NEW
Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
தேன்மொழி தான் வாங்கிய புதிய கதைப் புத்தகங்கள் அனைத்தையும்________ (வினையெச்சம்)
படித்தாள்
படித்து முடித்தாள்
சுற்றுலாவிற்கு வந்த சுற்றுப்பயணிகள் அனைவரும் தோகை
விரித்து ..................................... கண்டு அதிசயித்து நின்றனர். ( பெயரெச்சம் )
ஆடும் மயிலைக்
ஆடிய மயிலைக்
நூலகப் பொறுப்பாசிரியர் மாணவர்களிடம் ........................ எடுத்த இடத்திலேயே வைக்கும்படி கூறினார். ( பெயரெச்சம் )
புத்தகங்களை வாசித்த
வாசித்த புத்தகங்களை
போட்டியில் முதல் பரிசை வெல்வதற்காக வாசுகி விரைவாக .......................... . ( வினையெச்சம் )
ஓடினாள்.
ஓடி வந்தாள்
நாடகத்தில் மன்னர் வேடம் பூண்ட மாணவன் மிகவும் சிறப்பாக ............................. . ( வினையெச்சம் )
நடித்தான்
நடித்து முடித்தான்
திருடர்களைக் கண்டு ............................. ( பெயரெச்சம் ) சத்தம் கேட்டு அண்டை வீட்டார் அனைவரும் விழித்துக் கொண்டனர்.
குரைத்த நாய்
குரைத்த நாயின்
விவசாயத் துறையின் பாதிப்பினால் கிராம மக்கள் ஏழ்மையில் .......................... . ( வினையெச்சம் )
வாழ்கிறார்கள்
வாழ்ந்து வருகிறார்கள்
கார்த்திகைத் திருநாளன்று அம்மா ............................. ( பெயரெச்சம் ) அனைத்தும் வீட்டைப் பிரகாசமாக்கின.
ஏற்றிய விளக்குகள்
அகல்விளக்குகள்
அக்காள் ............................. ( பெயரெச்சம் ) அணிந்து கொண்டு தங்கை திருவிழாவிற்குச் சென்றாள்.
கொடுத்த புத்தாடையை
புத்தாடையை
வயதானபோதிலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் ........................................ . ( வினையெச்சம் )
வாழ்கிறார்கள்
வாழ்ந்து வருகிறார்கள்
