wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வன்தொடர்க் குற்றியலுகரம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வன்தொடர்க் குற்றியலுகரம் என்பது வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகள் வருவதாகும்.

a)

சரி

b)

தவறு

2.

கழுத்து + சங்கிலி =

a)

கழுத்துச் சங்கிலி

b)

கழுத்து சங்கிலி

3.

கீழே விழுந்த மூதாட்டியின் ___________ அமுதன் எடுத்துத் தந்தான்.

a)

மூக்கு கண்ணாடி

b)

மூக்குக் கண்ணாடி

c)

மூக்குகண்ணாடி

4.

கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் எது வன்தொடர்க் குற்றியலுகரமாகும்?

a)

பாக்கு

b)

காக்கி

c)

மூக்கு

d)

சுக்கு

5.

பார்வை தெளிவாக இல்லாததால், விருந்தாளிகளை _____________ தாத்தா.

a)

உற்று பார்த்தார்

b)

உற்றுப் பார்த்தார்

6.

"சாக்குப் போக்கு"

இச்சொற்றொடர் சரியாக வலிமிகுந்துள்ளதா?

a)

சரி

b)

தவறு

7.

பேச்சுப் போட்டியில் ____________ தன் நண்பனுக்கு ஆறுதல் கூறினான் சுந்தரம்.

a)

தோற்று போன

b)

தோற்றுபோன

c)

தோற்றுப் போன

8.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தேர்தெடுக.

a)

குச்சுப் புடி

b)

நாக்குப் புண்

c)

பேச்சுத் திறன்

d)

கூட்டுச் சேர்ந்தனர்

9.

_______________________ மிகுந்த ஆர்வம் கொண்ட பூவரசன் தமிழ்த்தென்றல் பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தான்.

a)

அச்சு தொழிலில்

b)

அச்சுதொழிலில்

c)

அச்சுத் தொழிலில்

10.

வீட்டின் ____________________ தொலைத்த அக்காள் மிகவும் பதற்றமாகக் காணப்பட்டாள்.

a)

கொத்துச் சாவியைத்

b)

கொத்துச் சாவியை

c)

கொத்துசாவியைத்