wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த்-செய்யுள்-திருவிளையாடற் புராணம்

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………

a)

அ) அமைச்சர், மன்னன்

b)

இ) இறைவன், மன்னன்

c)

ஆ) அமைச்சர், இறைவன்

d)

ஈ) மன்னன், இறைவன்

2.

கபிலரின் நண்பர் யார்?

a)

அ) பரஞ்சோதி முனிவர்

b)

ஆ) இடைக்காடனார்

c)

இ) குலேச பாண்டியன்

d)

ஈ) ஒட்டக்கூத்தர்

3.

திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?

a)

அ) சமண முனிவர்

b)

ஆ) அகத்தியர் முனிவர்

c)

இ) பரஞ்சோதி முனிவர்

d)

ஈ) இடைக்காடனார்

4.

 திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………

a)

அ) 64

b)

ஆ) 96

c)

இ) 30

d)

ஈ) 18

5.

‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?

a)

அ) பரஞ்சோதி முனிவர்

b)

ஆ) கபிலர்

c)

இ) இடைக்காடனார்

d)

ஈ) மோசிகீரனார்

6.

வேப்ப மாலை அணிந்த மன்னன்?

a)

அ) சேரன்

b)

ஆ) சோழன்

c)

இ) பாண்டியன்

d)

ஈ) பல்லவன்

7.

மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ண யரக் காரணம் ………………………

a)

அ) குளிர்ந்த காற்று வீசியதால்

b)

ஆ) நல்ல உறக்கம் வந்ததால்

c)

இ) களைப்பு மிகுதியால்

d)

ஈ) அரசன் இல்லாமையால்

8.

களைப்பு மிகுதியால் ‘மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு’ என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?

a)

அ) சிவபெருமான்

b)

ஆ) கபிலர்

c)

இ) பாண்டியன்

d)

ஈ) இடைக்காடனார்

9.

பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ………………………

a)

அ) தஞ்சாவூர்

b)

ஆ) திருமறைக்காடு

c)

இ) திருத்துறைப் பூண்டி

d)

ஈ) திருவண்ணாமலை

10.

 திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை ………………………

a)

அ) 3

b)

ஆ) 4

c)

இ) 6

d)

ஈ) 10

11.

இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் ………………………

a)

அ) மதுரைக் காண்டம்

b)

ஆ) கூடற் காண்டம்

c)

இ) திரு ஆலவாய்க் காண்டம்

d)

ஈ) யுத்த காண்டம்

12.

இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடற்புராணத்தில் எத்தனையாவது படலம்?

a)

அ) 64

b)

ஆ) 56

c)

இ) 46

d)

ஈ) 48

13.

அரசரும் புலவருக்குக் ……………………… வீசுவர்.

a)

அ) கவண்

b)

ஆ) கணையாழி

c)

இ) கவரி

d)

ஈ) கல்

14.

குலேசபாண்டியன் ……………………… நாட்டை ஆட்சி புரிந்தான்.

a)

அ) பாண்டிய

b)

ஆ) சேர

c)

இ) சோழ

d)

ஈ) பல்லவ

15.

குலேச பாண்டியன் என்னும் மன்னன் ……………………… புலமையில் சிறந்து விளங்கினான்.

a)

அ) தமிழ்

b)

ஆ) வடமொழி

c)

இ) தெலுங்கு

d)

ஈ) கன்னடம்

16.

சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ………………………

a)

அ) பார்வதி

b)

ஆ) திருமகள்

c)

இ) கலைமகள்

d)

ஈ) அலைமகள்

17.

சொல்லின் பொருளாக விளங்குவது ………………………

a)

அ) இறைவன்

b)

ஆ) இடைக்காடனார்

c)

இ) கபிலர்

d)

ஈ) பார்வதி

18.

சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்ததாக இறைவனிடம் இடைக்காடனார் ……………………… கூறிச் சென்றார்.

a)

அ) அழுகையுடன்

b)

ஆ) சினத்துடன்

c)

இ) ஏளனத்துடன்

d)

ஈ) உருக்கத்துடன்

19.

இடைக்காடனாரின் சொல் ……………………… போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.

a)

அ) கூரிய அம்பு

b)

ஆ) வேற்படை

c)

இ) தீ

d)

ஈ) விடமுள்

20.

………………………ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி இறைவன் அங்குச் சென்று இருந்தார்.

a)

அ) காவிரி

b)

ஆ) கங்கை

c)

இ) வைகை

d)

ஈ) தாமிரபரணி

21.

திரு ஆலவாய்க் கோவிலை விட்டு வெளியேறிய இறைவன் – வடிவத்தை மறைத்து………………………வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.

a)

அ) நரசிங்க

b)

ஆ) பலராம

c)

இ) இலிங்க

d)

ஈ) சர்ப்ப

22.

கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர்

a)

அ) குலேச பாண்டியன்

b)

ஆ) இறைவன்

c)

இ) இடைக்காடனார்

d)

ஈ) கபிலர்

23.

மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து ……………………… இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.

a)

அ) மரகத

b)

ஆ) பொன்

c)

இ) தன்

d)

ஈ) வைர

24.

கேள்வியினான், காடனுக்கும் கபிலனுக்கும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.

a)

அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை

b)

ஆ) எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

c)

இ) முற்றெச்சம், உம்மைத் தொகை

d)

ஈ) வினையெச்சம், தொழிற் பெயர்

25.

‘மாசற விசித்த வார்புறு வள்பின்’ என்று பாடிய புலவர் _ பாடப்பட்டவன்

a)

அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

b)

ஆ) ஔவையார், அதியமான்

c)

இ) பரணர், தலையாளங்கானத்துச் செருதவன்ற பாண்டியன்

d)

ஈ) கபிலர், பாரி

26.

அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் ……………………… கவரி வீசிய மன்னர் ………………………

a)

அ) இடைக்காடனார், குலேச பாண்டியன்

b)

ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை

c)

இ) கபிலர், பாரி

d)

ஈ) பரணர், பேகன்

27.

பரஞ்சோதி முனிவர் ……………………… நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

a)

அ) பத்தாம்

b)

ஆ) பதினேழாம்

c)

இ) பதினெட்டாம்

d)

ஈ) பதினைந்தாம்

28.

பரஞ்சோதி முனிவர் ……………………… பக்தி மிக்கவர்.

a)

அ) சிவ

b)

ஆ) பெருமாள்

c)

இ) முருக

d)

ஈ) தேச

29.

திருவிளையாடற் கதைகள் ……………………… முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது.

a)

அ) சிலப்பதிகாரம்

b)

ஆ) மணிமேகலை

c)

இ) சீவகசிந்தாமணி

d)

ஈ) தொல்காப்பியம்