wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 புதிர்ப்போட்டி

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சரியான பொருட்பெயரைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.

_________________ பாடம் போதித்தார்.

a)

ஓவியர்

b)

ஆசிரியர்

c)

மருத்துவர்

d)

தச்சர்

2.

தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

முதலாளிகள்

b)

கடைக்காரர்கள்

c)

வீரர்கள்

d)

பாடகர்கள்

3.

..................... அங்கு மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது?

a)

எதற்கு

b)

ஏன்

c)

எது

d)

எப்படி

4.

கரடி மரத்தடியில் உறங்கியது.

இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உறங்கியது

b)

கரடி

c)

மரத்தடியில்

d)

மரத்தடியில் உறங்கியது

5.

சுதந்திர தினம் எந்த மாதத்தில் கொண்டாடப்படும்?

a)

ஜூன்

b)

மார்ச்

c)

ஆகஸ்டு

d)

டிசம்பர்

6.

நாம் சிறு வயதில் கற்கும் கல்வியே அழியாமல் மனதில் பதியும்.

இக்கூற்றுக்குக் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

விளையும் பயிர் முளையில் தெரியும்

c)

அறியுடையாரை அரசனும் விரும்பும்

d)

இளமை கல்வி சிலை மேல் எழுத்து

7.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?


நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

8.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


என்ற திருக்குறள் அடிகள் உணர்த்தும் பழமொழி யாது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

ஒற்றுமையே பலம

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

9.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை


கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

உப்புக் கொடுத்தவரை

b)

உப்பு வாங்கியவரை

c)

உணவு கொடுத்தவரை

d)

உணவு வாங்கியவரை

10.

குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?


தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

a)

சுத்தம் சுகம் தரும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

d)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

11.

சாந்தினி கடைக்குச் ______________.

a)

சென்றான்.

b)

சென்றாள்.

c)

சென்றனர்.

d)

சென்றது.

12.

சரியான பொருளை தெரிவு செய்க.


"அறஞ்செய விரும்பு"

a)

தருமம் செய்வதைத் தவிர்த்தல்.

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று சொல்லுதல்.

c)

தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.

13.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

அம்மா மலமலவென மிதிவண்டி ஓட்டினார்.

b)

ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.

c)

அக்காள் கலகலவென ஓடினாள்.

14.

அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக?

a)

அளவுக்கு அதிகமாகச் சேமித்தல்.

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்.

c)

சிக்கனமாகச் செலவழித்தல்.

d)

கருமையாக இருத்தல்.

15.

அரக்கப் பரக்க என்ற மரபுத்தொடருக்கு எற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

அவசரம்

b)

பதற்றம்

c)

அவசரமும் பதற்றமும்

d)

பயம்

16.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________

a)

யாண்டும் இடும்பை இல.

b)

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

புண்ணுடையர் கல்லா தவர்.

d)

இன்மை புகுத்தி விடும்

17.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டனர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளிப்பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்

18.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

19.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கந்தன் வகுப்பறையில் புத்தகம் வாசித்தாள்.

b)

சுந்தரியும் கலாவும் மெதுவோட்டம் ஓடினார்.

c)

அகிலன் மேசையைத் துடைத்து சுத்தம் செய்தான்.

d)

அள்ளி தோட்டத்தில் பூக்களைப் பறித்தனர்

20.

ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

மெத்தை - மெத்தைங்கள்

b)

முட்டை - முட்டைக்கள்

c)

சிங்கம் - சிங்கம்கள்

d)

மரம் - மரங்கள்

21.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்

a)

மலரும் மணமும் போல.

b)

நகமும் சதையும் போல.

c)

எலியும் பூனையும் போல.

d)

சிலை மேல் எழுத்து போல.

22.

சினைப்பெயரைக் குறிக்கும் சொல் எது?

a)

குட்டை

b)

திடல்

c)

வாய்

d)

பாடுதல்

23.

உயிர்மெய் நெடில்


ம்+ ஈ =_____________________

a)

மா

b)

மூ

c)

மே

d)

மீ

24.
a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்

25.

சிறுவர்கள் பந்து ______________________________.

a)

விளையாடினான்.

b)

விளையாடியது.

c)

விளையாடினர்.

d)

விளையாடினார்.

26.
a)

புஷ்பம்

b)

ஸர்ப்பம்

c)

ஜாடி

d)

ஹாரன்

27.

திசைகள் மொத்தம் எத்தனை?

a)

6

b)

5

c)

9

d)

8

28.

திசைகளை அறிய எந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்?

a)

களிமண்

b)

அடிக்கோல்

c)

திசைக்காட்டி

d)

இசைக்கருவி

29.

சூரியன் எந்தத் திசையில் தோன்றும்?

a)

வடக்கு

b)

தெற்கு

c)

கிழக்கு

d)

மேற்கு

30.

பாடலை வாசித்துப் பதிலளிக்கவும்.


நிலா


நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

மலைமீது ஏறி வா

மல்லிகைப் பூ கொண்டு வா

வட்ட வட்ட நிலாவே

வண்ண முகில் பூவே

பட்டம் போல பறந்து வா

பம்பரம் போல சுற்றி வா


கேள்வி : நிலா என்னும் சொல்லுக்கு இன்னொரு சொல் என்ன?

a)

மதி

b)

வட்டம்

c)

ஞாயிறு

31.

தேங்காய் ............... விழுந்து சிறுவன் காயமடைந்தான்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

32.

அப்பா நட்ட வாழைமரம் .............. தள்ளியது.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

33.

அம்மா சோளக்.................களை வாங்கி வந்து அவித்துக் கொடுத்தார்.

a)

கதிர்

b)

கொத்து

c)

சீப்பு

d)

தார்

34.

மாணவர்கள் .............. அமர்ந்து ஆய்வுகளைச் செய்தனர்.

a)

கூட்டமாக

b)

குழுவில்

c)

படையில்

d)

மந்தையில்

35.

நடவடிக்கை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இராணுவப் .................... மக்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தியது.

a)

படை

b)

கூட்டம்

c)

கும்பல்

d)

குழு

36.

படத்தில் தெரிவது....

a)

தோட்டம்

b)

தோப்பு

c)

குவியல்

d)

கொள்ளை

37.
மாறன் தம்பியின் மேலிருந்த கோபத்தினால் பற்களை ______________ வென கடித்தான்.
a)
பள பள
b)
நற நற
c)
மள மள
d)
தக தக
38.
சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
நற நற
b)
தக தக
c)
மள மள
d)
சல சல
39.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

a)

நமக்கு வேண்டியவற்றைப் பெற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.

b)

நமக்கு வேண்டியவற்றைப் பெற ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.

c)

நமக்கு வேண்டியவற்றைப் பெற நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

d)

நமக்கு வேண்டியவற்றைப் பெற நாமே முயற்சி செய்ய வேண்டும்.

40.

கடவுளை நம்பினோர்

a)

கைவிடுவார்

b)

கைக்கழுவுவார்

c)

கைவிடப்படார்

d)

கைத்தட்டுவார்