wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 திணை

Total questions: 57

Worksheet time: 1hrs 18mins

Name
Class
Date
1.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

a)

90

b)

126

c)

247

d)

18

2.

வினா எழுத்துகள் 5. அவை

a)

எ, ஏ, யா, ஆ, ஓ

b)

ஏ,யா, ஆ, அ, இ

c)

ஓ, ஏ, யா, ஈ, ஒ

d)

ஓ, ஒ,எ, ஏ, யா

3.

திணை என்பது ------------

a)

அப்பா

b)

வகுப்பு

c)

உயர்திணை

d)

அஃறிணை

4.

பறவை வானத்தில் பறந்தது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

5.

வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை எதிநோக்கிய அலி மிகவும் வறுமையில் வாடினான். தக்கச் சமயத்தில் சீலன் அவனுக்குத் தன்னால் முடிந்தவரை __________.

a)

கங்கணம் கட்டினான்

b)

ஒரு கை பார்த்தான்

c)

தோள் கொடுத்தான்

d)

உச்சிக் குளிர்ந்தான்

6.

ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 7 ஏக்கள் பெற்றான்

a)

சிலை மேல் எழுத்து போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

இலைமறை காய் போல

d)

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

7.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

a)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஆர் எனின்

b)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

c)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

8.

சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

சிறுகக் கட்டிப் பெருக வாழ்

c)

சிக்கனம் சீரளிக்கும்

d)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

9.

சிவா சோதனைக்குப் படிக்காமல் __________ அவனால் சிறந்த புள்ளிகளைப் பெற முடியவில்லை.

a)

காது குத்தியதால்

b)

முட்டு

க்கட்டையானதால்

c)

தட்டிக் கழித்ததால்

d)

மனப்பால் குடித்ததால்

10.

கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.

a)

ஓய்தல் ஒழி

b)

ஔடதம் குறை

c)

உடலினை உறுதி செய்

d)

ஐம்பொறி ஆட்சிக்கொள்

11.

பாரதிதாசன் தமிழ் மீது ஆர்வங்கொண்டவராய் இருந்தார். (a)   ஆவர் தமிழின் சிறப்பைக் கவிதைகளாய்ப் வடித்துப் பாடி , பேரும் புகழும் அடைந்தார்.

12.

திணை _______ வகைப்படும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

13.

சரியான திணையைத் தெரிவு செய்க


மலேசிய கொடி

a)

அஃறிணை

b)

உயர்திணை

14.

சரியான திணையைத் தெரிவு செய்க

a)

உயர்திணை

b)

அஃறிணை

15.

சரியான திணையைத் தெரிவு செய்க

a)

உயர்திணை

b)

அஃறிணை

16.

படம் 1 எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

பலர்திணை

b)

உயர்திணை

c)

அஃதிணை

d)

ஒன்றன்திணை

17.

படம் 2 எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

உயர்திணை

b)

பலர்திணை

c)

ஒன்றன்திணை

d)

அஃதிணை

18.

( மாணவன் மீன் பிடித்தான். )


இவ்வாக்கியம் எவ்வகையான திணையைச் சார்ந்தது ?

a)

அஃறிணை

b)

உயர்திணை

c)

ஒன்றன்திணை

d)

பலர்திணை

19.

சரியான திணையைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.


-------------------------- மரத்திற்குத் தாவியது.

a)

செடி

b)

மருத்துவர்

c)

குரங்கு

d)

கணினி

20.

உயிரெழுத்துக்களை ______________ என பிரிக்கலாம்.

a)

பெயர், வினை

b)

குறில், நெடில்

c)

முதல், இடை, கடை

d)

வல்லினம், மெல்லினம், இடையினம்

21.

ஆய்த எழுத்து முன்னே ஒரு _______________________ பின்னே ஒரு _______________________ துணையாகக் கொண்டு வரும்.

a)

வல்லின உயிர்மெய் எழுத்தையும், குற்றெழுத்தையும்

b)

குற்றெழுத்தையும், வல்லின உயிர்மெய் எழுத்தையும

c)

மெல்லின உயிர்மெய் எழுத்தையும், குற்றெழுத்தையும்

d)

குற்றெழுத்தையும், இடையின உயிர்மெய் எழுத்தையும

22.

கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ளவர்கள் எந்த பாலினுள் அடங்குவர்?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

பலவின்பால்

23.

________________ என்பது உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும். ஆனால், ______________ என்பது உயிர் எழுத்த முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்.

a)

ஒரு, ஓர்

b)

ஓர், ஒரு

c)

அது, ஓர்

d)

அது, ஒரு

24.

நான்காம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணிக்கம் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி.

b)

மாணிக்கத்துக்கு ஏணிக்கோடு மரங்கள் கொடுக்கப்பட்டன.

c)

ரப்பர் மரப்பட்டைகளைச் சீவியதும் ரப்பர் பால் வழிந்தது.

d)

ரப்பர் பாலிருந்து பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

25.

வினைமுற்று ________, ____________, ____________, ______________, ______________ ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும்.

a)

திணை, எண் , பால், இடம், காலம்

b)

பொருள், பண்பு, திணை, பால், எண்

c)

சினை, எச்சம், பெயர், இடம், பால்

d)

பால், இடம், பண்பு, சினை, பெயர்

26.

படத்திற்கேற்ற வாக்கிய வகையைத் தேர்ந்தெடுக.

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

விழைவு வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

27.

பின்வருவனவற்றுள் எது தோன்றல் விகாரத்தைப் பற்றிய சொற்கள் அல்ல?

a)

அத்தலைவன்

b)

பூஞ்சோலை

c)

கண்ணிமை

d)

கற்றூண்

28.

ஆண் + அழகன் என்பதனை __________ ஆகும்.

a)

இயல்பு புணர்ச்சி

b)

திரிதல் புணர்ச்சி

c)

தோன்றல் புணர்ச்சி

d)

விகாரப் புணர்ச்சி

29.

" செயற்கை" என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எது?

a)

இயற்கை

b)

இயல்பு

c)

இயன்ற

d)

இருக்கை

30.

பூர்த்தி செய்க : _______________________________ சூழ இருத்தல்.

a)

அழகு சுற்றியிருக்க

b)

சுற்றத்திற்கு அழகாக

c)

அழகு சுற்றத்திற்கு

d)

சுற்றத்திற்கு அழகு

31.

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்---------------ஆகும்

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

நன்னூல்

d)

சிலப்பதிகாரம்

32.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


அத்தை மீன்குழம்பு சமைத்தார்.

a)

அத்தை

b)

மீன்குழப்பு

c)

சமைத்தார்

d)

அத்தை , மீன்குழம்பு

33.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


வியாபாரி காய்கறிகளை விற்கிறார்.

a)

வியாபாரி

b)

காய்கறிகளை

c)

விற்கிறார்

d)

வியாபாரி , காய்கறிகளை

34.
உன் பெயர் ______________?
a)
என்ன
b)
யார்
c)
அது
d)
அவரோ
35.

அறவினை

a)

அறம் + வினை

b)

அற + வினை

36.

காரவடை

a)

கார + வடை

b)

காரம் + வடை

37.

மரவீடு

a)

மரா + வீடு

b)

மரம் + வீடு

38.

வனவிலங்கு

a)

வனம் + விலங்கு

b)

வன + விலங்கு

39.

சரவெடி

a)

சரம் + வெடி

b)

சரா + வெடி

40.

மேற்றிசை

a)

மேற் + திசை

b)

மேல் + திசை

41.

சர்வாதிகாரி

a)

சர்வ + அதிகாரி

b)

சர்வம் + அதிகாரி

42.

அமிர்தாஞ்சனம்

a)

அமிர்த + ஆஞ்சனம்

b)

அமிர்தம் + அஞ்சனம்

43.

குணானுபவம்

a)

குணா + அனுபவம்

b)

குண + அனுபவன்

44.

படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.

a)

ஐயம் புகினும் செய்வன செய்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.

45.

தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

b)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

d)

சூதும் வாதும் வேதனை செய்யும்.

46.

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம் செய்தலும் துன்பத்தையே தரும்.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

ஐயம் புகினும் செய்வன செய்.

47.

இவற்றில் எது கொன்றை வேந்தன் அல்ல?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

c)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

d)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

48.

சரியான கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து.

b)

ஐயம் புகினும் செய்வன செய்.

c)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

49.
சபைக் கூடலின் போது பேச்சாளர் சுத்தத்தைப் பற்றி __________ உரை, வருகையாளரின் கைத்தட்டலைப் பெற்றது.
a)
ஆற்றி
b)
ஆற்றும்
c)
ஆற்றிய
d)
ஆற்ற
50.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
தாத்தா தோட்டத்தில் இருந்து இரண்டு வாழைத்தார் வெட்டி வந்தார்.
b)
உன் அண்ணன் இரு மொழிகளில் அறிவு பெற்றவன்.
c)
என் உடல் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
d)
நம் நாட்டில் பலவகை இனம் வாழ்கிறது.
51.
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
a)
அருமை பெருமை
b)
குறை நிறை
c)
கல்வி கேள்வி
d)
நன்மை தீமை
52.

ஓரெழுத்துச் சொல்லான என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

தீ

b)

பசு

c)

மலர்

d)

மேகம்

53.

பூஜ்ஜியம் என்ற சொல்லைத் தமிழில் ___________ என்று குறிப்பிடுவோம்.

a)

நூறு

b)

ஆய்தம்

c)

சுழியம்

d)

ஆயிரம்

54.

எலியைப் பிடிக்க ____________ உதவும்.

a)

கூடு

b)

வலை

c)

பொறி

d)

பாணம்

55.

இந்தப் பழமொழியை நிறைவு செய்யவும். எறும்பு ஊரக் கல்லும் _____________________.

a)

கரையும்

b)

நகரும்

c)

தேயும்

d)

மறையும்

56.

இவர் குழந்தைக் கவிஞர் என்று அழைக்கப்படுகின்றார்.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஓளவையார்

d)

அழ. வள்ளியப்பா

57.

வளி என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

இழு

b)

காயம்

c)

காற்று

d)

பாதை