wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி தேர்வு படிவம் 1

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

2 (அ, ஏ)

b)

2 (எது, என்ன)

c)

3 (அ, இ, உ)

2.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?

a)

2 (அகச்சுட்டு, புறச்சுட்டு)

b)

3 (அ, இ, உ)

3.

கீழ்காண்பனவற்றுள் இடுகுறிப்பெயரைத் தேர்வு செய்க.

a)

வானூர்தி

b)

மண்

c)

பறவை

4.

கீழ்காண்பனவற்றுள் காரணப் பெயரைத் தேர்வு செய்க.

a)

புல்

b)

கற்றாடி

c)

கடல்

5.

குன்றியவினை என்றால் என்ன?

a)

வாக்கியங்களில் ‘எதை’, ‘எவற்றை’, ‘யாரை’ என்ற கேள்விகளுக்கு விடை வாராது.

b)

வாக்கியங்களில் 'எதை', 'எவற்றை', 'யாரை' என்ற கேள்விகளுக்கு விடை வரும்.

6.

குன்றாவினையைச் சரியாக ஏற்றுள்ள வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

நளினி கட்டுரை எழுதினாள்.

b)

குழந்தை கதறி அழுதது.

c)

பாவாணர் சிரித்தார்.

7.

சேர்த்தெழுதுக.


பூ + அரும்பு =

a)

பூயரும்பு

b)

பூஅரும்பு

c)

பூவரும்பு

8.

பிரித்தெழுதுக.


மாவிலை

a)

மாவு + இலை

b)

மா + இலை

c)

மாவ் + இலை

9.

கீழ்காண்பனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள இணையைத் தேர்வு செய்க.

a)

பாதி + பணம் = பாதிப்பணம்

b)

அது + கண்டேன்= அதுக் கண்டேன்

c)

எவை + சிறந்தவை= எவைச் சிறந்தவை

10.

கீழ்காண்பனவற்றுள் வலிமிகா இணையைத் தேர்வு செய்க.

a)

அத்துணை + பெரியது

b)

ஏது + கண்டாய்

c)

அரை + காசு

11.

திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

a)

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுறும் தாய், தான் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சி அடைவாள்.

b)

பொறாமை, பேராசை, கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

12.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்வு செய்க.



ஒருவருடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, அவற்றுள் மிகுதியானவை எவையென அறிந்து, மிகுந்திருப்பனவற்றால் அவனைப்பற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

a)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

b)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

c)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

13.

கீழ்காணும் திருக்குறள் உணர்த்த வரும் கருத்து யாது?


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

b)

கோபம் ஒருவரை அழிக்கவல்லது.

14.

கோடிட்ட இடத்தை நிரப்புக.


மன்னனு மாசறக் கற்றோனும் _________________

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்

தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

a)

சீர்தூக்கின்

b)

கற்றறின்

c)

சீர்பார்த்து

15.

விடுப்பட்ட வரியின் பொருளைத் தேர்வு செய்க.


விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

_____________________________________

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

a)

பாலைக் கடையும்போது நெய் வெளீபடுவது போல இறையருள் வெளிப்பட்டுத் தோன்றும்

b)

மாணிக்கத்தைப் போல பேரொளியாகிய ஒறைவன் எங்கும் எதிலும் மறைந்த்துள்ளான்

c)

உறவு எனும் கோலை ஊன்றி உணர்வு எனும் கயிற்றினால்

16.

கீழ்காணும் வாக்கியங்த்திற்கு ஏற்ற இணைமொழியைத் தேர்வு செய்க.


திரு.பாலன் ______________ இன்றி அண்டை அயலாரிடம் பழகினார்.

a)

தங்கு தடை

b)

ஆதி அந்தம்

c)

கள்ளங் கபடு

17.

கீழ்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


சேகர் தன் குடும்பத்தைக் கண்டவுடன் ________________________மகிழ்ந்தான்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

தாயைக் கண்ட சேயை போல

c)

பசுமரத்தாணி போல

18.

சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவிகளைத் தேர்வு செய்க.


கண்ணன் ஆசிரியர் கூறிய திருக்குறளை மனனம் செய்து ___________வென ஒப்புவித்ததைப் பார்த்ததும் பாரதி தான் மனனம் செய்யாததை எண்ணி ___________வென நடுங்கினான்.

a)

கட கட, வெட வெ

b)

மள மள, சல சல

c)

கட கட, கிடு கிடு

19.

மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.


அரைப்படிப்பு=

ஏட்டிக்குப் போட்டி=

a)

படிப்பாளி, போட்டியில் கலந்துகொள்பவன்

b)

முழுமையாகப் படித்தவன், எதிருக்கெதிராகச் செயல்படுதல்

c)

முழுமையற்ற படிப்பு, எதிருக்கெதிராகச் செயல்படுதல்.

20.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

ஒருவர் இளமையில் கைகொள்ளும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

a)

சிலைமேல் எழுத்துப் போல

b)

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

c)

ஆடமாட்டதவள் கூடம் கோணல் என்றாளாம்.