wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 112

Worksheet time: 56mins

Name
Class
Date
1.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

2.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

3.

ஐயோ! கால் வலிக்கிறதே!

மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

4.

சரியான எச்சத்தைத் தெரிவு செய்க


தேடி அலைந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

5.

சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக


உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.

a)

எழுந்த

b)

எழுதிய

c)

எழுதும்

d)

எழுத்து

6.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

7.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

8.

ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.

a)

கு , ஓடு

b)

இல் , உடன்

c)

ஐ , ஓடு

d)

இல் , கு

9.

மாணவர்கள் யாழ் பயிற்சி நூல்களை நேற்று _____________.

a)

வாங்கும்

b)

வாங்கினர்

c)

வாங்குகின்றனர்

d)

வாங்குவோம்

10.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

11.

பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

சலசல

b)

மளமள

c)

தகதக

d)

மடமட

12.

திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.

_____________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

b)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

c)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

d)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

13.

ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

b)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

c)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

d)

நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

14.

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

a)

துன்பத்தால் மனம் உருகுதல்

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

c)

ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை

15.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

புதிய ஆத்திசூடி

d)

வெற்றிவேற்கை

16.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

17.

சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.

a)

இலைமறை காய் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

காட்டுத் தீ போல

18.

விடா முயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.


எனக் கூறும் செய்யுள் எது?

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

19.

கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


சர் சீ.வி. இராமன் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் அறிவியல் பாடத்தை ________________ ஒரு மாமேதை.

a)

ஓட்டை வாயனான

b)

கரைத்துக் குடித்த

c)

காது குத்திய

d)

அள்ளி இறைத்த

20.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஒற்றுமை வலிமையாம்

c)

ஊண்மிக விரும்பு

d)

உடலினை உறுதிசெய்

21.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

22.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

தொண்ணூறு

b)

எழுபத்து இரண்டு

c)

நூற்று இருபத்து ஆறு

d)

இருநூற்று நாற்பத்து ஏழு

23.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

24.

வண்ணமிடப்பட்ட சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

25.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

26.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

27.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

28.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

ஆகவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

29.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
30.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .

31.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.


கோவிட் பெருந்தொற்று காரணமாக விடுமுறையில் இருந்த மாணவர்கள் புலனத்தில் கொடுக்கப்பட்ட படங்களைக் கவனமாகச் செய்தனர்.

a)

கோவிட் பெருந்தொற்று

b)

விடுமுறை

c)

மாணவர்கள்

d)

கவனம்

32.

a)

A

b)

B

c)

C

d)

D

33.

a)

A

b)

B

c)

C

d)

D

34.

a)

A

b)

B

c)

C

35.

a)

A

b)

B

c)

C

d)

D

36.

a)

A

b)

B

c)

C

d)

D

37.

a)

A

b)

B

c)

C

d)

D

38.

a)

A

b)

B

c)

C

d)

D

39.

a)

A

b)

B

c)

C

d)

D

40.

a)

A

b)

B

c)

C

41.

a)

A

b)

B

c)

C

d)

D

42.

a)

A

b)

B

c)

C

43.

a)

A

b)

B

c)

C

d)

D

44.

a)

A

b)

B

c)

C

d)

D

45.

a)

A

b)

B

c)

C

d)

D

46.

a)

A

b)

B

c)

C

d)

D

47.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

தெய்வத்துள் வைக்கப் படும்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

48.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.

a)

முழு மூச்சு

b)

முயல் கொம்பு

c)

கண்ணும் கருத்தும்

d)

கங்கணம் கட்டுதல்

49.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?

a)

கண்ணும் கருத்தும்

b)

கரடு முரடு

c)

சுற்றும் முற்றும்

d)

தான தர்மம்

50.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நல்லவர்

b)

மூடர்

c)

உறவினர்

d)

நண்பர்

51.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

a)

குறையான சொற்கள்

b)

தீமை பயக்கும் சொற்கள்

c)

நன்மை பயக்கும் சொற்கள்

d)

இனிமை பயக்கும் சொற்கள்

52.

படம் உணர்த்தும் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

ஐயம் புகினும் செய்வனச் செய்

53.

படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

ஓய்தல் ஒழி

c)

ஊண்மிக விரும்பு

d)

ஏற்பது இகழ்ச்சி

54.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

a)

நண்பர்கள்

b)

பணக்காரர்கள்

c)

சகோதரர்கள்

d)

உறவினர்கள்

55.

ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

a)

பேரும் புகழும்

b)

பழக்க வழக்கம்

c)

பேரும் புகழும்

d)

இன்ப துன்பம்

56.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

b)

நீதிநெறி - ஔவையார்

c)

நல்வழி - குமரகுருபர சுவாமிகள்

d)

வாக்குண்டாம் - பாரதியார்

57.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

நகமும் சதையும் போல

d)

காட்டுத் தீ போல

58.

ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சங்கரன் ஓர் ஏழை குடியானவன். தன்னை நாடி வருவோர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

அறம் செய விரும்பு

c)

இயல்வது கரவேல்

d)

உடையது விளம்பேல்

59.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

மேடு பள்ளம்   -  சமமான நிலப்பகுதி

b)

அங்கும் இங்கும்  -  சில இடங்களில்

c)

அரை குறை  -  முழுமை பெறாத நிலை  

d)

மூலை முடுக்கு  -  எவ்விடத்திலும்

60.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

61.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

b)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

d)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

62.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

63.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.

a)

ஆயினும்

b)

ஏனென்றால்

c)

ஏனெனில்

d)

இன்னும்

64.

கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?


அ, இ , உ

a)

வினா எழுத்து

b)

மெய் எழுத்து

c)

நெட்டெழுத்து

d)

சுட்டெழுத்து

65.

வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.


_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.

a)

மீனவர், ஆறு, மீன்களைப்

b)

மீனவரது, ஆற்றை, மீனைப்

c)

மீனவர், ஆற்றில், மீன்களைப்

d)

மீனவரின், ஆற்றில், மீனுக்குப்

66.

கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.


I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

a)

I, II, IV, III

b)

I, IV, III, II

c)

I, II, III, IV

d)

II, I, III, IV

67.

தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

கல் + தூண் = கற்றூண்

b)

கண் + இமை = கண்ணிமை

c)

செம்மை + கோல் = செங்கோல்

d)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

68.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?


மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

69.

சரியான இரண்டு செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

கவிதை தேவியால் பாடப்பட்டது.

b)

அந்த ஓவியம் கவினால் வரையப்பட்டது.

c)

விஷால் பள்ளிப் போட்டி விளையாட்டில் கலந்து கொண்டான்.

d)

அம்மா சந்தைக்குச் சென்று பழங்கள் வாங்கி வந்தார்.

70.

கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்

a)

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.

b)

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

c)

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.

d)

நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.

71.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)


சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

72.

மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

73.

கீழ்க்காணும் படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

74.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க.

தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல்

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்

c)

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

d)

ஈசன் எந்தை இணைய்டு நீழலே

75.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?

b)

சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?

c)

நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?

d)

உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?

76.

கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.


வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

a)

தேடிச் சென்றான்

b)

மூச்சுப் பயிற்சி

c)

போய்ப் பார்த்தான்

d)

பட்டுப் புடவை

77.

கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.


செய்தி 1 :

கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.


செய்தி 2 :

ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

a)

இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்

b)

ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்

c)

இயல்வது கரவேல், அறம் செய விரும்பு

78.

உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

c)

ஒருவரை போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.

79.

கீழ்க்காணும் கவிதைக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஏவா மக்கள் மூவா மருந்து

80.

வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.


பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.

a)

திரு திரு, தக தக

b)

தக தக, திரு திரு

c)

திரு திரு, தர தர

81.

கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


பல நாட்களாக ஊண் உறக்கம் இல்லாமல் பணி புரிந்த திரு இரமணி ........ காணப்பட்டார்.

a)

அங்கும் இங்கும்

b)

உருண்டு திரண்டு

c)

அல்லும் பகலும்

d)

எலும்பும் தோலுமாக

82.

சிலாம்புசெல்வன் சிறு வயதிலிருந்து முழுக்கவனத்துடன் கல்வி கற்று, இன்று மருத்துவத் துறையில் பட்டதாரியாகி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளான்.

a)

கண்ணும் கருத்துமாக

b)

செவி சாய்த்தல்

c)

கிணற்றுத் தவளை

d)

நாக்கு நீளுதல்

83.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.


படிப்பது அவசியம். ஆனால், பிழையில்லாமல் பேசும்போதுதான் படித்தக் கல்விக்கு மதிப்பு

a)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

கல்விக் கழகு கசடற மொழிதல்

84.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.

a)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

இளங்கன்று பயமறியாது

85.

படத்திற்குப் பொருந்தும் திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

b)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருக்கக் காய்கவர்ந் தற்று

c)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதில்லார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

86.

பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

ஒளவியார்

b)

சமண முனிவர்

c)

பாரதியார்

d)

குமரகுருபர சுவாமிகள்

87.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

முன் வைத்த காலைப் பின் எடுக்காதே

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

d)

தனிமரம் தோப்பாகாது

88.

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தனிம்மரம் தோப்பாகாது

b)

தனிமரம் தோப்பாகா

c)

தனிமரம்தோப்பாகாது

d)

தனிமரம் தோப்பாகாது

89.

'அவனன்றி ஓரணுவும் அசையாது'

மேற்காணும் பழமொழியின் கருப்பொருள் யாது?

a)

மனிதனின் பேராற்றல்

b)

கடவுளின் பேராற்றல்

c)

உலகின் பேராற்றல்

90.

மேற்காணும் படம் எந்தப் பழமொழியைக் குறிக்கிறது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

d)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

91.

கோடிட்ட சொல்லின் வேறொரு பொருளைக் கண்டறிக.


அவனன்றி ஓரணுவும் அசையாது

a)

இறைவன்

b)

ஆழி

c)

நதி

d)

கணினி

92.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


கடவுள் நம்பிக்கை கொண்டிராத குமரன், தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்த பொழுது இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தித்தான்.

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்

d)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

93.

கீழ்க்காணும் சூழல் அடிப்படையாகக் கொண்ட பழமொழியைத் தெரிவு செய்க.


உறவினர்களுடனும் தோழர்களுடனும் சண்டையிட்டு அவர்களிடமிருந்து பிரிந்த கனியமுதன், வெளிநாட்டிற்குச் சென்று தனிமையில் வாடினான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

முன் வைத்தக் காலைப் பின் வைக்காதே

d)

அவனன்றி ஓரணுவும் அசையாது

94.

மேற்காணும் படத்தை மையமாகக் கொண்டுள்ள பழமொழி யாது?

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது

d)

தனிமரம் தோப்பாகாது

95.

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?


பொருள்: ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை


மேற்காணும் இணை சரியா?

a)

சரி

b)

தவறு

96.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?


பொருள்: உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.


மேற்காணும் இனை சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

97.

கேள்வி 21 அ)

சரியான கூற்றை மட்டும் அடையாளமிடுக.

a)

உயிரெழுத்துகள் - 12

b)

உயிர்க்குறில் - 7

c)

மெய்யெழுத்துகள் - 18

d)

ஆய்த எழுத்து - 2

98.

கேள்வி 21 ஆ)


ஊக்கமது ...........

ஊண்மிக ...........

a)

விரும்பு

b)

இகழ்ச்சி

c)

கைவிடேல்

d)

பேசேல்

99.

கேள்வி 21 அ)

வாக்கியங்களை வகைப்படுத்துக.


  1. கனத்த மழையால் பினாங்கில் வெள்ளம் ஏறியது.
  2. நம் நாட்டின் முதல் பிரதமர் யார்?
  3. ஐயோ! கால் வலிக்கிறதே!
a)

கட்டளை வாக்கியம், வேண்டுகோள் வாக்கியம், செய்தி வாக்கியம்

b)

செய்தி வாக்கியம், வினா வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

c)

செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

100.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களின் ............. நிகழ்ச்சி பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது.

a)

நன்மை தீமை

b)

ஆடல் பாடல்

101.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பில் கேட்ஸ் ........... உழைத்ததால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரராகத் திகழ்கிறார்.

a)

நன்மை தீமை

b)

அல்லும் பகலும்

c)

எலும்பும் தோலுமாய்க்

102.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


டிங்கிக் காய்ச்சல் கண்டதால் சிவாவின் உடல் ............. காணப்பட்டது.

a)

எலும்பும் தோலுமாய்க்

b)

நன்மை தீமை

c)

அல்லும் பகலும்

103.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


(.............................) ஓர் அழகிய கிராமம்.

a)

அது

b)

அஃது

104.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


ஆசிரியர் பணி (.............................) அறப்பணி.

a)

ஓர்

b)

ஒரு

105.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் காக்க வேண்டியது இளைஞர்களின் கடமை என பிரதமர் (.............) உரையில் கூறினார்.

a)

தன்

b)

தம்

106.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

................................................................................................

a)

தெய்வத்துள் வைக்கப் படும்.

b)

யாண்டும் இடும்பை இல.

c)

உயிரினும் ஓம்பப் படும்.

107.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

................................................................................................

a)

யாண்டும் இடும்பை இல

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

உயிரினும் ஓம்பப் படும்

108.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


குமரனும் விமலனும் ஏறியில் மீண் பிடித்தனர்.

a)

ஏறியில்

b)

மீண்

c)

பிடித்தனர்

d)

குமரனும் விமலனும்

109.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


வாழைப்பழத் தோள் வழுக்கி சிறுவன் கீலே விழுந்தான்.

a)

வாழைப்பழத்

b)

தோள்

c)

வழுக்கி

d)

கீலே

110.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


அடுத்த சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் நிளையை வெள்ளும்.

a)

நிளையை

b)

வெள்ளும்

c)

விளையாட்டுப் போட்டியில்

d)

மலேசியா

111.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

a)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவர்.

b)

அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.

112.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

a)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

b)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.