர்

பொன்னையாவின் புதல்வர்களான அறிவழகன், தென்னவன் ஆகியோரும்

கராத்தே கலையில் உலகளாவிய நிலையில் புகழ் பெற்றுள்ளனர்.

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

c)

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

d)

மீன் குஞ்சிக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

15.

இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க?

(i) மனம் (ii) தம்பி

(iii) கற்றல் (iv)மங்கை

a)

i,ii

b)

ii,iv

c)

i,ii,iv

d)

iii,iv

16.

சரியான மரபுவழக்குச் சொற்களைப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தை தெரிவு செய்க?

a)

கயல்விழி தோட்டதில் உள்ள பூக்களைப் பறித்தாள்.

b)

குயவன் மட்பாண்டங்களைச் செய்தான்.

c)

வேடன் அம்பை எய்தான்.

d)

கபிலன் ஏணியைப் பயன்படுத்தி வீட்டின் கூரைகளைச் சரி செய்தான்.

17.

சேர்த்தெழுதுக: இன்று + பார்த்தேன்=

a)

இன்று பார்த்தேன்

b)

இன்றுப் பார்த்தேன்

18.

பிரித்தெழுதுக: என்று புகழ்ந்தார்

a)

என்று + புகழ்ந்தார்

b)

என்றுப் + புகழ்ந்தார்

19.

நடுநிசியில் யாரோ தன் வீட்டுக் கதவை ____________ எனத் தட்டும் சத்தம் கேட்டு முத்து திடுக்கிட்டான்.

a)

சுடு சுடு

b)

தட தட

c)

கிடு கிடு

20.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க. பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக் கூடாது.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

c)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்

21.

உலகநீதிக்கேற்றச் சூழலைத் தேர்ந்தெடுக்கவும். போகாத விடந்தனிலே போக வேண்டாம்

a)

ஆசிரியரின் துணையுடன் கபிலன் நீச்சல் குளத்திற்குச் சென்றான்.

b)

பிரவின் படிக்காமல் திடலில் நண்பர்களுடன் விளையாடச் சென்றான்.

c)

கழிவு நீரைச் சுத்திகரிக்கும் இடத்தில் ஓர் அறிவுப்புப் பலகை உண்டு. அந்த ஆபத்தான இடத்திற்கு அகிலன் செல்வதைத் தவிர்த்தான்

22.

இராமன் தேர்வுக்காக _____________ பள்ளி பாடங்களைக் கண்ணும் கருத்துயாய்க் கற்றுத் தெளிந்தான்

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

c)

மேரும் புகழும்

23.

ஒரு சில மாதங்களே தேர்வுக்கு உள்ளன்.அதனை வீணில் கழித்து விட மாட்டேன்.

a)

கற்றது ஒழுகு

b)

ஓய்தல் ஒழி

c)

காலம் அழியேல்

24.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால் .....'' எனும் நல்வழி கூறும் கருத்துக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அள்ளி இறைத்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

கம்பி நீட்டுதல்

25.

கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.


மாலை வேளையில் வீசிய காற்று இதமாக இருந்ததால், யாமினி அதிக நேரம் கடற்கரையோரமாக நடந்தாள். *

a)

மாலை வேளையில்

b)

அதிக நேரம்

c)

இதமாக இருந்ததால்

d)

வீசிய காற்று

26.

ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

a)

பாடிய

b)

பாடும்

c)

பாடினான்

d)

பாடல்

27.

மாடியிலிருந்த மூவரும் அருகிலிருந்த நகரும் படிக்கட்டில் ______________ வந்தனர்.

a)

இறங்கு

b)

இறங்கிய

c)

இறங்கி

d)

இறங்கின

28.

எச்சம் என்றால் என்ன?

a)

முற்றுப்பெற்ற வினைச்சொல்

b)

வினைச்சொல்லுடன் பெயர்சொல் இணைதல்

c)

முற்றுப்பெறாத வினைச்சொல்

29.

ரவி கிழிந்த சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றான்.


மேற்காணும் வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

பள்ளிக்குச் சென்றான்

b)

கிழிந்த சட்டை

c)

சட்டையை அணிந்து

30.

பறவைகள் வானில் பறந்து திரிந்தன.


கோடிடப்பட்டச் சொல் குறிக்கும் எச்சம் எது?

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

31.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
32.
வகர உடம்படுமெய்யை ஏற்று வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
ஒவ்வொரு வெள்ளியும் அம்மா வாசலில் மாவிலை கட்டுவார்.
b)
மட்சட்டியில் சமைத்த உணவு சுவையாக இருந்தது.
c)
நீண்ட விடுமுறைக்குப் பின் மாறன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்.
d)
குழந்தை பஞ்சுமெத்தையில் உறங்கியது.
33.
‘அறம் செய விரும்பு’ எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?
a)
உடலினை இளைக்க வைக்கும் முயற்சி இழிவாகும்.
b)
எந்த வேலையுமின்றி வெறுமனே இருப்பது இழிவாகும்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்ள வேண்டும்.
d)
கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.
34.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல 
a)
மகிழ்ச்சி
b)
சோதனை
c)
தோல்வி
d)
துன்பம்
35.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும். 
a)
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
b)
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
c)
புத்திமான் பலவான்
d)
அழுத பிள்ளை பால் குடிக்கும்
36.
உயிர் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
37.
வேலுக்குக் காய்ச்சல் கண்டது.___________________அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
ஏனென்றால்
b)
ஆகையால்
c)
இருப்பினும்
d)
அல்லது
38.
சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி, வாக்கியத்தைத் தேர்வுச் செய்க.
a)
அது ஒர் அழகிய வீடு.
b)
அஃது ஓர் அழகிய வீடு.
c)
அது ஒரு அழகிய வீடு.
39.
பால்  + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
40.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
41.
கிராமத்து மக்கள் கூட்டுப்பணியின் போது வீட்டுக் கூரையின் மட்டையை ___________.
a)
அடுக்கினர்
b)
வைத்தனர்
c)
ஒட்டினர்
d)
வேய்தனர்
42.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் இயல்புப் புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது ?
a)
மரங்கண்டான் 
b)
காரவடை
c)
கண்காட்சி
d)
முட்செடி
43.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
a)
பொய்
b)
மனசாட்சிக்கு
c)
சொல்லக் கூடாது
d)
விரோதமாக
44.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி. சம்பந்தனார் ____________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அருமை பெருமை
b)
ஆடிப் பாடி
c)
அன்றும் இன்றும்
d)
பழக்க வழக்கம்
45.
புதரிலிருந்து ___________ என்ற ஓசையுடன் வெளியான பாம்மைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
a)
பள பள
b)
சர சர
c)
குடு குடு
d)
கடு கடு
46.
1)  கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.
a)
A) வேல்லை
b)
B)  வேலை
c)
C)  வேளை
d)
D)  வேழை
47.
1)  துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.
a)
A)  ஆகவே
b)
B)  எனவே
c)
A)  ஏனெனில்
48.
1)  பூப்பந்தாட்டப் போட்டியில் லி சோங் வேய் வெற்றி வாகை சூடிய செய்தியை அறிந்த மலேசிய மக்கள் _________________.
a)
A)  உச்சிக் குளிர்ந்தனர்
b)
B)  வெளுத்து வாங்கினர்
c)
C)  தட்டி கழித்தனர்
49.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர் 
b)
B) ஒரு , ஒரு 
c)
C) ஒரு , ஓர்
50.
 பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான பழமொழி எது?

குமரன் சாலையில் விளையாடினான்.
a)
A) ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
b)
B) புத்திமான் பலவான் 
c)
C) இளங்கன்று பயமறியாது
d)
D) மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?