wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SSLC வரலாறு 6 - 10 by MMA

Total questions: 100

Worksheet time: 50mins

Name
Class
Date
1.
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
a)
மருது சகோதரர்கள்
b)
பூலித்தேவர்
c)
வேலுநாச்சியார்
d)
வீரபாண்டிய கட்டபொம்மன்
2.
கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார்?
a)
வேலுநாச்சியார்
b)
பூலித்தேவர்
c)
ஆற்காட்டு நவாப்
d)
திருவிதாங்கூர் மன்னர்
3.
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
a)
வேலுநாச்சியார்
b)
கட்டபொம்மன்
c)
ஊமைத்துரை
d)
பூலித்தேவர்
4.
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
a)
நாகலாபுரம்
b)
கயத்தாறு
c)
விருப்பாட்சி
d)
பாஞ்சாலங்குறிச்சி
5.
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
a)
மருது சகோதரர்கள்
b)
பூலித்தேவர்
c)
வீரபாண்டிய கட்டபொம்மன்
d)
கோபால நாயக்கர்
6.
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
a)
1805 மே 24
b)
1805 ஜூலை 10
c)
1806 ஜூலை 10
d)
1806 செப்டம்பர் 10
7.
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
a)
கர்னல் பேன்கோர்ட்
b)
சர் ஜான் கிரடாக்
c)
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
d)
கர்னல் அக்னியூ
8.
வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
a)
மும்பை
b)
டெல்லி
c)
மைசூர்
d)
கல்கத்தா
9.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது

(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.

(iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.

(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவு களில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

a)

(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி

b)

(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

c)

(iii) மற்றும் (iv) மட்டும் சரி

d)

(i) மற்றும் (iv) மட்டும் சரி

10.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.

(ii) காளையா ர்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.

(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.

(iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

a)

(i) மற்றும் (ii) ஆகியவை சரி

b)

(ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி

c)

(ii) மற்றும் (iii) ஆகியவை சரி

d)

(i) மற்றும் (iv) ஆகியவை சரி

11.

கூற்று: பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.

காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

a)

கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

b)

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.

c)

கூற்று தவறானது காரணம் சரியானது

d)

கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

12.

கூற்று: புதிய இராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலிலான இலட்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது.

காரணம்: தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது.

a)

கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.

c)

கூற்று தவறானது காரணம் சரியானது

d)

கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை.

13.
பாளையக்காரர் முறை தமிழகத்தில் --------- என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
a)
விஸ்வநாத நாயக்கர்
b)
பூலித்தேவர்
c)
வீரபாண்டிய கட்டபொம்மன்
d)
கோபால நாயக்கர்
14.
.---------- பாளையக்காரரைத் தவிர மேற்குப் பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்.
a)
தலைவன்கோட்டை
b)
சிவகிரி
c)
சிங்கம்பட்டி
d)
நடுவக்குறிச்சி
15.
வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக --------- பாதுகாப்பில் இருந்தனர்.
a)
விஸ்வநாத நாயக்கர்
b)
பூலித்தேவர்
c)
கோபால நாயக்கர்
d)
மருது சகோதரர்கள்
16.
கட்டபொம்மனை சரணடையக் கோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் ---------- என்பவரை அனுப்பிவைத்தார்.
a)
வேலுநாச்சியார்
b)
சிவசுப்ரமணியனார்
c)
ஊமைத்துரை
d)
ராமலிங்கனார்
17.
கட்டபொம்மன் ---------- என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
a)
நாகலாபுரம்
b)
கயத்தாறு
c)
விருப்பாட்சி
d)
பாஞ்சாலங்குறிச்சி
18.
மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் --------- என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
a)
நான்காம் பாளையக்காரர் போர்
b)
மூன்றாம் பாளையக்காரர் போர்
c)
இரண்டாம் பாளையக்காரர் போர்
d)
முதலாம் பாளையக்காரர் போர்
19.
-------- என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்
a)
ஃபதே ஹைதர்
b)
திப்பு சுல்தான்
c)
ஹைதர் அலி
d)
ஷா பகதூர்
20.
வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் ------- ஆவார்.
a)
ஜான் கிரடாக்
b)
மீக்காரஸ்
c)
ஆர்ம்ஸ்ட்ராங்
d)
ஜில்லஸ்பி
21.
1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியதுல்லா கீழ்க்கண்டவற்றில் எதனை தொடங்கினார்?
a)
வஹாபி கிளர்ச்சி
b)
ஃபராசி இயக்கம்
c)
பழங்குடியினர் எழுச்சி
d)
கோல் கிளர்ச்சி
22.
நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்
a)
டிடு மீர்
b)
சித்து
c)
டுடூ மியான்
d)
கோல்
23.
நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
a)
சாந்தலர்கள்
b)
டிடு மீர்
c)
முண்டா
d)
கோல்
24.
கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
a)
தாதாபாய் நவரோஜி
b)
நீதிபதி கோவிந்த் ரானடே
c)
பிபின் சந்திர பால்
d)
ரொமேஷ் சந்திரா
25.
வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
a)
1905 ஜூன் 19
b)
1906 ஜூலை 18
c)
1907 ஆகஸ்ட் 19
d)
1910 அக்டோபர் 16
26.
சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்த பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
a)
கோல் கிளர்ச்சி
b)
இன்டிகோ கிளர்ச்சி
c)
முண்டா கிளர்ச்சி
d)
தக்கான கலவரங்கள்
27.
1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
a)
அன்னிபெசன்ட் அம்மையார்
b)
பிபின் சந்திர பால்
c)
லாலா லஜபதி ராய்
d)
திலகர்
28.
நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
a)
தீனபந்து மித்ரா
b)
ரமேஷ் சந்திர தத்
c)
தாதாபாய் நவரோஜி
d)
பிர்சா முண்டா
29.
1757 ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவுக்கு _______ என்று அழைக்கப்பட்ட வங்காளத்தின் கடன் வழங்குவோர் நிதி ஆதரவு தந்தனர்
a)
மேஜர் ஜெனரல் வீலர்
b)
ஜகத் சேரத்துக்கள்
c)
சிங் ராய்
d)
பீர் சிங்
30.
மன்னர் ஆட்சிக்கும் நிலச்சுவான்தார்களுக்கும் எதிரான _______ இயக்கம் 1827 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது
a)
ராஜ்மஹால்
b)
முண்டா கிளர்ச்சி
c)
சத்தாரா
d)
வஹாபி
31.
சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி எது?
a)
இன்டிகோ கிளர்ச்சி
b)
கோல் கிளர்ச்சி
c)
முண்டா கிளர்ச்சி
d)
தக்காண கிளர்ச்சி
32.
பழங்குடியினர் அல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடை விதித்த சட்டம்?
a)
வாரிசு சட்டம்
b)
குண்ட் கட்டி
c)
லிட்டன் சட்டம்
d)
சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்
33.
1854 ஆம் ஆண்டு வாக்கில் யார் தலைமையில் சமூக கொள்ளை நடவடிக்கைகள் நடந்தன!??
a)
நோவா மியான்
b)
பீர் சிங்
c)
பகதூர்ஷா
d)
சிராஜ் உத் தௌலா
34.
1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியில் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட ஆங்கிலேய தளபதி.
a)
மேஜர் ஜெனரல் ஹக்வீலர்
b)
வில்லியம் ஹோவர்ட் ரசல்
c)
கர்சன் பிரபு
d)
ரிப்பன் பிரபு
35.
சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு.
a)
1905
b)
1906
c)
1908
d)
1907
36.
டபிள்யூ. சி. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
a)
1885
b)
1857
c)
1886
d)
1856
37.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) மீர் ஜாபரிடமிருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.

(ii) 1831 - 1832 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.

(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்

(iv) 1879 ஆம் ஆண்டில் சாந்தவர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறை படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

a)

(i), (ii) மற்றும் (iii) சரியானவை

b)

(i) மற்றும் (iii)சரியானவை

c)

(iii) மற்றும் ( iv) சரியானவை

d)

(i) மற்றும் (iv) சரியானவை

38.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தை செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்பு களில் ஒன்றாகும்.

(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.

(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாக கொண்டு வங்கபிரிவினை நடந்தது.

a)

(i) மற்றும் (iii) சரியானவை

b)

(i) ,(iii) மற்றும் (iv) சரியானவை

c)

(ii) மற்றும் (iii) சரியானவை

d)

(iii) மற்றும் (iv) சரியானவை

39.

கூற்று : இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.

காரணம் : இன்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையை கையாண்டனர்

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை

b)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு

c)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

d)

கூற்று தவறு காரணம் சரி

40.

கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு

b)

கூற்று தவறு காரணம் சரி

c)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

41.
அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
a)
மோதிலால் நேரு
b)
சைபுதீன் கிச்லு
c)
முகமது அலி
d)
ராஜ் குமார் சுக்லா
42.
இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
a)
பம்பாய்
b)
மதராஸ்
c)
லக்னோ
d)
நாக்பூர்
43.
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
a)
1930 ஜனவரி 26
b)
1929 டிசம்பர் 26
c)
1946 ஜூன் 16
d)
1946 ஜனவரி 15
44.
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
a)
1858
b)
1911
c)
1865
d)
1936
45.
1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
a)
கோவில் நுழைவு நாள்
b)
மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)
c)
நேரடி நடவடிக்கை நாள்
d)
சுதந்திரப் பெருநாள்
46.
மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
a)
1858 ஆம் ஆண்டு சட்டம்
b)
இந்திய கவுன்சில் சட்டம் 1909
c)
இந்திய அரசுச் சட்டம் 1919
d)
இந்திய அரசுச் சட்டம் 1935
47.
காந்தியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமைய்யாவை வீழ்த்தி 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தவர் யார்?
a)
ராஜேந்திர பிரசாத்
b)
ஜவகர்லால் நேரு
c)
சுபாஷ் சந்திரபோஸ்
d)
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
48.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது காந்தியடிகள் எங்கிருந்தார்?
a)
புது டெல்லி
b)
அகமதாபாத்
c)
வார்தா
d)
நவகாளி
49.
காந்தியடிகள் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் இருந்து ________ ரயில் நிலையத்தில் கீழே இறக்கப்பட்டார்
a)
பீட்டர் மாரிட்ஸ்பெர்க்
b)
டெல்லி
c)
லண்டன்
d)
கொல்கத்தா
50.
காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
a)
மோதிலால் நேரு
b)
பால கங்காதர திலகர்
c)
கோபால கிருஷ்ண கோகலே
d)
பிபின் சந்திர பால்
51.
கிலாபத் இயக்கத்திற்கு யார் தலைமை ஏற்றனர்?
a)
கோபால கிருஷ்ண கோகலே
b)
ரஹமத் அலி
c)
கான் அப்துல் கஃபார்கான்
d)
அலி சகோதரர்கள்
52.
1919 ஆம் ஆண்டில் இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _______ அறிமுகம் செய்தது
a)
நிலவரி சட்டம்
b)
இரட்டை ஆட்சி முறை
c)
வகுப்புவாரி ஒதுக்கீடு
d)
தலைவரி
53.
வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தியவர்.
a)
சுபாஷ் சந்திர போஸ்
b)
முகமது அலி ஜின்னா
c)
கான் அப்துல் கஃபார்கான்
d)
ராஜேந்திர பிரசாத்
54.
சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் _____ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.
a)
வகுப்புவாரி ஒதுக்கீட்டை
b)
ரௌலட் சட்டம்
c)
வேவல் திட்டம்
d)
மவுண்ட்பேட்டன் திட்டம்
55.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை தலைமறைவாக செயல்படுத்தியவர்.
a)
சி. ஆர். தாஸ்
b)
உஷா மேத்தா
c)
சுபாஷ் சந்திர போஸ்
d)
சூர்யா சென்
56.
பாகிஸ்தான் என்ற வார்த்தை பதத்தை உருவாக்கியவர் யார்?
a)
முகமது அலி ஜின்னா
b)
கான் அப்துல் கஃபார்கான்
c)
அலி சகோதரர்கள்
d)
ரஹமத் அலி
57.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) இந்திய பொதுவுடைமைக் கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

(ii) எம். சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

(iii) ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்யா நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

(iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்ம வாதிகள் பங்கேற்கவில்லை.

a)

(i) மற்றும் (ii) சரியானது

b)

(ii) மற்றும் (iii) சரியானது

c)

(iv) சரியானது

d)

(i) , (ii) மற்றும் (iii) சரியானது

58.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) இந்துஸ்தான் குடியரசு ராணுவம் 1924 ஆம் ஆண்டு கான்பூரில் உருவானது.

(ii) காகோரி சதித்திட்ட வழக்கில் ராம் பிரசாத் பிஸ்மில் விசாரிக்கப்பட்டார்.

(iii) இந்துஸ்தான் சமதர்ம குடியரசு அமைப்பு சூர்யா சென் என்பவரால் உருவாக்கப்பட்டது.

(iv) சிட்டகாங் ஆயுதக்கிடங்குத் தாக்குதல் B.K தத்தால் நடத்தப்பட்டது

a)

(i) மற்றும் (ii) சரியானது

b)

(i) மற்றும் (iii) சரியானது

c)

(iii) சரியானது

d)

(iii) மற்றும் (iv) சரியானது

59.

கூற்று : காங்கிரஸ் முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டது.

காரணம் : காங்கிரஸ் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழி செய்தது.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

b)

கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

c)

கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

60.

கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939ஆம் ஆண்டு பதவி விலகின.

காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனியாதிக்க அரசு போரில் பங்கேற்றது.

a)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் இல்லை.

b)

கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது.

c)

கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.

d)

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

61.
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
a)
T.M.நாயர்
b)
P.ரங்கையா
c)
G.சுப்பிரமணியம்
d)
G.A.நடேசன்
62.
இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கு நடைபெற்றது?
a)
மெரினா
b)
மயிலாப்பூர்
c)
புனித ஜார்ஜ் கோட்டை
d)
ஆயிரம் விளக்கு
63.
"அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக் கூறியவர் யார்?
a)
அன்னிபெசன்ட்
b)
M.வீரராகவாச்சாரி
c)
B.P.வாடியா
d)
G.S.அருண்டேல்
64.
கீழ்க்கண்டவற்றில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஆங்கில செய்தித்தாள் எது?
a)
திராவிடன்
b)
ஆந்திரப் பிரகாசிகா
c)
ஜஸ்டிஸ்
d)
நியூ இந்தியா
65.
கீழ்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
a)
S.சத்தியமூர்த்தி
b)
கஸ்தூரிரங்கர்
c)
P. சுப்பராயன்
d)
பெரியார் ஈ.வே.ரா
66.
சென்னைக்கு அருகேயுள்ள உதயவனத்தில் சத்தியாக்கிரக முகாமை அமைத்தவர் யார்?
a)
K.காமராஜ்
b)
C.ராஜாஜி
c)
K.சந்தானம்
d)
T.பிரகாசம்
67.
ஹிந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பட்டது?
a)
ஈரோடு
b)
சென்னை
c)
சேலம்
d)
மதுரை
68.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது?
a)
ஈரோடு
b)
சென்னை
c)
சேலம்
d)
மதுரை
69.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி.
a)
T. பிரகாசம்
b)
T. முத்துச்சாமி
c)
அன்னிபெசன்ட்
d)
T.S.S. ராஜன்
70.
தனது எழுத்துக்களின் வாயிலாக ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலை அம்பலப்படுத்தினார்.
a)
B.P.வாடியா
b)
கோகலே
c)
G. சுப்ரமணியம்
d)
P.வீரராகவாச்சாரி
71.
______ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்
a)
சென்னை மகாஜன சபை
b)
காமன்வீல்
c)
சத்யகிரக சபை
d)
பாரத மாதா சங்கம்
72.
சென்னையில் தொழிற்சங்கங்களை தொடங்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவர்.
a)
தாதாபாய் நௌரோஜி
b)
வ. உ. சிதம்பரனார்
c)
B.P.வாடியா
d)
ராஜாஜி
73.
பிராமணரல்லாத மாணவர்களுக்காக தங்கும் விடுதியை நிறுவியவர்.
a)
ராஜாஜி
b)
சி. நடேசனார்
c)
ஜார்ஜ் ஜோசப்
d)
அன்னிபெசன்ட்
74.
சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர்.
a)
வ. உ. சிதம்பரனார்
b)
G.சுப்பிரமணியம்
c)
P.வீரராகவாச்சாரி
d)
ராஜாஜி
75.
முஸ்லிம் லீகின் சென்னை கிளையை உருவாக்கியவர்.
a)
பத்ருதீன் தியாப்ஜி
b)
யாகுப் ஹசன்
c)
கான் அப்துல் கஃபார்கான்
d)
பிபின் சந்திர பால்
76.
1932 ஜனவரி 26ல் ______ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை ஏற்றினார்.
a)
இரண்டாவது
b)
முதலாவது
c)
மூன்றாவது
d)
நான்காவது
77.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது

(ii) தமிழில் வெளிவந்த தேசிய பருவ இதழான சுதேசமித்திரன் 1891ல் தொடங்கப்பட்டது

(iii) குடிமைப் பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

(iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதி அவர்

a)

(i) மற்றும் (ii) ஆகியவை சரி

b)

(iii) சரி

c)

(iv) சரி

d)

அனைத்தும் சரி.

78.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை

(ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹாசனுடன் ராஜாஜி நெருக்கமாக பணியாற்றினார்

(iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

(iv) தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகள் முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

a)

(i) மற்றும் (ii) ஆகியவை சரி

b)

(i) மற்றும் (iii) ஆகியவை சரி

c)

(ii) சரி

d)

(i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி

79.

கூற்று : நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.

காரணம் : தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி விடும் என நீதிக்கட்சி அஞ்சியது.

a)

காரணமும் கூற்றும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கு ஆன சரியான விளக்கம் அல்ல.

b)

கூற்று சரி. காரணம் தவறு.

c)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.

d)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

80.

கூற்று : பிராமணர் அல்லாதவர்க்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற பிரச்சினையை பெரியார் எழுப்பினார்.

காரணம் : காங்கிரசின் முதல் அமைச்சரவையினா போது ராஜாஜி விற்பனை வரியை ரத்துச் செய்தார்.

a)

காரணம் கூற்று ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல.

b)

கூற்று சரி. காரணம் தவறு.

c)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு.

d)

கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

81.
இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி -------- ஆவார்
a)
சி.வை. தாமோதரனார்
b)
மறைமலை அடிகள்
c)
ராஜா ராம்மோகன்ராய்
d)
பெரியார்
82.
1709 இல் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை ------- நிறுவினார்
a)
கால்டுவெல்
b)
F.W. எல்லிஸ்
c)
மீனாட்சி சுந்தரனார்
d)
சீகன்பால்கு
83.
சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாள் -------- ஆகும்.
a)
குடியரசு
b)
புரட்சி
c)
விடுதலை
d)
பகுத்தறிவு
84.
சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் ----------- வைக்கப்பட வேண்டுமென பெரியார் விரும்பினார்.
a)
தேசியவாதம்
b)
பகுத்தறிவுவாதம்
c)
உருவ வழிபாடு மறுப்பு
d)
ஆன்மீகம்
85.
1893 இல் ---------- ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
a)
இரட்டைமலை சீனிவாசன்
b)
B.R. அம்பேத்கார்
c)
ராஜாஜி
d)
எம்.சி. ராஜா
86.
இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் --- இல் உருவாக்கப்பட்டது
a)
1917
b)
1918
c)
1914
d)
1916
87.
அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் -------- நிறுவப் பெற்றது
a)
பணியாளர் தேர்வாணையம்
b)
பொதுப் பணி ஆணையம்
c)
பணியாளர் தேர்வு வாரியம்
d)
மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
88.
சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்------- .
a)
இரட்டை மலை சீனிவாசன்
b)
டி.எம். நாயர்
c)
பி. வரதராஜுலு
d)
எம்.சி. ராஜா
89.
முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ------------- ஆகும்.
a)
மலையாளம்
b)
கன்னடம்
c)
தெலுங்கு
d)
தமிழ்
90.
புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் -------------- ஆவார்
a)
சர் பிட்டி தியாகராயர்
b)
டி.எம். நாயர்
c)
F.W. எல்லிஸ்
d)
கால்டுவெல்
91.
தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் ----------- கருதப்படுகிறார்
a)
சி.வை. தாமோதரனார்
b)
மறைமலை அடிகள்
c)
ராஜா ராம்மோகன்ராய்
d)
பெரியார்
92.
தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது ------- ஆகும்.
a)
நீதிக்கட்சி
b)
காங்கிரஸ்
c)
திராவிடர் கழகம்
d)
சுயராஜ்ஜிய கட்சி
93.
சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் --------- என மாற்றம் பெற்றது
a)
மறைமலை அடிகள்
b)
ராஜா ராம்மோகன்ராய்
c)
பரிதிமாற்கலைஞர்
d)
தமிழ் பிரியன்
94.
------------- தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
a)
பரிதிமாற்கலைஞர்
b)
அபிரகாம் பண்டிதர்
c)
மறைமலை அடிகள்
d)
தமிழ் பிரியன்
95.
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
a)
அன்னிபெசன்ட் அம்மையார்
b)
முத்துலட்சுமி அம்மையார்
c)
விஜயலட்சுமி பண்டிட்
d)
அஞ்சம்மாள்
96.
தமிழகத்தில் முதல் தேர்தல் நடைபெற்ற ஆண்டு.
a)
1910
b)
1920
c)
1930
d)
1940
97.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812 ல் வெளியிடப்பட்டது

(ii) பனை ஓலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலை அடிகள் சேகரித்து தொகுத்தார்.

(iii) ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

(iv) திரு. வி. கல்யாணசுந்தரம் தொழிற்சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

a)

(i), (ii) ஆகியன சரி

b)

(i), (iii) ஆகியன சரி

c)

(iv) சரி

d)

(ii), (iii) ஆகியன சரி

98.

சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

(i) இந்திய பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்ததில் மார்கரட் கசினும் ஒருவராவார்

(ii) பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தானே உருவாக்கிய சிந்தனையாளர்கள் பகுத்தறிவாளர்கள் அமைப்புகளின் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் செலவழித்தார்

(iii) சிங்காரவேலர் இந்து மகாசபையின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

(iv) தென்னிந்தியாவிலுள்ள சாதிமுறை வடக்கே இருந்து வந்த பிராமணர்களின் வருகையோடு தொடர்புடையது என பெரியார் உறுதிபடக் கூறினார்.

a)

(iii) ஆகியவை (iv) சரி

b)

(ii), (iii), (iv) ஆகியவை சரி

c)

(i), (ii), (iv) ஆகியவை சரி

d)

(ii), (iii) ஆகியவை சரி

99.

கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தை புறக்கணித்தது.

a)

காரணம் கூற்று ஆகியவை சரி

b)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல

c)

காரணம் கூற்று இரண்டுமே தவறு

d)

ஊற்று சரியானால் காரணத்துடன் பொருந்தவில்லை

100.

கூற்று : முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் போருக்குப் பின்னர், பிரதிநிதித்துவ நிறுவனங்களை அறிமுகம் செய்வது குறித்துப் பரிசீலனை செய்து கொண்டிருந்தது.

காரணம் : 1920 இல் இரட்டை ஆட்சியானது ஒரு அரசு முறையாக மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

கூற்று சரி, ஆனால் காரணம் சரியானது அல்ல.

b)

கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.

c)

கூற்று, காரணம் இரண்டுமே சரி.

d)

கூற்று தவறு, அது காரணத்துடன் பொருந்தவில்லை.