wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அண்ணணின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால் மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துருப்பும் பல் குத்த உதவும்

2.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

3.

சிறு _________________________ பல் குத்த உதவும்.

a)

துரும்பும்

b)

கரும்பும்

c)

எறும்பும்

4.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

5.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன். தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

6.

வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

7.

சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

8.

சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கம் கொண்ட மலர்விழி தன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள தன் சேமிப்பு பணத்தைப் பயன்படுத்தியதால் ஆசிரியரி ன் நன்மதிப்பைப் பெற்றாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

9.

எல்லாரும் ஒன்றினைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

10.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்