wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் (a)   வென ஆட்டம் கண்டன.

2.

கடும் பனியில் மாட்டிக் கொண்ட அறிவழகிக்குக் குளிர் அதிகமானதால் அவள் உடல் (a)   வென நடுங்கியது.

3.

(a)   வென விலைவாசி ஏற்றம் கண்டதால் பல ஏழை மக்கள் பொருட்கள் வாங்க பணமின்றித் தவித்தனர்.

4.

திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

______________________________________________________

a)

செயற்கரிய செய்கலா தார்

b)

தீயினும் அஞ்சப் படும்

c)

செயற்கரிய செய்க லாதார்

d)

செயற்கரிய செய் கலாதார்

5.

புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

இலைமறை காய் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

d)

மலரும் மணமும் போல

6.

திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது

a)

கிணற்றுத் தவளை

b)

முழுமூச்சு

c)

தெள்ளத் தெளிதல்

d)

முயக் கொம்பு

7.

மரபுத் தொடரின் பொருளை தேர்வு செய்க


நாக்கு நீளுதல்

a)

அதிகம் பேசுதல்

b)

மகிழ்ச்சியாகப் பேசுதல்

c)

வரம்பு மீறிப் பேசுதல்

d)

பொய் பேசுதல்

8.

கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.

a)

எலியும் பூனையும் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

மலரும் மணமும் போல

d)

காட்டுத் தீ போல

9.

அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

a)

A. சுற்றும் முற்றும்

b)

B. அன்றும் இன்றும்

c)

C. தாயும் சேயும்

d)

D. கல்வி கேள்வியும்

10.

1. ‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

B. பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

C. குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

D. முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

11.

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

இயல்வது கரவேல்

a)

பேசக்கூடாது

b)

நினைக்கக்கூடாது

c)

பாடக்கூடாது

d)

மறைக்கக்கூடாது

12.

வசந்தி எப்பொழுதும் தன் வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களைப் பற்றி வகுப்பில் தற்பெருமையாகப் பேசுவாள்.


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான செய்யுளடி யாது?

a)

உடையது விளம்பேல்

b)

ஊக்கமது கைவிடேல்

c)

எண்ணெழுத் திகழேல்

d)

ஓதுவதொழியேல்

13.

உதயனுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆகவே, அவன் அனைவரிடமும் நெருங்கிப் பழக மாட்டான்.

a)

சரி

b)

தவறு

14.
  1. எறும்புகள் சிறிய உடல் அமைப்பைக் கொண்டுள்ளன; எனினும் சுறுசுறுப்பு மிகுந்த உயிரினமாகும்.
a)

சரி

b)

தவறு

15.

நேற்று அக்காள் வந்தாள். நேற்று மாமா வந்தார்.

a)

நேற்று அக்காள் மாமா வந்தனர்.

b)

நேற்று அக்காளும் மாமாவும் வந்தனர்.

16.

உனக்குச் சிறுவர் கதைகள் பிடிக்குமா?

உனக்கு மரம நாவல் பிடிக்குமா?

a)

உனக்குச் சிறுவர் கதைகளும் மரம நாவலும் பிடிக்குமா?

b)

உனக்குச் சிறுவர் கதைகள் பிடிக்குமா அல்லது

மரம நாவல் பிடிக்குமா?

c)

உனக்குச் சிறுவர் கதைகள் பிடிக்குமா எனினும்

உனக்கு மரம நாவல் பிடிக்குமா?

17.

நாம் எப்போது தவறு செய்வோம் என்று எதிரிகள் காத்திருக்கின்றனர். __________, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

a)

ஆகவே

b)

ஏனென்றால்

c)

உம்

18.

குன்று, ஆலயம் ,காடு

மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்?

a)

தொழிற்பெயர்

b)

காலப்பெயர்

c)

இடப்பெயர்

19.

விஞ்ஞானி, ஆசிரியர், மருத்துவர்

போன்றவை________________________

a)

பொருட்பெயர்களாகும்

b)

தொழிற்பெயர்களாகும்

c)

சினைப்பெயர்களாகும்

20.

உண்டான்

கொடுக்கப்பட்ட சொல்லுக்கேற்ற காலத்தைத் தேர்ந்தெடுக.

a)

எதிர்காலம்

b)

நிகழ்காலம்

c)

இறந்தகாலம்

21.

மறுநாள் தாங்கள் புதிய வீட்டிற்குச் செல்லவிருப்பதாக கயல்விழி கூறினாள்


இவ்வாக்கியம் ____________________ வாக்கியமாகும்.

a)

அயற்கூற்று

b)

நேர்க்கூற்று

c)

செய்வினை

22.

கதிரவன் பல் துலக்கினான்.

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

d)

கெட்ட காலம்

23.

இவற்றில் எது நிகழ்கால வாக்கியம்?

a)

எதிர்வரும் குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பர்.

b)

வளர்மதி பட்டிமன்றத்தில் முதல் பரிசு பெற்றாள்.

c)

பூங்கொடி நாளை நடக்கவிருக்கும் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற மீள்பார்வை செய்கிறாள்.

24.

இவற்றுள் எவை நாம் படித்த காலங்களில் இடம்பெறவில்லை?

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

நல்ல காலம்

d)

எதிர்காலம்

25.

நகுலன் கடைக்குச் சென்றான். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?

a)

நிகழ்காலம்

b)

இறந்த காலம்

c)

எதிர்காலம்

d)

எதிர்த்த காலம்

26.

பிரித்தெழுதுக மை

a)

ம் +அ

b)

ம் + ஓ

c)

ம்+ ஐ

27.

வல்லின எழுத்துகளைத் தேர்ந்தெடுக.

a)

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

க,ச,ட,த,ப,ற

c)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

d)

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

28.

ஒரு வாக்கியத்தில் செயலைக் குறிப்பது _______________________

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

பெயரடை

d)

செயப்படுபொருள்

29.

சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.


மாரி

a)

கனவுந்து

b)

வண்டி

c)

மழை

30.

ஆசிரியர் ஆற்றிய __________________அனைவரும் ஆர்வமுடன் கேட்டனர்.

a)

உரையை

b)

உறையை