Font size
Worksheetsதமிழ் மொழி படிவம் 5 (2)
Total questions: 10
Worksheet time: 5mins
நமக்குத் தேவையான செல்வம் ,அறிவு ,அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால் தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.
இதனைக் குறிக்கும் பழமொழி எது?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
தர்மம் தலை காக்கும்
தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்
சிறந்த பண்புடையவரோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப்பெற்று விளங்குவர்.
பழமொழி என்ன?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
தர்மம் தலை காக்கும்
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்
தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை
உதவுவதில் தவறில்லை ஆனால் உத்திரவாதியாக இருக்கக் கூடாது.
பழமொழி என்ன?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மனக்கவலை பலக்குறைவு
துணை போனாலும் பிணை போகாதே
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை அடைவான்.
பழமொழி என்ன?
தர்மம் தலை காக்கும்
தன் உயிரைப் போல் மன்னுயிரையும் நினை
சைகை அறியாதவன் சற்றும் அறியான்
கெடுவான் கேடு நினைப்பான்
நாம் செய்யும் நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் அடந்தே தீருவோம்
பழமொழி என்ன?
தர்மம் தலை காக்கும்
துணை போனாலும் பிணை போகாதே
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கெடுவான் கேடு நினைப்பான்
நம் உயிரைப் போற்றுவது போல் பிறரின் உயிரையும் போற்ற வேண்டும்.
பழமொழி என்ன?
துணை போனாலும் பிணை போகாதே
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை
தர்மம் தலை காக்கும்
காலம் கடத்துதல், மறதி ,சோம்பல் ,அதிக தூக்கம் ஒருவரின் முன்னேற்றத்தைத் தடை செய்யும்.
குறள் என்ன?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
-------
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
------
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
------------
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
---------------
நட்பு சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல. நண்பன் தவறு செய்தால் கடிந்து எடுத்துரைக்கவும் வேண்டும்.
இன்னா செய்தார்க்கும் இனியவே.....................
நகுதற் பொருட்டன்று நட்டல்.................
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்....
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்......
கெட்டது செய்தவருக்கும் நன்மையே செய்யவேண்டும்.இவ்வாறு செய்யாவிடில் சான்றாண்மை எனும் பெருங்குணம் இருந்தும் பயனில்லை.
குறள் என்ன?
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்.......
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்.....
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்.....
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு....
பிறருக்குத் துன்பம் செய்யாதே! என வலியுறுத்தும்
பழமொழிகளைக் கண்டறி.
தன் உயிரைப்போல் மன்னுயிரையும் நினை
தர்மம் தலை காக்கும்
கெடுவான் கேடு நினைப்பான்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
