wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தெரிவுவிடைக் கருத்தறிதல்

Total questions: 8

Worksheet time: 28mins

Name
Class
Date
1.

சிங்கப்பூரில் தற்போது ‘சார்ப்பிங் பந்து’ ( Zorbing Ball) என்ற விளையாட்டு மிகவும் புகழ்பெற்று வருகிறது. இது சிறுவர்களை மட்டுமின்றி இளையர்கள், பெரியவர்கள் என அனைவரையும் Q1.------.

a)

பாதித்துள்ளது

b)

பரபரபாக்கியுள்ளது

c)

கவர்ந்துள்ளது

d)

ஈடுபடுத்தியுள்ளது

2.

இந்தப் பந்திற்குள் புகுந்துகொண்டு நீர், நிலம் இரண்டிலும் ஓடலாம், குதிக்கலாம். நாம் இதன் உள்ளே இருந்தாலும், வெளியிலும் Q2. ------- பார்க்க முடியும். பெரிய பேரங்காடிகளிலும் , இரவு நேரச் சந்தைகளிலும் இவ்விளையாட்டைப் பரவலாகக் காணமுடிகிறது.

a)

அழகாக

b)

தெளிவாக

c)

சிறப்பாக

d)

உன்னிப்பாக

3.

தென்னை மரங்கள் மிகவும் உயரமானவை. இவற்றிற்குக் கிளைகள் கிடையாது. இவை மணல் நிறைந்த இடங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் Q3. -------- வளரக்கூடியன.

a)

பசுமையாக

b)

அகலமாக

c)

இயல்பாக

d)

செழிப்பாக

4.

தென்னை மரத்தின் ஓலைகளைக் கொண்டு பந்தல்கள் அமைப்பர். விழாக்காலங்களில் அவற்றைக் கொண்டு Q4. ------- கட்டுவர்.

a)

மாலைகள்

b)

பூச்செண்டுகள்

c)

கொடிகள்

d)

தோரணங்கள்

5.

முற்றிய தேங்காய்களைச் சமையல் செய்வதற்கும், எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுத்துவார்கள். வாழைமரத்தைப் போன்று இதன் ஒவ்வொரு பாகமும் அதனை வளர்பவருக்குப் பல Q5.________________பயன்தரம். இம்மரத்தை நன்றிக்கு உதாரணமாகக் கூறுவர்கள்.

a)

செயல்களில்

b)

வழிகளில்

c)

முறைகளில்

d)

இடங்களில்

6.

B3 விளம்பரம்

(4 மதிப்பெண்கள்)


மாபெரும் புத்தகக் கண்காட்சி

அனைவரும் வருக! பயன் பெறுக!


நாள் : 11/05/2013 மற்றும் 12/05/2013

இடம் : சீனிவாச பெருமாள் ஆலயம், சிங்கப்பூர்

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை


Ø கண்காட்சியில் எட்டாயிரம் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.


Ø நாவல், சிறுகதை, கவிதை முதலான அரிய நூல்கள் காட்சியில் இடம்பெறும்.


Ø புத்தகங்கள் வாங்கும் உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு 30% கழிவு உண்டு.


Ø தமிழ் பட்டிமன்ற சிறப்பு நிகழ்ச்சியும் உண்டு.


Q6 புத்தகக் கண்காட்சியில் எத்தனை நாட்கள் நடைபெறும்?

a)

ஒரு நாள்

b)

இரண்டு நாள்

c)

மூன்று நாள்

d)

நான்கு நாள்

7.

சுவாமி விவேகானந்தர் ஒரு துறவி. ஒருநாள் அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடைய இருக்கைக்கு எதிரே இரண்டு ஆங்கிலேயர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் ஆடம்பரமாக உடை அணிந்திருந்தனர். எதிரே சாதாரணமாக உடை அணிந்திருந்த விவேகானந்தரை கேலி செய்ததோடு கேவலமாகப் பேசினர். அவர்கள் ஆங்கிலமொழியில் பேசியது அவருக்கு நன்றாகப் புரிந்தது. ஆனாலும் அவர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார்.


Q8. ஆங்கிலேயர்கள் சுவாமி விவேகானந்தரைக் கேவலமாக நினைத்தது ஏன்?

a)

அவரது ஆடை மிகச் சாதாரணமாக இருந்ததால்

b)

அவருக்கு ஆங்கிலம் தெரியாது என நினைத்ததால்

c)

அவர் அமைதியாக இருந்ததால்

d)

அவர் பெட்டிப்படுக்கைகள் வைத்திருந்ததால்

8.

சிறிது நேரங்கழித்து அவர் கழிவறைக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் ஆங்கிலேயர்களும் அவரது பெட்டி படுக்கைகளை இரயிலுக்கு வெளியே எறிந்துவிட்டனர். பெட்டி படுக்கைகளைக் காணாமல் திகைத்தபோது ”உன் பெட்டிகள் காற்று வாங்க வெளியே சென்றிருக்கின்றன!” என்றனர். அப்போதும் அவர் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். சரியான நேரம் வரும் போது அவர்களுக்கு பாடம் புகட்டலாம் என மனதிற்குள் நினைத்துக்கொண்டு காத்திருந்தார்.


Q8 சுவாமி விவேகானந்தரின் பெட்டி படுக்கைகள் எவ்வாறு காணாமல் போயின?

a)

திருடர்கள் அவற்றைத் திருடிச் சென்றனர்.

b)

காற்றில் அவை பறந்து சென்றன.

c)

ஆங்கிலேயர்கள் அவற்றைத் தூக்கி எறிந்தனர்.

d)

ஆங்கிலேயர்கள் அவற்றை ஒளித்து வைத்தனர்.