wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்ப்போட்டி 2

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

இப்படத்திற்குச் சரியான செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சீதா பழங்களைப் பறிக்கின்றாள்!

b)

சீதா பூக்களைப் பறிக்கின்றாள்.

c)

சீதா பூக்களைப் பறிக்கின்றாள்?

2.

செய்தி வாக்கியத்தியத்தைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

செய்தி வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இருக்கும்.

b)

வாக்கியத்தில் ஒரு கருத்தை தெரிவிக்கப்படும்

c)

வாக்கியத்தில் வினாச்சொல் இருக்கும்.

3.

திணை எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

4.

இவற்றுள் எது அஃறிணை ஆகும்?

a)

ஆசிரியர்

b)

நாய்

c)

அப்துல் கலாம்

d)

இறைவன்

5.

மெல்லெழுத்துகளைத் தேர்ந்தெடு.

a)

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

c)

ங்,ஞ்,ன்,ந்,ம்,ண்

6.

மரங்கள், சிங்கங்கள்,குயில்கள்


மேற்காணும் சொற்கள் எவ்வகை பால் வகையைச் சேர்ந்தது.

a)

பலர்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

d)

ஆண்பால்

7.

முன்னிலையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

நான்

b)

அவை

c)

பிரவின்

d)

நீர்

8.

பட்டம் வானில் பறக்கிறது.


கோடிடப்பட்ட சொல் எந்த காலத்தைக் குறிக்கிறது?

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

d)

ஒரு காலம்

9.

படத்திற்கு ஏற்ற சரியான தொழிற்பெயரைத் தேர்ந்தெடு.

a)

மருத்துவர்.

b)

சிகிச்சை அளித்தல்

c)

டாக்டர் ரிஷா

d)

மருத்துவமனை

10.

அப்பா கடையில் ஒரு __________________ வாழைப்பழம் வாங்கினார்.

a)

சீப்பு

b)

குலை

c)

கொத்து

d)

குவியல்

11.

சீத்தம்மா _____________நிகழ்ச்சியில் நடனம் ஆடினாள்.

a)

களை

b)

கழை

c)

கலை

12.

ஓதாமலொரு நாளு மிருக்க வேண்டாம்.


என்பதை இயற்றியவரைத் தேர்ந்தெடு.

a)

பாரதியார்

b)

உலக நாத பண்டிதர்

c)

ஒளவையார்

d)

திருவள்ளுவர்

13.

தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.


எனும் பொருளின் உலகநீதியைத் தெரிவு செய்.

a)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.

b)

போகவிட்டுப் புறச்சொல்லித் திரிய வேண்டாம்.

c)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்.

d)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

14.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது காலப்பெயரைக் குறிக்கிறது?

a)

தலை

b)

திங்கள்

c)

பள்ளிக்கூடம்

d)

புத்தகம்

15.

கோலம் அக்காவால் போடப்பட்டது? வாக்கியத்தில் இருக்கும் வேற்றுமை உருபு என்ன?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

16.

அக்கட்டடம் சில நொடிகளுள் _______வென இடிந்து விழுந்தது.

சரியான இரட்டைக்கிளவி என்ன?

a)

மள மள

b)

மட மட

c)

தட தட

d)

சர சர

17.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது

b)

நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக் கூடாது

c)

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

18.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். வல்லவனுக்கு என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)

பலசாலி

b)

திறமைசாலி

19.

கடுக்காய் கொடுத்தல் எனும் மரபுத் தொடரின் பொருள் என்ன?

a)

உறுதி பூணுதல்

b)

உறுதியாக

c)

ஏமாற்றித் தப்புதல்

20.

திருவள்ளுவர் மொத்தம் எத்தனை திருக்குறள்களை இயற்றியுள்ளார்?

a)

1200

b)

1330

c)

1440

21.

இப்படத்தை உணர்த்தும் சரியான பழமொழி எது?

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

22.

இப்படத்தை உணர்த்தும் இணைமொழியைத் தேர்ந்தெடுக.

a)

அருமை பெருமை

b)

பழக்க வழக்கம்

c)

ஆடிப்பாடி

23.

என் அம்மா மிகவும் அன்பானவர். _________ சில சமயங்களில் கண்டிப்பாக நடந்து கொள்வார்.

a)

எனவே

b)

ஆகவே

c)

மேலும்

d)

இருப்பினும்

24.

சரியான விடையைத் தெரிவு செய்க.

படைவீரன் ________யின் மீது ஏறிப் போருக்குச் சென்றான்.

a)

அவ்வானை

b)

அய்யானை

c)

அவ்யானை

25.

கடல் + அலை

சரியாகப் புணர்ந்து வந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

கடல் அலை

b)

கடலலை

26.

கீழ்காணும் படங்களில் தொழிற்பெயரைக் காட்டும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
27.

குறளின் முதல் அடியைப் பூர்த்தி செய்க.

_______________________________________

தோன்றலின் தோன்றாமை நன்று.

a)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

28.

சினைப்பெயர் என்றால் என்ன?

a)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

b)

ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது

c)

குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது

29.

அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

வாக்கியத்தில் வரும் அவர்கள் எந்த வகை இடத்தைச் சேர்ந்தது?

a)

தன்னிலை

b)

முன்னிலை

c)

படர்க்கை

30.

மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் நால்வர்கள் (சமயக்குரவர்) ஆவர் ஒருவரைத் தவிர..

a)

திருஞானசம்பந்தர்

b)

சுந்தரமூர்த்தி நாயனார்

c)

மாணிக்கவாசகர்

d)

சமண முனிவர்

31.

காலையுணவு. பிரித்தெழுக.

a)

காலை + உணவு

b)

காலை + யுணவு

c)

காலையு + ணவு

32.

சரியான இலக்கண மரபு கொண்ட சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

ஒரு பூனை

b)

ஓர் பூனை

c)

அஃது பூனை

33.

வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்.

a)

9

b)

10

c)

7

d)

8

34.

வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்.

a)

9

b)

10

c)

7

d)

8

35.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல். இப்பொருளை உணர்த்தும் சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

இலைமறை காய் போல

b)

காட்டு தீ போல

c)

சூரியனைக் கண்ட பனி போல

d)

அனலில் இட்ட மெழுகு போல

36.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

மக்கள்-மக்கள்கள்

b)

பணம்-பணகள்

c)

மரம்-மரம்கள்

d)

கல்-கற்கள்

37.

பலவின்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
38.

எஃது இடப்பெயர் ஆகும்?

a)

விதை

b)

பள்ளிக்கூடம்

c)

யானை

d)

மாலை

39.

ஊட்டிய எனும் சொல்லின் அடிச்சொல் யாது?

a)

ஊட்டு

b)

ஊட்டிய

c)

ஊட்டுதல்

d)

ஊட்டினான்

40.

பழமொழியை நிறைவு செய்க.

அழுத பிள்ளை பால் ______.

a)

கேட்கும்

b)

குடிக்காது

c)

குடிக்கும்

d)

அழுவும்

41.

குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்'

a)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

b)

இறைவன் என்றும் மக்களைப் பாதுக்காப்பான்.

c)

இறைவன் நம்பிக்கை ஆனவன்.

d)

இறைவனை நம்பினால் செல்வம் கிடைக்கும்

42.

தாயை எவ்வேளையிலும் மறக்கக்கூடாது எனும் பொருளுக்கேற்ற செய்யுள் எது?

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

படிக்காமல் லொருநாளு இருக்க வேண்டாம்.

c)

மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்.

d)

வங்சனைகள் செய்வரோடு டிணங்க வேண்டாம்.

43.

எது புதிய ஆத்திச்சூடி ?

a)

இயல்வது கரவேல்

b)

ஆறுவது சினம்.

c)

அச்சம் தவிர்

d)

உடையது விளம்பேல்

44.

கல்வியைக் கண்களாகக் கூறும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

45.

இறந்த காலச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

பறக்கும்

b)

வருவான்

c)

வந்தான்

d)

வருகிறான்

46.

அப்படத்தின் நகைச்சுவையைக் கண்ட அனைவரும் __________வெனச்   

  சிரித்தனர். கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

சல சல

b)

கல கல

c)

மட மட

d)

தட தட

47.

இவற்றில் எந்த நிலை மொழி ஈற்றில் வலிமுகும்?

a)

அங்கு, இங்கு, எங்கு

b)

படி

c)

சில , பல

d)

அது, இது, எது

48.

படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்ந்தெடுக.

a)

நகமும் சதையும் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

d)

எலியும் பூனையும் போல

49.

கொடுக்கப்பட்ட சொல்லுக்குச் சரியான அடிச்சொல்லைத்  தேர்ந்தெடுக.

a)

ஆண்

b)

ஆண்டு

c)

ஆள்

d)

ஆண்ட

50.

________________நம் முன்னோர்கள் எக்காரியத்தையும் செய்தாலும் கால நேரம் பார்த்துதான் செய்வார்கள்.

a)

சாக்கு போக்கு

b)

அன்றும் இன்றும்

c)

அண்டை அயலார்

d)

இன்ப துன்பம்