wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

1. கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

d)

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்

2.

சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .

a)

சித்திரம் , வேண்டாம்

b)

சித்திரம் , வேண்டும்

3.

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

4.

சிறு வயதிலிருந்தே தந்தை கொடுத்த நம்பிக்கையே சங்கரி நீச்சல் போட்டியில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தது.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

5.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும். இப்பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?

a)

நம் உடல் நலமாக இருந்தால்தான் மற்றவருடைய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

b)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

6.

முருகன் தினமும் காலையுணவை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். தனது உடல் நலமாக இருந்தால்தான் சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

7.

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உறுதி கொண்ட ரோஜா, காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கு கொண்டாள்

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

பதறாத காரியம் சிதறாது

8.

பணத்தை வாங்கிக் கொடுத்த தன் நண்பனின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான் குமரன்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

9.

ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தர வேண்டியதில்லை. இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

10.

தமிழ்மொழி தேர்வில் மல்லிகா எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

பதறாத காரியம் சிதறாது

11.

பாடல் பாடுவதைத் தன் அன்னையிடமே கற்றுக் கொண்ட பாலா, பள்ளி நிகழ்வுகளில் பாடல்கள் பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

12.

தனிமரம் தோப்பாகாது' என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.

b)

ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

13.

முன் வைத்த காலை பின் வைக்காதே’ என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

b)

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

14.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

b)

குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

c)

மேற்கண்ட எதுவும் இல்லை

15.

சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன.

a)

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’

b)

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’

16.

மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’

b)

‘பதராத காரியம் சிதராது’

17.

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?என்ற பழமொழியின் பொருள் என்ன?

a)

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.

b)

மேற்கண்ட எதுவும் இல்லை

c)

குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.

18.

அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற

பழமொழியின் பொருள் என்ன?

a)

மேற்கண்ட எதுவும் இல்லை

b)

உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

c)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்

19.

நகுலன் தினமும் காலைச் சிற்றுண்டியை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். உடல் நலமாக இருந்தால்தானே சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

a)

‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’

b)

‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’

20.

ஓவியம் வரைவதைத் தன் தந்தையிடமே கற்றுக் கொண்ட அமுதன், பள்ளி சுவரில் கண்கவர் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினான்.

a)

‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’

b)

‘சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய’

21.

வீட்டிற்கு வந்த அப்பாவிடம் கயல்விழி, நயமாகப் பேசி வெளியே செல்ல அனுமதி பெற்றாள்.

a)

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’

b)

‘பதராத காரியம் சிதராது’

22.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

தெய்வத்துள் வைக்கப் படும்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

23.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.

a)

முழு மூச்சு

b)

முயல் கொம்பு

c)

கண்ணும் கருத்தும்

d)

கங்கணம் கட்டுதல்

24.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?

a)

கண்ணும் கருத்தும்

b)

கரடு முரடு

c)

சுற்றும் முற்றும்

d)

தான தர்மம்

25.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நல்லவர்

b)

மூடர்

c)

உறவினர்

d)

நண்பர்

26.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

a)

குறையான சொற்கள்

b)

தீமை பயக்கும் சொற்கள்

c)

நன்மை பயக்கும் சொற்கள்

d)

இனிமை பயக்கும் சொற்கள்

27.

படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

ஓய்தல் ஒழி

c)

ஊண்மிக விரும்பு

d)

ஏற்பது இகழ்ச்சி

28.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

a)

நண்பர்கள்

b)

பணக்காரர்கள்

c)

சகோதரர்கள்

d)

உறவினர்கள்

29.

ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

a)

பேரும் புகழும்

b)

பழக்க வழக்கம்

c)

பேரும் புகழும்

d)

இன்ப துன்பம்

30.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

b)

நீதிநெறி - ஔவையார்

c)

நல்வழி - குமரகுருபர சுவாமிகள்

d)

வாக்குண்டாம் - பாரதியார்

31.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

நகமும் சதையும் போல

d)

காட்டுத் தீ போல

32.

ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சங்கரன் ஓர் ஏழை குடியானவன். தன்னை நாடி வருவோர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

அறம் செய விரும்பு

c)

இயல்வது கரவேல்

d)

உடையது விளம்பேல்

33.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

மேடு பள்ளம்   -  சமமான நிலப்பகுதி

b)

அங்கும் இங்கும்  -  சில இடங்களில்

c)

அரை குறை  -  முழுமை பெறாத நிலை  

d)

மூலை முடுக்கு  -  எவ்விடத்திலும்

34.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

35.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

b)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

d)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்