wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

2.

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

கோடிட்ட சொல்லின் பொருள் :

a)

துன்பம்

b)

இன்பம்

3.

உலகநீதியை நிறைவு செய்க.


சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.

a)

தேட

b)

பாட

4.

சினம் என்பதன் பொருள்:

a)

கோபம்

b)

கவலை

5.

சினந்திருந்தார் என்பதன் பொருள் :

a)

கோபங்கொள்ளாதவர்

b)

கோபங்கொண்டோர்

6.

கோடிட்ட இடத்தை நிறைவு செய்க.

சினந்திருந்தார் ............... சேறல் வேண்டாம்.

a)

பாதைவழிச்

b)

வாசல்வழிச்

7.

சேறல் வேண்டாம் என்பதன் பொருள் என்ன?

a)

போக வேண்டாம்.

b)

போக வேண்டும்.

8.

இவ்விரு உலகநீதியும் எதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது?

a)

கவலை

b)

மகிழ்ச்சி

c)

கோபம்

9.

சினம் கொண்டால் வருத்தப்பட நேரிடும்.

a)

ஆம்

b)

இல்லை

10.

கோபம் கொள்பவரிடம் பழகுவது நல்லது.

a)

ஆம்

b)

இல்லை

11.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

12.

சரியான பெயரடையைத் தெரிவு செய்க

a)

நீளமான ஆறு

b)

அருமையாகப் பாடினார்

c)

வேகமாக நடந்தாள்

d)

நன்றாகப் பேசினார்

13.

பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

இவ்யாழ்

b)

மென்றுத் தின்றான்

c)

கற்றூண்

d)

பூஞ்சோலை

14.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

15.

ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

அதிவீரராம பாண்டியன்

c)

உலகநாத பண்டிதர்

d)

பாரதியார்

16.

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனும் திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.

a)

கற்றனைத் தூறும் அறிவு.

b)

நிற்க அதற்குத் தக.

c)

என்புதோல் போர்த்த உடம்பு.

d)

உயிரினும் ஓம்பப் படும்.

17.

படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

காட்டுத் தீ போல

c)

நகமும் சதையும் போல

d)

எலியும் பூனையும் போல

18.

சரியானவற்றைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு

b)

பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா

c)

ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்

d)

பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை

19.

கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
20.

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


கோரனி நச்சுச் தொற்றின் தாக்கம் அடுத்த வருடம் வரை நீடிக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

a)

கோரனி

b)

வருடம்

c)

சுகாதார அமைப்பு

d)

உலக

21.

காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் _________ திறமையை வெளிப்படுத்தினர்.

a)

தன்

b)

தம்

c)

அவர்கள்

d)

தன்னுடைய

22.

கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

23.

வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு சரியான இடத்தைத் தெரிவு செய்க.


மன்னா, என் நிலைமையைக் கூறிவிட்டேன். இனி தங்களின் தீர்ப்பு எதுவானாலும் அடியேன் ஏற்றுக்கொள்கிறேன்.

a)

தன்மை, படர்க்கை

b)

முன்னிலை, தன்மை,

c)

படர்க்கை, முன்னிலை

d)

தன்மை, முன்னிலை

24.

கீழ்க்கண்ட செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெர்வு செய்க.


தெனாலி இராமனின் புத்திசாலித்தனம் அரசரைப் பெரிதும் ஈர்த்தது.

a)

அரசரின் புத்திசாலித்தனம் தெனாலி இராமனால் பெரிதும் ஈர்க்கப்பட்டது.

b)

அரசர் தெனாலி இராமனின் புத்திசாலித்தனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

c)

அரசர் தெனாலி இராமனைப் பெரிதும் ஈர்த்தார்.

d)

தெனாலி இராமனின் புத்திசாலித்தனத்தை அரசர் பெரிதும் ஈர்த்தார்.

25.

கணினியின் வருகையால் மனிதன் பல நன்மைகள் அடைந்துள்ளான். __________ தவறாகப் பயன்படுத்தினால் நமக்குத் தீமை விளைவது திண்ணம்.

a)

ஆனால்

b)

எனவே

c)

இருப்பினும்

d)

அல்லது

26.

செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டு வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அம்மா தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்தார்.

a)

தீபாவளிக்கு அம்மாவால் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.

b)

அம்மாவால் தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.

c)

சுவையான அணிச்சல் தீபாவளிக்கு அம்மாவால் செய்யப்பட்டது.

d)

தீபாவளி சுவையான அணிச்சல் அம்மாவால் செய்யப்பட்டது.

27.

ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது?

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

c)

தனி வாக்கியம்

d)

தொடர் வாக்கியம்

28.

திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.


கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெர்வு செய்க

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

c)

புத்திமான் பலவான்

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே

29.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

_______________________________________

a)

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

மாடல்ல மற்ற யவை

c)

தீமை இலாத சொலல்

d)

தீயினும் அஞ்சப் படும்

30.

“ தேவா, கவலைப்படாதே. அக்கறையுடன் நீ பயிற்சிகளை மேற்கொண்டால் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.”


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

வருந்தினால் வாராதது எதுவும் இல்லை

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

d)

நிறைகுடம் தளும்ப்பாது.

31.

பணக்காரர்களுக்கானச் சிறப்பு, சுற்றியுள்ள உறவினர்களை ஆதரித்தல் ஆகும்.


மேற்கண்ட விளக்கத்திற்கு ஏற்ற வெற்றி வேற்கை யாது?

a)

தந்த சொல் மிக்க மந்திரம் இல்லை

b)

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.

c)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

32.

அனைத்து செல்வங்களைவிட அழியாத செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமே.


மேற்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெர்வு செய்க.

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

மாடல்ல மற்றை யவை

33.

கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது

a)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

b)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

c)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

d)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.

34.

கோறனி தொற்றால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், சில தரப்பினர்கள் பொய் தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.


இச்சூழலுக்குப் பொருந்தாத உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இலைமறை காய்போல

c)

காட்டுத் தீ போல

35.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

36.

அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புள்ள திருக்குறளைத் தேர்ந்தெடு.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

37.

எ + யானை =


சேர்த்தெழுதுக

a)

ஏயானை

b)

எய்யானை

c)

எவ்வானை

d)

எவ்யானை

38.

உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடு


மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

a)

பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது

b)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்

c)

மனம் போகும் வழியெல்லாம் போக வேண்டும்

d)

மனம் போல பொய் சொல்ல வேண்டாம்

39.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.

a)

கை கூடுதல்

b)

ஈவிரக்கம்

c)

கரைத்துக் குடித்தல்

d)

தட்டிக் கழித்தல்

40.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

41.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி


எனத் தொடங்கும் செய்யுளில் எந்த ஐம்பூதம் முதலாகக் குறிக்கப்படுகிறது?

a)

காற்று

b)

ஆகாயம்

c)

நிலம்

d)

நீர்

42.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

43.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தைத் தம்பி எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.

a)

கரைத்துக் குடித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

d)

கையும் களவுமாய்

44.

இடுக்கண் எனும் சொல்லின் பொருளைக் கண்டறி.

a)

இடுங்கிய கண்

b)

இன்பம்

c)

துன்பம்

d)

இரண்டு கண்

45.

சேர்த்தெழுதுக.


உள் + பூசல்

a)

உள்பூசல்

b)

உல்பூசல்

c)

உட்பூசல்

d)

உப்பூசல்