wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கணம் 2

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

126

c)

90

d)

216

2.

சரியாண விடையைத் தெரிவு செய்க.

a)

கல் + தூண் = கற்றூண்

b)

புல் + தரை = புற்தரை

c)

பொன் + குடம் = பொட்குடம்

d)

தனி + சிறப்பு = தனிசிறப்பு

3.

வல்லின உகரத்தை ஏற்றிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பூட்டு

b)

கதவு

c)

அணு

d)

வாயு

4.

பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

வீடு

b)

விவசாயி

c)

தோட்டம்

d)

கிளை

5.

பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.


மலேசிய மக்கள் __________ நாட்டில் ஒற்றுமை நிலவ பாடுபட வேண்டும்.

a)

தன்

b)

தாம்

c)

தங்கள்

d)

தாங்கள்

6.

தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அறிந்துக் கொண்டேன்.

b)

விட்டுச் சென்றார்.

c)

தைத் திங்கள்

d)

கன்றுக் குட்டி

7.

பின்வருவனவற்றுள் கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் யாது?

a)

புஷ்பம்

b)

ஐயை

c)

ஜாடி

d)

ஸர்பம்

8.

பின்வரும் வாக்கியத்திற்கு ஏற்ற நிறுத்தக் குறிகளைத் தெஇவு செய்க.


குமரா _ என்னை விட்டுச் செல்வாயோ _

a)

! ?

b)

, ?

c)

! .

d)

! !

9.

கீழ்க்காணும் வாக்கியத்திலுள்ள காலியிடத்துக்குச் சரியான இடைச் சொல்லைத் தெரிவு செய்க.


குமுதனுக்கு உடல்நலம் சரியில்லை _________ பள்ளிக்குச் சென்றான்.

a)

எனவே

b)

ஆதலால்

c)

ஆகவே

d)

இருப்பினும்

10.

கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.


ஏழை ___________ அரசாங்கம் கல்வி நிதி வழங்கியது.

a)

மாணவர்களால்

b)

மாணவர்களின்

c)

மாணவர்களுக்கு

d)

மாணவர்களை

11.

பின்வருவனவற்றுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாதவி ஆடினாள்.

b)

ஆசிரியர் பாடம் போதித்தார்.

c)

கபிலன் உறங்கினான்.

d)

கோமதி கதை சொன்னாள்.

12.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.


i. சேவல் காலையில் உதிக்கிறான்.

ii. சூரியன் கிழக்கில் உதிக்கிறான்.

iii. அப்பா வேலைக்குச் சென்றார்.

iv. குயவன் பானை வனைந்தான்.

a)

i, ii, iii

b)

ii, iii, iv

c)

i, iii, iv

d)

i, ii, iv

13.

சரியான எழுத்துக் கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

பொங்கள் விழா

b)

பொங்கல் விலா

c)

பொங்கள் விளா

d)

பொங்கல் விழா

14.

பின்வரும் சொற்றோடரைப் பிரித்தெழுதுக.


சந்திரோதயம்

a)

சந்திர + உதயம்

b)

சந்திரன் + உதயம்

c)

சந்தி + ரோதயம்

d)

சந்திரன் + ரோதயம்

15.

பின்வரும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


இடையன் ஆடு மேய்த்தான்.

a)

இடையன் ஆடு மேய்த்தான்.

b)

ஆடு இடையனை மேய்த்தது.

c)

ஆடு இடையனால் மேய்க்கப்பட்டது.

d)

இடையன் ஆடால் மேய்க்கப்பட்டது.

16.

ஓர் ஆடு இலைகளைத் தின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எத்தனை உயிர் நெட்டெழுத்துகள் உள்ளன.

a)

2

b)

3

c)

0

d)

1

17.

திணை பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

திணை மூன்று வகைப்படும்

b)

திணை இரண்டு வகைப்படும்

c)

மனிதர், தேவரைக் குறிப்பது அஃறிணையாகும்.

d)

ஆமை உயர்திணையாகும்.

18.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

19.

_________________ என்ற சொல்லின் முன் வருவது ஓர் உயிரெழுத்து ஆகும்.

a)

கடல் ஆமை

b)

இல்லம்

c)

சாட்டை

d)

மல்லிகை

20.

மேற்காணும் படத்திற்கு ஏற்ற தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.

a)

கட்டு

b)

குவியல்

c)

தோப்பு

d)

கும்பல்

21.

கொடுக்கப்பட்ட உரையாடலில் வண்ணமிடப்பட்டுள்ள சொல் உணர்த்தும் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.


ஆசிரியர் : நேற்று கொடுத்த வீட்டுப்பாடத்தைச்

செய்து முடித்து விட்டீர்களா?


மாணவன் : ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்

கையில் காயம் ஏற்பட்டு விட்டதால்

என்னால் எழுத முடியவில்லை.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

பொருட்பெயர்

22.

உரையாடுகிறார்கள்


மேற்கண்ட சொல்லையொட்டிய தவறான கூற்றைத் தெரிவு செய்க..

a)

எதிர்காலம்

b)

ஒருமை

c)

ஒன்றன்பால்

d)

அனைத்தும்

23.

உயிரெழுத்தைப் பற்றி சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

உயிரெழுத்துகள் மொத்தம் 13.

b)

குறில் 7

c)

பிற எழுத்துகளின் துணையின்றித் தனித்து ஒலிக்கக்கூடியவை.

d)

நெடில் 5

24.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வரும் செயப்படுபொருள் எவ்வகை பாலைக் குறிக்கின்றது.


திஷன் வேகமாக ஓடி அந்தப் பந்தை உதைத்தான்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

25.

உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வருவது ______________

a)

ஓர்

b)

அஃது

c)

ஒரு

d)

இஃது

26.

பூவரசன் அந்தப் பாழடைந்த வீட்டின் உள்ளே _________________.

a)

நுழைந்தாள்

b)

நுழைந்தார்

c)

நுழைந்தான்

d)

நுழைந்தனர்

27.

வினா எழுத்துகள் யாவை?

a)

எ, யா, மா, ஓ, ஏ

b)

ஏ, யா, நீ, ஓ, ஏ

c)

ஏ, யா, நா, ஓ, ஏ

d)

எ, யா, ஆ, ஓ, ஏ

28.

சரியான ஒருமை வாக்கியத்தைத் தேந்தெடு.

a)

குயவன் பானை வனைந்தான்.

b)

சிங்கம் ஆடுகளைத் துரத்தின.

c)

மாணவர் திடலில் பந்து விளையாடுகின்றனர்.

d)

மாடு புல் மேய்ந்தன.

29.

இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

காலத்தின் பெயரைக் குறிப்பது.

b)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

c)

ஒருவரின் குணத்தைக் குறிப்பது.

d)

ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.

30.

தன் மகன் வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட ஆரம்பித்தவுடன் கமலாவின் துன்பங்கள் யாவும் _________________________.

a)

நீங்கின

b)

நீங்குகிறது

c)

நீங்கவுள்ளது

31.

கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?


கதிரேஷன் அம்மா சமைத்த உணவைச் சுவைத்து உண்டான்.

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

c)

எழுவாய்

d)

தொழிற்பெயர்

32.

கீழ்காண்பனவற்றுள் எஃது உயிர் குற்றெழுத்தில் தொடங்கும் சொல் அல்ல?

a)

ஒட்டகம்

b)

ஐயர்

c)

அணில்

d)

எட்டு

33.

உயிர் நெட்டெழுத்தைக் கொண்டிருக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காடு

b)

மாலை

c)

ஆந்தை

d)

அணில்

34.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இடம் பெறாத பெயர்ச்சொல் எது?


  • கற்பித்தல் ஆசிரியர் பணி.
  • அப்துல் கலாம் தமிழ்ப் பற்றுமிக்கவர்.
  • அம்மா அன்பானவர்.
a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பொருட்பெயர்

35.

அருண் வாங்கிய புதிய மகிலுந்து அலகாக இருந்தது.


மேற்காணும் வாக்கியத்தில் உள்ள இலக்கணப் பிழை யாது?

a)

ழ கரம்

b)

ல கரம்

c)

ர கரம்

d)

ற கரம்

36.

1. எழுவாயைக் கண்டறிக.


கபிலன் ஓவியம் வரைகிறான்.

a)

ஓவியம்

b)

வரைகிறான்

c)

கபிலன்

37.

2. வாக்கியத்தில் படர்க்கை சொல்லைத் தெரிவு செய்க.


கந்தனும் அவனது நண்பர்களும் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

a)

பல்லாங்குழி

b)

கந்தனும்

c)

நண்பர்களும்

d)

அவனது

38.

3. ஐ என்ற உருபு அடங்கிய சொற்களைத் தெரிவு செய்க.

a)

குதிரை

b)

கடிவாளத்தை

c)

புத்தகத்தை

d)

ஆபத்தை

39.

4. எதிர்காலத்தைக் காட்டும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கதிரவன் ஓவியம் வரைவான்.

b)

கதிரவன் ஓவியம் வரைந்தான்.

c)

கதிரவன் ஓவியம் வரைகிறான்.

40.

5. சரியான வினாச்சொல்லைத் தெரிவு செய்க.


நீ நேற்று _________________ சென்றாய்?

a)

என்ன

b)

எங்கு

c)

எப்போது

d)

எதற்கு

41.

6. சரியான பால் சொல்லைத் தெரிவு செய்க.


சிறுமி மேடையில் நடனம் _______________.

a)

ஆடுகிறான்

b)

ஆடுகிறார்கள்

c)

ஆடியது

d)

ஆடுகிறாள்

42.

7.படத்திற்கு ஏற்ற ஒரே பொருள் தரும் சொற்களைத் தெரிவு செய்க.

a)

அக்னி

b)

தீ

c)

நெருப்பு

d)

நீர்

43.

8. வாக்கியத்திலுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


கஜேந்திரன் வீட்டிற்குச் சாயம் பூசுகிறான்.

a)

சாயம்

b)

வீட்டிற்கு

c)

கஜேந்திரன்

d)

பூசுகிறான்.

44.

9. சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

சாயத்தைப் பூசினான்

b)

கடைக்குச் சென்றான்

c)

புத்தகத்தை கிழித்தான்

d)

பாடத்தை செய்தான்

45.

10. இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

பாக்கு

b)

கொஞ்சம்

c)

கசப்பு

d)

விரிப்பு

46.

சேர்த்து எழுதுக. பூ + கடை =

a)

பூகடை

b)

பூக்கடை

c)

பூங்கடை

d)

பூவின்கடை

47.

கீழ்க்கண்டவையில் உயர்திணையைத் தேர்ந்தெடுக.

a)

அம்மா

b)

மரம்

c)

நீர்வீழ்ச்சி

d)

மாமா

48.

அத்தலைவன் என்பதில் காணப்படும் புணர்ச்சியின் வகையை எழுதுக?

(a)  

49.

படம் உணர்த்தும் பால், எண், திணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக.

a)

பெண்பால், பன்மை, உயர்திணை

b)

ஆண்பால், ஒருமை, அஃறிணை

c)

ஒன்றன்பால், ஒருமை, அஃறிணை

d)

பலர்பால், பன்மை, உயர்திணை

50.

ஒரு வாக்கியத்தில் எழுவாயை எப்படிக் கண்டு பிடிக்கலாம்?

a)

யார் என்ற கேள்விக்கான பதில் எழுவாய்

b)

எதை என்ற கேள்விக்கான பதில் எழுவாய்

c)

என்ன என்ற கேள்விக்கான பதில் எழுவாய்

d)

வாக்கியத்தின் முதல் சொல்