Worksheetsஇலக்கணம் மொழியணிகள்
Total questions: 57
Worksheet time: 29mins
பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்
சல சல
குடு குடு
கிலு கிலு
கல கல
பின்வரும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தேர்வு செய்க.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் செல்லிவிடுகிற இயல்வு உள்ள் ஒரு நபர்.
கிணற்றுத் தவளை
நாக்கு நீளுதல்
அவசரக் குடுக்கை
ஓட்டை வாய்
திருக்குறளின் இரண்டாவது அடியை எழுதுக.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
______________________________________________________
செயற்கரிய செய்கலா தார்
தீயினும் அஞ்சப் படும்
செயற்கரிய செய்க லாதார்
செயற்கரிய செய் கலாதார்
இணைமொழிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.
மூலை முடுக்கு = ஓர் இடத்தில்
நன்மை தீமை = உயர்வு
தான தர்மம் = கொடை தருதல்
பழக்கவழக்கம் = புதிய நடைமுறைகள்
புதுமைப்பித்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் ஆவார். ஆயினும், அவர் விளம்பரங்களை விரும்பாததால் __________________________________ அமைதியாக இருந்து இலக்கியப்பணியை ஆற்றினார்.
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
கண்ணினைக் காக்கும் இமை போல
மலரும் மணமும் போல
திருமண வீட்டில் அடுக்கப்பட்டிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் _________________________ என மின்னின.
தட தட
மினு மினு
தக தக
பள பள
உயிரியல் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆளுமையாகத் தேர்வு செய்யப்பட்ட மலேசிய மருத்துவர் மஹாலெட்சுமி தனக்குக் கிடைத்த ____________________ தம் தந்தையையே சாறும் என்று பெருமைப்பட கூறினார்.
கல்வி கேள்வி
அருமை பெருமை
வரவு செலவு
பேரும் புகழும்
திரு அசோகன் __________டன் தொழிற்திறன் கல்வி பயின்றதால் இன்று சொந்தமாகப் பட்டறையை வெற்றிகரமாக நிறுவகிக்க முடிகிறது
கிணற்றுத் தவளை
முழுமூச்சு
தெள்ளத் தெளிதல்
முயக் கொம்பு
கோவிட்-19 தொடர்பான தகவலகள் __________________ மக்களுக்குச் சென்று சேர்ந்தன.
எலியும் பூனையும் போல
சிலை மேல் எழுத்து போல
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
திருக்குறளைத் தெரிவு செய்க.
நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகிவிடும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
______________________________
என்னுடைய ரேனும் இலர்
துப்பாய தூஉம் மழை
இடுக்கண் களைவதாம் நட்பு
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
காணாமல் போன தன்னுடைய தங்கத் தோட்டை கோகிலா வீட்டின் __________ தேடினாள்.
அன்றும் இன்றும்
ஒளிவு மறைவு
மூலை முடுக்குகளில்
அங்கும் இங்கும்
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல?
ஒப்புர வொழுகு
இயல்வது கரவேல்
ஓய்தல் ஒழி
உடையது விளம்பேல்
விமான தாக்குதலின் போது அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் ______________ வென சரிந்து விழுந்தது.
மட மட
தட தட
மள மள
சர சர
தேசிய அறிவியல் போட்டியில் வெற்றிப் பெற்ற பினாங்கு, இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பிரதமர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
"அப்பொழுதே அப்பா எச்சாரித்தார் இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டாமென.... நான் தான் கேட்கவில்லை.." (ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளைத் தெரிவு செய்க.)
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
நிக்கோல் டேவிட் விளையாட்டுத் துறையில் மலேசியாவின் மின்னும் நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
அனலில் இட்ட மெழுகு போல
சிலை மேல் எழுத்துப் போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
இலைமறை காய் போல
நாலப் பக்கமும்
அங்கும் இங்கும்
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
மல்லும் பகலும்
வானத்தில் நட்சத்திரங்கள் ------------ என மின்னுகின்றன.
பளீர் பளீர்
பள பள
தக தக
மினு மினு
எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்திச் செய்யும் மகளை அம்மா திட்டினார்.
திட்ட வட்டம்
ஆறப் போடுதல்
தட்டிக் கழித்தல்
கடுக்காய் கொடுத்தல்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
இகழ்வாரை நோவது எவன்
உள்ளத்து ளெல்லாம் உளன்
என்னுடைய ரேனும் இலர்
தோன்றலின் தோன்றாமை நன்று
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை ------------ -------------- வேர்வீழ்க் கும்மே
இருநிலம் பிளக்க
நீர்க்குட் பாசிபோல்
பிச்சை புகினும்
நன்றி சிறிதெனினும்
உலகமே கணினி மயமாகி கொண்டிருக்கும் போது, உனக்கு மட்டும் கணினியை இயக்கத் தெரியவில்லையே?ஆச்சரியமாக உள்ளது.
மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?
ஊக்கமது கைவிடேல்
ஓதுவ தொழியேல்
ஒப்புர வொழுகு
எண்ணுவது உயர்வு
போர் படையினில் தூங்கியவன் வெற்றி இழந்தான்!
உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்!
இன்னும் பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால்,
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!
மேற்காணும் சூழல் விளக்கும் ஆத்திசூடி எது?
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
அச்சம் தவீர்
ஆண்மை தவறேல்
மேற்காணும் அட்டவணை உணர்த்தும் வெற்றி வேற்கையை தேர்ந்தெடுக.
செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
மேற்காணும் படத்திற்கு ஏற்ற திருக்குறளை தேர்வு செய்க.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து
வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
ஒழுங்காக படித்திருந்தால் விடையை எழுதலாம் அல்லவா? இப்பொழுது கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு வருத்தப்பட்டு என்ன பயன்.
சரியான பழமொழியை தேர்ந்தெடுக.
சிறு துளி பெரு வெள்ளம்
பதறாத காரியம் சிதறாது
வெள்ளம் வருமுன் அணைபோடு
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
வினாச் சொற்களைத் தெரிவு செய்யவும்.
அவன்
அது
எங்கு
உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
13
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.
மரவேர்
கண்காட்சி
அறஞ்செய்
பட்டுப்புடவை
பின்வருவனவற்றுள் பிழையான வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
அந்தப் பையன்
எங்குச் சென்றான் ?
இப்படி கொடு
எங்கேப் போவாய்?
சொல்லின் இடையில் வராத எழுத்துகள் யாவை?
மெய் எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
கிரந்த எழுத்துகள்
சரியான எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.
கு+ங்+கு+ ம+ம்
க்+கு+ங்+க+உ+ம+ம்
க்+கு+ங்+உ+ம+ம்
க்+உ+ங்+க்+உ+ம்+அ+ம்
பிழையான வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பிரேமா சரசுவிடமிருந்து காசோலை பெற்றாள்
தமிழரசனின் தமிழாற்றல் என்னைக் கவர்ந்தது
முகிலன் ஆற்றுக்குச் சென்று மீன்களோடு பிடித்தான்
முருகம்மா சிறுவனுக்கு அறிவுரை கூறினாள்.
சுட்டெழுத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அது வளமான நாடு.
உவன் பெயர் என்ன?
அந்த மனிதர் பண்பானவர்.
எங்கு எடுத்துச் சென்றாய்?
என்னிடம் ______________ அழகான பென்சிலும் ___________ புத்தகமும் உள்ளன.
ஒரு.......ஓர்
ஓர்------ஒரு
ஓர்......ஓர்
ஒரு.....ஒரு
சரியான எழுத்துக்கூட்டல் சொற்களைத் தேர்ந்தெடுக.
தென்னங்கண்று
தெண்ணங்கன்று
தென்னங்கன்ரு
தென்னங்கன்று
இரவில் ஆந்தையின் _______________சத்தம் பயத்தை ஏற்படுத்தும்.
கத்தும்
குரைக்கும்
அலறும்
சீறும்
அது ___________________
அணிற்பிள்ளை
நகைப்பெட்டி
தமிழரசி
அமுதன்
அஃது ____________________.
ஆனந்தி
கோவில் மண்டபம்
ஆந்தை
ஆசான்
மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
காவியா காய்கறிகளை நறுக்குகிறாள்.
திருமதி பானுவும் திருமதி பார்வதியும் உரையாடினர்.
கோமதி அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றாள்.
படத்திற்கேற்ப சரியான தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.
கூட்டம்
குலை
மந்தை
கொத்து
படத்திகேற்ற சொல்லைத் தெரிவு செய்க.
வெள்ளம்
வெல்லம்
சரியான நிறுத்தக்குறிகள் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா கடையில் பழங்கள், கீரைகள்,இறைச்சி, மீன் வாங்கினார்.
அவரா உன் அண்ணன்!
நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை.
மாணவர்கள் குழுவில் தமிழ்மொழிப் பாடத்தை மீள்பார்வை செய்தனர்?
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
247
216
18
12
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
133
1333
1330
10
இனவெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
சென்ற
எங்கள்
சுற்றுலாவை
மேற்கொண்டனர்
கெடுதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வேல் + ஊர் = வேலூர்
கண் + அழகு = கண்ணழகு
மண் + குடம் = மட்குடம்
அறம் + வினை = அறவினை
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
பாக்குத் தோப்பு
செய்துக் காட்டு
கொண்டுச் சென்று
சென்றுப் பார்
பின்வரும் வாக்கியத்தின் செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
பாரதிதாசன் எழுதிய கவிதைகள் இன்றும் மக்களின் மனத்தைக் கொள்ளைக் கொள்கின்றன.
பாரதிதாசன்
கவிதைகள்
மனத்தை
கொள்கின்றன
காவேரி _______ காலணியை எடுத்தாள்.
தன்
தம்
சிறுவர்கள்____ படங்களைச் சேகரித்தனர்.
தன்
தம்
அம்மா ______ புடவையை மடித்தார்.
தம்
தன்
ஹரிணி ______ தோழியுடன் கடைக்குச் சென்றாள்.
தன்
தம்
பறவைகள்_____கூடுகளுக்குப் பறந்தன.
தன்
தம்
