Font size
Worksheetsஅறிவியல் 4 ( ஆண்டு 5)
Total questions: 19
Worksheet time: 17mins
இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
உருப் பெருக்காடி
ஸ்டெதாஸ்கோப்
நிலநடுக்கத்தையும் சுனாமி அபாயத்தையும் கண்டறிய உதவும் கருவி எது?
ரெக்டர் கருவி
ஸ்டெதாஸ்கோப்
உருப் பெருக்காடி
படத்திலுள்ள சுவைபானத்தின் சுவையை எந்த ஐம்புலன்களைக் கொண்டு அறிய முடியும்?
மூக்கு
நாக்கு
தோல்
கண்
கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?
அறிவியல் அறைக்குள் நுழையும் முன்னர் _________________ அனுமதியைப் பெற வேண்டும்.
தலைமையாசிரியரின்
அறிவியல் ஆசிரியரின்
தலைமை மாணாக்கரின்
துணைத் தலைமை ஆசிரியரின்
அறிவியல் அறையில் உள்ள வேதியல் ( இரசாயன) பொருள்களை முகரக் கூடாது.ஏன்?
அறிவியல் ஆசிரியர் கோபம் கொள்வார்
அவை நச்சுத்தன்மை கொண்டிருக்கக் கூடும்.
அவை நாற்றமடிக்கும்
அவற்றின் தன்மை மாறிவிடும்
அறிவியல் அறையில் ஓடி விளையாடக் கூடாது.ஏன்?
ஆய்வுப் பொருள்கள் உடைந்து போகும்
ஆபத்தை உண்டாக்கும்
ஆய்வில் இடையூறு ஏற்படுத்தும்
ஆய்வில் பயன்படுத்திய ரொட்டியை, ஆய்வுக்குப் பின்னர் ___________________________
சக மாணவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
பையில் கட்டிக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
பையில் கட்டாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
நிறத்தை மாற்றிக் கொள்கிறது.
பந்துபோல் சுருண்டு கொள்கிறது
துர்நாற்றத்தை வெளியாக்குகிறது
ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.
தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?
வண்டு
நத்தை
ஆமை
கணவாய்
துர்நாற்றத்தை வெளிப்படுத்தித் தன்னை தற்காத்துக் கொள்ளும் விலங்குகள் யாவை?
பல்லி,மூட்டைப் பூச்சி
தவளை,மூட்டைப் பூச்சி
ஸ்கங்,மூட்டைப் பூச்சி
ஓநாய்,மூட்டைப் பூச்சி
நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?
பாண்ட
துருவக்கரடி
பெங்குயின்
கோமோடோ
பின்வரும் உணவுச் சங்கிலியைப் பொருத்தமாக நிறைவு செய்க.
நெற்பயிர் - வெட்டிக்கிளி - ________________ - கழுகு
மண்புழு
புலி
பாம்பு
மான்
தொட்டாற் சுருங்கி, கள்ளிச்செடி ஆகியன எவற்றைக் கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்கின்றன?
நஞ்சு
துர்நாற்றம்
கூரிய முட்கள்
சுனை
"பொங்பொங்" மற்றும் வண்ணக் காளான்களின் சிறப்புத் தன்மை என்ன?
நச்சுத் தன்மை கொண்டவை
தடிமானான மேற்பரப்பைக் கொண்டவை
அதிகமான சுனைகளைக் கொண்டவை
கூர்மையான முட்களைக் கொண்டவை
தொட்டாற் சுருங்கியின் சிறப்புத் தன்மைகள் யாவை
தொட்டதும் சுருங்கி மாற்றம் தரும்
முட்கள் நிறைந்திருக்கும்
மணமுள்ள மலர்களைக் கொண்டிருக்கும்
பிசுபிசுப்பான பாலை வெளிப்படுத்தும்
தாய்மரத்திலிருந்து விழும் தேங்காய் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு, தூரத்தில் முளைக்கிறது.இது எதைக் காட்டுகிறது?
மரங்கள் வளர இடவெளி தேவைப்படுவதை
மரங்கள் வளர நீர் தேவைப்படுவதை
மரங்கள் வளர சூரிய ஒளி தேவைப்படுவதை
மரங்கள் வளர காற்ரு தேவைப்படுவதை
விதைகள் வெடித்துச் சிதறும் தன்மைகள் கொண்ட தாவரங்கள் யாவை?
காசித்தும்பை
வெண்டை
ரப்பர்
தாமரை
விலங்குகளாலும் மனிதர்களாலும் விதைகள் பரப்பப்படும் தாவரங்களைத் தெரிவு செய்க.
கொய்யா,குமுட்டி,தக்காளி
தென்னை,நொய்வம்,தாமரை
அங்சானா,மெராந்தி,லாலாங்
டுரியான்,காசித்தும்பை,நொய்வம்
