wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான இணைமொழிகளைத் தெரிவு செய்க.


லங்காவியில் நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

A. எலும்பும் தோலும்

b)

B. உருண்டு திரண்டு

c)

C. இன்ப துன்பம்

d)

D. மேடு பள்ளம்

2.

புத்தர் பெருமானின் வாக்குப்படி மாந்தர்கள் தத்தம் செயலுக்கு ஏற்ப ___________ அடைவர்.

a)

A. மேடு பள்ளம்

b)

B. ஆடல் பாடல்

c)

C. நன்மை தீமை

d)

D. அருமை பெருமை

3.

கௌரி ___________ இறைவழிபாடு செய்யத் தவற மாட்டாள்.

a)

A. காலையும் மாலையும்

b)

B. பழக்க வழக்கம்

c)

C. அங்கும் இங்கும்

d)

D. அன்றும் இன்றும்

4.

அந்த அடையாளம் தெரியாத நபர் _______________ பார்த்துக் கொண்டே அந்தச் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார்.

a)

A. சுற்றும் முற்றும்

b)

B. அன்றும் இன்றும்

c)

C. தாயும் சேயும்

d)

D. கல்வி கேள்வியும்

5.

பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.

a)

தங்கம்

b)

உணவு

c)

கன்று

d)

அம்பு

6.

நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

d)

செய்தி வாக்கியம்

7.

செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.

a)

படித்தான், செய்தான்

b)

பாடங்களை, தேர்வினை

c)

முறையாகப், சிறப்பாகச்

d)

பாடங்களைப் படித்தான்

8.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

9.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

10.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

11.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

12.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

13.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

14.

அல்லும் பகலும் என்பது __________________

a)

உவமைத் தொடர்

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

மரபுத்தொடர்

15.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
16.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள்

b)

மகிழுந்து

c)

நெகிழிகள்

d)

குழந்தைகள்

17.

கீழ்க்காணும் வாக்கியத்தில் ஆண்பாலைக் குறிக்கும் விடையைத் தேர்ந்தெடுக.


வனவிலங்கு அதிகாரியான நக்கீரன், ஊர் மக்களிடம் சிங்கம், புலி போன்ற மிருகங்களை வேட்டையாடுவது சட்டத்திற்குப் புறம்பானதென்று எச்சரித்தார்.

a)

நக்கீரன்

b)

மிருகங்களை

c)

மக்களிடம்

d)

புலி

18.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது; ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை வழியாக சென்றனர்.

மேலே உள்ள உரைநடையிலுள்ள பலர்பாலை அடையாளம் காண்க.

a)

பழநி

b)

தண்டாயுதபாணி

c)

சுவாமி

d)

பக்தர்கள்

19.

சேர்த்தெழுதுக.


பெட்டியை + திறந்தான்

a)

பெட்டி திறந்தான்

b)

பெட்டியை திறந்தான்

c)

பெட்டியைத் திறந்தான்

20.

உதயனுக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆகவே, அவன் அனைவரிடமும் நெருங்கிப் பழக மாட்டான்.

a)

சரி

b)

தவறு

21.

என் பள்ளிக்கூடம் சிறியது. ________, என் பள்ளிக்கூடம் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

a)

ஆகையால்

b)

ஆனால்

c)

ஆயினும்

22.

அம்மா என்ன சமைத்தார்

a)

முற்றுப்புள்ளி

b)

வினாக்குறி

23.

_____________ வானில் விரைந்து சென்றது.

a)

விமானம்

b)

விமானங்கள்

24.

மந்திரி : அன்று என் வேண்டுகோளுக்குத் தாங்கள் _______________

மன்னர் : ஆமாம். தங்கள் சொற்படி நடந்திருந்தால் இந்தத் __________ ஏற்பட்டிருக்காது.

a)

கை கொடுக்கவில்லை / கரி பூசுதல்

b)

ஆழம் பார்க்கவில்லை / ஈவிரக்கம்

c)

செவி சாய்க்கவில்லை / தலை குனிவு

d)

அள்ளி இறைக்கவில்லை / காது குத்துதல்

25.

________________________________________________

மாடல்ல மற்றை யவை


குறட்பாவை நிறைவு செய்க.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

b)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

c)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

d)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

26.

கீழ்காணும் வாக்கியத்திலுள்ள ஒருமைச் சொற்களைப் பன்மையாக்குக.

அது அவன் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.

a)

அது அவன்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றது.

b)

அவை அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றன.

c)

அதுகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றதுகள்.

d)

அவைகள் அவர்களின் பின்னால் வாலாட்டிக்கொண்டு சென்றார்கள்.

27.

கீழ்க்காணும் குறட்பாவில் எத்தனை வல்லின உயிர்மெய் எழுத்துகள் உள்ளன?


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

a)

ஏழு

b)

ஒன்பது

c)

பதினொன்று

d)

பதின்மூன்று

28.

'வையம்' எனும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு

a)

பாடல்

b)

உலகம்

c)

கடல்

d)

காலை

29.

ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங்கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும். இல்லையேல் அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நல்லது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு.

a)

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார் பொருத்தல் தலை.

b)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

c)

ஞாலங் கருதினுங் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்

d)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

30.

அங்கு + சென்றான் =


சேர்த்தெழுதுக

a)

அங்குசென்றான்

b)

அங்சென்றான்

c)

அங்குச்சென்றான்

d)

இங்குச்சென்றான்