wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Thirukkural

Total questions: 7

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ்சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

2.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

______________________________________.

a)

உயிரினும் ஓம்பப் படும்.

b)

நாவினாற் சுட்ட வடு.

c)

இன்மை புகுத்தி விடும்.

3.

எது படத்திற்குப் பொருத்தமான குறள்?

a)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

b)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

c)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

4.

__________________________________________________

இன்மை புகுத்தி விடும்.

a)

கற்றதனா லாய பயனெங்கொல் வாலறிவன்

b)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

c)

முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை

5.

குமரன் தினமும் பல நல்ல நூல்களை விரும்பிப் படிப்பான். அவன் படிப்பதோடு மட்டுமல்லாமல் படித்ததை வாழ்க்கையில் கடைபிடித்து வந்தான். இதனால், இன்று அவன் வாழ்க்கையில் சிறந்த நிலையில் இருக்கிறான்.

a)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் ந்பது இழுக்கு.

6.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.


புண்ணுடையர் என்பவர் யார்?

a)

படித்தவர்கள்

b)

நோயாளிகள்

c)

கல்லாதவர்கள்

7.

இவர்தான் தொழிலதிபர் ஜாக் மா. இவர் குறுகிய காலத்தில் தமது விடாமுயற்சியினால் வெற்றி பெற்றவர்.


இக்கூற்றுக்கு ஏற்ற குறள் யாது?

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

b)

முயற்சி திருவினை யாக்கும் முயன்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

c)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.