wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழிப் புதிர் படிவம் 3

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பாடவேளையின்போது _________ வென பேசிக் கொண்டிருந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.

a)

சட சட

b)

தொண தொண

c)

கிடு கிடு

d)

விறு விறு

2.

வீட்டிற்கு வந்த விருந்தினரை கீதா ____________ மலர வரவேற்றாள்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

அகமும் புறமும்

d)

கள்ளங்கபடு

3.

தோட்டத்தில் ________ இருந்த பூச்செடிகளுக்குத் தாத்தா நீர் பாய்ச்சினார்

a)

நாணிக் கோணி

b)

அகமும் புறமும்

c)

சட்டத் திட்டம்

d)

வாடி வதங்கி

4.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் புதுமணத் தம்பதிகளை _________ இணைப்பிரியாமல் வாழவேண்டுமென வாழ்த்தினர்.

a)

பசுமரத்தாணிப் போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

மணியும் ஒலியும் போல

d)

இலைமறை காய் போல

5.

தேர்வுக்கு ________ படித்த அமுதன் இறுதியில் சிறந்த தேர்ச்சி பெறாமல் வருந்தினான்.

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

உள்ளங்கை நெல்லிக் கனி போல

c)

அழகுக்கு அழகுச் செய்வது போல

d)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

6.

தலைமுறை தலைமுறையாகக் காக்கப்பட்டு வந்த பண்பாட்டு மரபுகளை நாம் என்றும் போற்ற வேண்டும்.

a)

வாழையடி வாழை

b)

தோள் கொடுத்தல்

c)

உச்சி குளிர்தல்

d)

வீடு வாசல்

7.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

________ எனக்கேட்ட தாய்

a)

கற்றோன்

b)

பார்ப்போன்

c)

சான்றோன்

d)

சான்றோம்

8.

மலை உச்சியில் வீசியக் காற்று _______________________ என இருந்தது

a)

சிலு சிலு

b)

பர பர

c)

துரு துரு

d)

தள தள

9.

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் மேனகா தன் வேலைகள் அனைத்தையும் ________________ என செய்யத் தொடங்கினாள்.

a)

சிலு சிலு

b)

பர பர

c)

தள தள்

d)

கல கல

10.

குழந்தைகள் என்றாலே ________________________வென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது இயல்பான ஒரு செயலாகும்.

a)

துரு துரு

b)

தள தள

c)

பர பர

d)

சிலு சிலு

11.

வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்ற பாலனின் கனவு, அவனது தந்தையின் திடீர் மரணத்தினால் ____________________ ஆனது.

a)

உடும்புப் பிடி

b)

ஈயாடவில்லை

c)

கானல் நீர்

d)

இடித்துரைத்தல்

12.

காட்டில் உள்ள கனி வகைகளை கொண்டு வந்த குகனின் அன்பிற்கு இராமன் _____________________________.

a)

ஈயாடினான்

b)

உடும்புப் பிடித்தான்

c)

இடித்துரைத்தான்

d)

தலை வணங்கினான்.

13.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

________________________________________

a)

இழுக்க முடையார்வாய்ச் சொல்

b)

வழுக்க முடையார்வாய்ச் சொல்

c)

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

d)

அழுக்க முடையார்வாய்ச் சொல்

14.

தோட்டத்தில் வாழை மரம் _____________________ என செழிப்பாக வளர்ந்து காணப்படுகின்றன.

a)

தள தள

b)

பர பர

c)

சிலு சிலு

15.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும்

வெள்ளையர்களை எதிர்க்கும் தனது கொள்கையில் _______________________________ இருந்தவர்

பாரதியார் ஆவார்.

a)

ஈயாடவில்லை

b)

உடும்புப் பிடி

c)

இடித்துரைத்தல்

d)

கானல் நீர்

16.

1. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


ஊமை கண்ட கனாப் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

17.

2. உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


மலரும் மணமும் போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

18.

10. சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


காவல்துறை அதிகாரியான குமரன், தன் மகன் ஒரு போதைப்பித்தன் என்ற உண்மையை வெளியேக் கூற முடியாமல் தவித்தார்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

19.

11. கோடிட்ட இடத்தை நிரப்புக.


ஊமை --------------- கனாப் போல

a)

பார்த்த

b)

காணும்

c)

கண்டதும்

d)

கண்ட

20.

13. சரியான விடையைத் தேர்ந்தெடுக.


இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

21.

போலிகள் எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

22.

இஃது எவ்வகைப் போலி?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

23.

ஒரு சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

24.

ஒரு சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து, அதே பொருளை உணர்த்துமாயின் அது __________ எனப்படும்.

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

25.

'செதில்' என்பது .....................

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

26.

கொடிமலையில் _______________ வென்று வீசிய மென்குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.

a)

துரு துரு

b)

வெட வெட

c)

சிலு சிலு

d)

நச நச

27.

தாமதமாக எழுந்த ராமு __________வென பள்ளிக்கு ஓடினான்.

a)

மட மட

b)

சர சர

c)

தள தள

d)

பர பர

28.

தன் செயலில் கவனமாய் இருத்தல்

a)

இலவு காத்த கிளி போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

29.

நண்பனின் பணத்தைத் தான் எடுக்கவில்லை என்று சொன்ன அலியின் சட்டைபையில் அப்பணத்தைக் கண்டுபிடித்ததும் அவன் முகத்தில் _________________.

a)

கானல் நீர்

b)

ஈயாடவில்லை

c)

தலை வணங்கினான்

d)

இடிந்துரைத்தான்

30.

பாட நேரத்தில் நண்பனுடன் கதை பேசிக் கொண்டிருந்த பாலனை ஆசிரியர் _______________.

a)

தலை வணங்கினார்.

b)

கானல் நீர்

c)

இடிந்துரைத்தார்

d)

உடும்புப் பிடி