wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

2.

சரியான எச்சத்தைத் தெரிவு செய்க


தேடி அலைந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

3.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

4.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

5.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

6.

கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.


செய்தி 1 :

கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.


செய்தி 2 :

ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

a)

இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்

b)

ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்

c)

இயல்வது கரவேல், அறம் செய விரும்பு

7.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

8.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.


படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு

a)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

கல்விக் கழகு கசடற மொழிதல்

9.

பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

ஒளவியார்

b)

சமண முனிவர்

c)

பாரதியார்

d)

குமரகுருபர சுவாமிகள்

10.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடருவேன்.

a)

முழு மூச்சு

b)

முயல் கொம்பு

c)

கண்ணும் கருத்தும்

d)

கங்கணம் கட்டுதல்

11.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நல்லவர்

b)

மூடர்

c)

உறவினர்

d)

நண்பர்

12.

இவற்றுள் எது தொழிற்பெயர்?

a)

கிளை

b)

வரைதல்

c)

நாளை

13.

வந்த பையன்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

14.

புதுமை + ஆடை =

a)

புது ஆடை

b)

புத்தாடை

c)

புதுமை ஆடை

d)

புதுமையாடை

15.

பெருமை + அரசர் =

a)

பேரரசர்

b)

பெரிய அரசர்

c)

பெரும் அரசர்

d)

பெருமையரசர்

16.

வண்மை + தமிழ் =

a)

வண்மைதமிழ்

b)

வண்டமிழ்

c)

வண்தமிழ்

d)

வதமிழ்

17.

பெருமை + ஆசிரியர் =

a)

பெரிய ஆசிரியர்

b)

பேருமையாசிரியர்

c)

பெருமாசிரியர்

d)

பேராசிரியர்

18.

அந்தச் சிற்பியின் ____________சிற்பம் மக்களை மிகவும் கவர்ந்தது.

a)

அழகிய

b)

அழகுற

c)

அழகான

d)

அழகாக

19.

தோட்டத்தில் பூத்திருந்த அந்த அழகிய ரோஜா மலரைத் தங்கை பறித்துத் __________ தலையில் சூடினாள்.

a)

தன்

b)

தன்னுடைய

c)

தமது

d)

தனது

20.

மிகச் சரியான நிறுத்தக் குறிகளைக் கொண்ட வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

நேற்று நீ எங்குச் சென்றாய் !

b)

பாண்டியன் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறான் ?

c)

கண்ணன் கடையில் அரிசி, சீனி, உப்பு போன்றவற்றை வாங்கினான்.

d)

ஐயோ. என் கால் வலிக்கிறதே.