wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி-இலக்கணம் (குற்றியலுகரம்)

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் மொத்தம் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

5

c)

6

d)

7

2.

வன்தொடர்க்குற்றியலுகரச் சொல்லைக் கொண்ட வாக்கியத்தை அடையாளங்காண்க.

a)

தோட்டத்தில் நடப்பட்ட கரும்பு செடிகள் உயரமாக வளர்ந்துள்ளன.

b)

நம் பிரதமர் கடந்த மாதம் அரபு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.

c)

ஓவியப் போட்டியில் கவின்முல்லை முதல் பரிசு பெற்றாள்.

d)

பத்து மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றனர்.

3.

காப்பு, தட்டு,முத்து , கொக்கு போன்றவை எவ்வகை குற்றியலுகரச் சொற்கள்?

a)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

வன்தொடர்க் குற்றியலுகரம்

c)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

d)

மென்தொடர்க் குற்றியலுகரம்

4.

கோடிடப்பட்ட சொல் எவ்வகை குற்றியலுகரம்?


வேடனைக் கண்ட புலி பயந்து ஓடியது.

a)

மென்தொடர்க் குற்றியலுகரம்

b)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

c)

வன்தொடர்க் குற்றியலுகரம்

d)

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

5.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

அரசு, சிரசு, பரிசு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

சேது, மணு, காது - நெடில்தொடர்க் குற்றியலுகரம்

c)

கண்டு, எருது, நன்று - மென்தொடர்க் குற்றியலுகரம்

d)

புட்டு, பட்டு, தராசு - வன்தொடர்க் குற்றியலுகரம்

6.

கீழ்க்காண்பவற்றுள் குற்றியலுகரத்தைப் பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க.

a)

வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் குறுகி ஒலிக்கும்

b)

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்

c)

குற்றியலுகரம் தனிக்குறிலை அடுத்து வராது

d)

தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் குற்றியலுகரமாகும்

7.

தவறான குற்றியலுகரச் சொற்களைக் கொண்ட வாக்கியத்தை தெரிவு செய்க .

a)

கண்ணன் கடைக்குச் சென்று இரண்டு சீப்பு வாழைப்பழங்கள் வாங்கினான்.

b)

பாட்டி வெற்றிலைப் பாக்கு வாங்கினார்.

c)

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் கவனிக்க வேண்டும்.

d)

மாணவர்கள் திடலில் பந்து விளையாடுகின்றனர்.

8.

தங்கு, எடு, காது, நாக்கு

கொடுக்கப்பட்டுள்ள சொற்குவியலில் எது குற்றியலுகரச் சொல் அல்ல?

a)

தங்கு

b)

எடு

c)

காது

d)

நாக்கு

9.

மனது வைத்தால் எல்லாம் வெற்றிகரமாக முடியும்.

கோடிடப்பட்ட சொல் எவ்வகை குற்றியலுகரம்?

a)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

c)

மென்தொடர்க் குற்றியலுகரம்

d)

வன்தொடர்க் குற்றியலுகரம்

10.

கீழ்க்காணும் சொற்களுள் இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

முரடு

b)

பட்டு

c)

செய்து

d)

மூன்று