NEW
Font size
Worksheetsரகர றகரவேறுபாடு
Total questions: 20
Worksheet time: 10mins
மலேசியாவின் தேசிய விலங்கான __________தற்காலமாக பெரும் அழிவை எதிர்நோக்கி வருகிறது.
அரி
பரி
அறி
பறி
தூய்மைக்கேடு ஏற்பட முக்கிய காரணம் மனிதர்களே என்பதை நாம் ________ வேண்டும்.
அரிய
பரிய
அறிய
பறிய
வெங்காயத்தை _______ வைக்குமாறு அம்மா கவிதாவிடம் கூறினார்.
அரிந்து
பரிந்து
அறிந்து
பறிந்து
அப்பா கடையில் __________ கிலோ கோதுமை மாவு வாங்கினார்.
கரை
கறை
அரை
அறை
அவ்வீட்டின் சிறிய __________ அன்னியத் தொழிலாளர்கள் பலர் தங்கியிருக்கின்றனர்.
கரையில்
கறையில்
அரையில்
அறையில்
சிறு உயிர்களிடத்திலும் ________ காட்டு என்பது வள்ளுவரின் வாக்கு.
குற்றம்
இறக்கம்
ஆசை
இரக்கம்
தென்னை மரத்தில் ஏறிய குகனைக் கீழே _________ சொல்லி தாத்தா குரல் கொடுத்தார்.
வரச்
குதிக்கச்
இரங்க
இறங்க
தன் தந்தையின் நினைவு நாளன்று, அவரை நினைத்து அம்மா கண்ணீர் __________.
சிரித்தார்
சொரிந்தார்
அழுந்தார்.
சொறிந்தார்.
ஆசிரியர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியாமல் அகிலன் தலை _____________.
சிரித்தான்
சொறிந்தான்.
சொரிந்தான்.
அழுந்தான்
வெண்சுருட்டால் சட்டெனப் பிடித்த தீ வேகமாக __________.
எறிந்தது
ஏறிந்தது
எரிந்தது
ஏரிந்தது.
குமரன் தன்னிடம் இருந்த பந்தை மீண்டும் தன் நண்பனை நோக்கி ___________.
எறிந்தான்
ஏறிந்தான்
ஏரிந்தான்
எரிந்தான்
முதலாளிக்குத் தம் தொழிலாளர்கள் நலனில் அக்_________ வேண்டும்.
திறை
கரை
திரை
கறை
அக்____________யில் மேயும் மாடு, இக்கரைக்கு வர வெகு நாள்கள் காத்திருந்தது.
திறை
கரை
திரை
கறை
தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ______ புரண்டு ஓடியது.
திறை
கரை
திரை
கறை
என் பள்ளிச் சீருடையில் ஏற்பட்ட மங்குஸ்தீன் பழத்தின் _________, சோப்புப் போட்டுத் தேய்த்தும் மறையவில்லை.
திறை
கரை
திரை
கறை
என் தாயார் பாலை ________ வைத்து மறுநாள் தயிர் ஆக்கினார்.
உறை
உரை
திரை
கறை
கவிஞர் கவிச்சக்கரவர்த்திக் கம்பரைப் பற்றி ________ நிகழ்த்தினார்.
உறை
உரை
திரை
கறை
ரேயன் தோட்ட முதலாளியை அங்குள்ள தொழிலாளர்கள் ________ என அழைத்தனர்.
உறை
உரை
துரை
துறை
கிள்ளான் _______முகத்திற்கு வந்து சேர்ந்த கப்பலைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.
உறை
உரை
துரை
துறை
திருக்குறளைத் தமிழ்_____ என்று கூறுவார்கள்.
மறை
மரை
துரை
துறை
