NEW
Font size
Worksheetsபழமொழிகள் ஆண்டு 4
Total questions: 8
Worksheet time: 4mins
1. கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
2. அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
3. வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
4. சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
5. காற்றுள்ள போதே _________ கொள்
பற்றிக்
தூற்றிக்
துற்றிக்
6. சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கம் கொண்ட மலர்விழி தன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படிருந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள தன் சேமிப்பு பணத்தைப் பயன்படுத்தியதால் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
7. கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சிக்கனம் சீரளிக்கும்
8. 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்னும் பழமொழியின் பொருள் என்ன?
கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடுதல்.
உடல் நலம் பேணுதல்
காற்றைச் சுவாசித்தல்
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சாதிப்பதாகும்.
