Worksheetsஉவமைத்தொடர் புகுமுக வகுப்பு
Total questions: 5
Worksheet time: 3mins
1. ஏற்கனவே முகிலனின் மீது கோபமாக இருந்த குமரனுக்கு அவன் தன்னைப் பற்றி பிற நண்பர்களிடம் குறை கூறுவதை அறிந்ததும் ...................................................... வெகுண்டு எழுந்தான்.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
பாம்பும் கீரியும் போல
ஒளியைக் கண்ட இருள் போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
2. எதற்கெடுத்தாலும் வகுப்பில் ........................................... சண்டையிட்டுக் கொண்டிருந்த மாலதியையும் கவிதாவையும் ஆசிரியர் அழைத்து அறிவுரை கூறினார்.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
ஒளியைக் கண்ட இருள் போல
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
3. ஆசிரியர் திடீரென ஒரு பணியைக் கொடுத்துச் செய்யச் சொன்னதும் முகிலனுக்குக் ................................................ இருந்தது.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
ஒளியைக் கண்ட இருள் போல
4. இரவு நேரத்தில் வீட்டில் நுழைந்த திருடனைக் கண்டதும் கவிதா ............................................... பயந்து மயங்கி விழுந்தாள்.
ஒளியைக் கண்ட இருள் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கீரியும் பாம்பும் போல
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
5. குடும்பம் வறுமையில் தவித்தபோது, கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்ததும் தேவனின் துன்பங்கள் யாவும் ................................................ விலகின.
கருடனைக் கண்ட பாம்பு போல
கண்ணக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
ஒளியைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
