wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+2 HISTORY LESSON 10

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை ?

a)

நூரெம்பெர்க்

b)

ஆன்ட்வெர்ப்

c)

ஜெனோவா

d)

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

2.

கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?

a)

மறுமலர்ச்சி

b)

சமயச் சீர்திருத்தம்

c)

புவியியல் கண்டுபிடிப்பு

d)

வர்த்தகப் புரட்சி

3.

கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர் யார்?

a)

ஐந்தாம் நிக்கோலஸ்

b)

இரண்டாம் ஜூலியஸ்

c)

இரண்டாம் பயஸ்

d)

மூன்றாம் பால்

4.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எவருடைய வெற்றி பெரிதும் ஊக்கம் தந்தது?

a)

மார்க்கோ போலோ

b)

ரோஜர் பேக்கன்

c)

கொலம்பஸ்

d)

பார்தோலோமியோ டயஸ்

5.

கூற்று: காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.

காரணம்: நகரும் அமைப்பிலான அச்சு இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

c)

கூற்று சரி, காரணம் தவறு

d)

கூற்று தவறு. காரணம் சரி

6.

பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?

a)

பகுத்தறிவுவாதம்

b)

ஐயுறவுவாதம்

c)

அரசில்லா நிலை

d)

தனித்துவம்

7.

நவீன செயல்முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்?

a)

அரிஸ்டாட்டில்

b)

பிளாட்டோ

c)

ரோஜர் பேக்கன்

d)

லாண்ட்ஸ்டெய்னர்

8.

மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் யார்?

a)

தாந்தே

b)

மாக்கியவல்லி

c)

ரோஜர் பேக்கன்

d)

பெட்ரார்க்

9.

துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?

a)

ஜியோவனி அவுரிஸ்பா

b)

மேனுவல் கிரைசாலொரஸ்

c)

ரோஜர் பேக்கன்

d)

கொலம்பஸ்

10.

கூற்று: கலிலியோ கலிலிதேவாலய விரோத போக்குக்காக கிறித்தவதிருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காரணம்: சூரியனை மையமாக வைத்து கோள்கள் சுற்றுகின்றன என்ற கோபர்நிகஸின் சூரியமையக் கோட்பாட்டை அவர் ஏற்றார்.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

c)

கூற்று சரி. காரணம் தவறு

d)

கூற்று தவறு. காரணம் சரி.

11.

கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை அல்லது அறிக்கைகள்? அறிக்கை I: இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய வைக்கிங்கின் வழித்தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாக்க முயன்றனர்.

அறிக்கை II: துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து மூலமாக கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.

அறிக்கை III: கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.

அறிக்கை IV: பெர்டினான்ட் மெகல்லன் மேற்குநோக்கிப் பயணித்து பிரேசிலைக் கண்டுபிடித்தார்.

a)

I, II மற்றும் III

b)

II மற்றும் III

c)

1 மற்றும் III

d)

அனைத்தும் சரி

12.

கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ டாவின்சியின் ஓவியம் இல்லை?

a)

வர்ஜின் ஆஃப் ராக்ஸ்

b)

இறுதி விருந்து

c)

மோனலிசா

d)

மடோனாவும் குழந்தையும்

13.

போப்பாண்டவரால் கட்டப்பட்ட ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?

a)

டோனடெல்லா

b)

ரபேல்

c)

லியானர்டோ டாவின்சி

d)

மைக்கேல் ஆஞ்சிலோ

14.

கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை ?

a)

மார்லோவ் – டிடோ

b)

ஷேக்ஸ்பியர் – கிங் லியர்

c)

பிரான்சிஸ் பேக்கன் – நோவும் ஆர்கனும்

d)

ரோஜர் பேக்கன் – டெக்கமரான்

15.

கூற்று: துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.

காரணம்: கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி – வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

c)

கூற்று சரி காரணம் தவறு கட்ட

d)

கூற்று தவறு காரணம் சரி.

16.

மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?

a)

சாண்டா மரியா

b)

பிண்ட்டா

c)

நினா

d)

விட்டோரியா

17.

ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர் யார்?

a)

பெட்ரோ காப்ரல்

b)

கொலம்பஸ்

c)

ஹெர்னன் கார்ட்ஸ்

d)

ஜேம்ஸ் குக்

18.

.இங்கிலாந்தில் எட்டாம் ஹென்றியால் மேலாதிக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?

a)

1519

b)

1532

c)

1533

d)

1534

19.

கூற்று: கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.

காரணம்: போப்பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

c)

கூற்று சரி காரணம் தவறு

d)

கூற்று தவறு காரணம் சரி.

20.

ஏழாம் கிரிகோரியால் கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஆட்சியாளர் யார்?

a)

ஏழாம் ஹென்றி

b)

எட்டாம் ஹென்றி

c)

இரண்டாம் ஹென்றி

d)

ஆறாம் ஹென்றி