wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3

Total questions: 47

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

படத்துடன் தொடர்புடைய தொகுதிப்பெயர் என்ன?

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

2.

தேங்காய் ............... விழுந்து சிறுவன் காயமடைந்தான்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

3.

அம்மா கோவிலுக்கு இரண்டு ................ பூக்கள் வாங்கிச் சென்றார்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

4.

அப்பா நட்ட வாழைமரம் .............. தள்ளியது.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

5.

அண்ணன் கடைக்குச் சென்று ஒரு ............ இரம்புத்தான் வாங்கி வந்தார்.

a)

கொத்து

b)

குலை

c)

சீப்பு

d)

தார்

6.

அம்மா சோளக்.................களை வாங்கி வந்து அவித்துக் கொடுத்தார்.

a)

கதிர்

b)

கொத்து

c)

சீப்பு

d)

தார்

7.

திருமண விருந்தில் மக்கள் ................... அமர்ந்து உணவு உண்டனர்.

a)

கூட்டமாக

b)

கும்பலாக

c)

படையில்

d)

மந்தையில்

8.

மாணவர்கள் .............. அமர்ந்து ஆய்வுகளைச் செய்தனர்.

a)

கூட்டமாக

b)

குழுவில்

c)

படையில்

d)

மந்தையில்

9.

நடவடிக்கை கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இராணுவப் .................... மக்களின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தியது.

a)

படை

b)

கூட்டம்

c)

கும்பல்

d)

குழு

10.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பத்துமலை வளாகத்தில் ................. திரண்டனர்.

a)

கும்பலாகத்

b)

கூட்டமாகத்

c)

குழுவாகத்

d)

படையாகத்

11.

அரசர் குதிதைப் ............... போருக்குச் சென்றார்.

a)

மந்தையோடு

b)

கூட்டத்தோடு

c)

படையோடு

d)

கும்பலோடு

12.

அகிலன் தன் ஆட்டு .................. ஓட்டிக் கொண்டு காட்டுக்குச் சென்றான்.

a)

கூட்டத்தை

b)

மந்தையை

c)

கும்பலை

d)

படையை

13.

படத்தில் தெரிவது....

a)

தோட்டம்

b)

தோப்பு

c)

குவியல்

d)

கொள்ளை

14.

அண்ணன் வாழைத் .................. சென்று தார் ஒன்றினை வெட்டி வந்தார்.

a)

தோப்புக்குச்

b)

தோட்டத்திற்குச்

c)

கொள்ளைக்குச்

15.

அப்பா பொங்களுக்கு விறகுக் .................. ஒன்று வாங்கி வந்தார்.

a)

கட்டு

b)

குச்சி

c)

கட்டை

d)

குவியல்

16.

புதிய கட்டிடத்தைக் கட்ட கற்கள் ................ கொட்டப்பட்டிருந்தது.

a)

குவியலாக

b)

கும்பலாக

c)

கூட்டமாக

d)

குழுவாக

17.

திரு சுன் குவாங் தோட்டத்தில் பறித்த பயிற்றங்காயை ...................... கட்டி வைத்தார்.

a)

குவியல் குவியலாகக்

b)

கட்டு கட்டாகக்

c)

கும்பல் கும்பலாகக்

18.

கீழ்க்காணும் கொன்றை வேந்தனின் பொருள் எது

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

a)

செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது

b)

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

d)

தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.

19.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

___________________________________________

a)

யாண்டும் இடும்பை இல.

b)

நற்றாள் தொழாஅர் எனின்.

c)

புண்ணுடையர் கல்லா தவர்.

d)

இன்மை புகுத்தி விடும்

20.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்

21.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

22.

ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.

a)

கம்பி நீட்டினான்.

b)

அள்ளி இறைத்தான்.

c)

ஆறப் போட்டான்

23.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கந்தன் வகுப்பறையில் புத்தகம் வாசித்தாள்.

b)

சுந்தரியும் கலாவும் மெதுவோட்டம் ஓடினார்.

c)

அகிலன் மேசையைத் துடைத்து சுத்தம் செய்தான்.

d)

அள்ளி தோட்டத்தில் பூக்களைப் பறித்தனர்

24.

ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

மெத்தை - மெத்தைங்கள்

b)

முட்டை - முட்டைக்கள்

c)

சிங்கம் - சிங்கம்கள்

d)

மரம் - மரங்கள்

25.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்

a)

மலரும் மணமும் போல.

b)

நகமும் சதையும் போல.

c)

எலியும் பூனையும் போல.

d)

சிலை மேல் எழுத்து போல.

26.

சினைப்பெயரைக் குறிக்கும் சொல் எது?

a)

குட்டை

b)

திடல்

c)

வாய்

d)

பாடுதல்

27.

உயிர்மெய் நெடில்


ம்+ ஈ =_____________________

a)

மா

b)

மூ

c)

மே

d)

மீ

28.

உயர்திணை

a)

மருத்துவர்

b)

பூனை

c)

நாய்

d)

மாடு

29.

உயர்திணை

a)

சிங்கம்

b)

குரங்கு

c)

பன்றி

d)

ஆசிரியர்

30.

அஃறிணை

a)

சிறுவர்கள்

b)

குடியானவன்

c)

பூனை

d)

மாணவர்கள்

31.

ல,ழ,ள கர எழுத்துகள் கொண்ட சொற்களை தேர்ந்தெடுக.


__________________க் கட்டி சாப்பிட இனிப்பாக இருக்கும்.

a)

வெல்ல

b)

பல்லம்

c)

வெள்ளம்

d)

பள்ளம்

32.

அம்மா மீன் கறியில் சிறிதளவு ____________யைச் சேர்த்துக் கொண்டார்.

a)

புலி

b)

கலி

c)

களி

d)

புளி

33.

மீனவன் ______________ யை வீசி மீன்களைப் பிடித்தான்.

a)

கலை

b)

வலை

c)

வளை

d)

களை

34.

சரியான இரட்டைக்கிளைவிகளைத் தேர்ந்தெடுக.


சதீஷ்வரனின் நகைச்சுவையக் கேட்ட நிவாஷினி ______________வென சிரித்தாள்.

a)

மல மல

b)

கல கல

c)

திரு திரு

d)

சல சல

35.

சாந்தினி பனிக்கூழ் வியாபரியை நோக்கி ______________ வென ஓடினாள்.

a)

தர தர

b)

குடு குடு

c)

சல சல

d)

கல கல

36.

மாணவர்கள் ......................... புத்தகங்களை இரவல் வாங்கினர்.

a)

நூலகத்திலிருந்து

b)

வீட்டிலிருந்து

c)

பள்ளியிலிருந்து

d)

வகுப்பறையிலிருந்து

37.

மாயா ......................... தபால் தலை வாங்கினாள்.

a)

வங்கியில்

b)

பள்ளியில்

c)

வீட்டில்

d)

அஞ்சல் நிலையத்தில்

38.

மாணவர்கள் ......................... பந்து விளையாடுகிறார்கள்.

a)

வீட்டில்

b)

திடலில்

c)

ஏரியில்

d)

கடற்கரையில்

39.

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.

இன்பம்

a)

சோகம்

b)

கவலை

c)

துன்பம்

d)

மகிழ்ச்சி

40.

தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

முதலாளிகள்

b)

கடைக்காரர்கள்

c)

வீரர்கள்

d)

பாடகர்கள்

41.

கரடி மரத்தடியில் உறங்கியது.

இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உறங்கியது

b)

கரடி

c)

மரத்தடியில்

d)

மரத்தடியில் உறங்கியது

42.

கீழ்க்காண்பவற்றுள் சரியான உயர்திணையைத் தெரிவுச் செய்யவும்.

a)
b)
c)
d)
43.

சரியான எதிர்ச்சொல் இணையைத் தெரிவுச் செய்யவும்.

a)

மேலே – நடுவே

b)

உள்ளே – கீழே

c)

பெரிய – குண்டு

d)

ஏற்றுமதி – இறக்குமதி

44.

சத்துள்ள


மேலே கொடுக்கப்பட்ட சொல்லின் அடிச்சொல் என்ன?

a)

உள்ள

b)

சத்துள்

c)

சத்து

d)

சத்துகள்

45.

கிளியின் ___________ வளைந்து இருக்கும்.


சரியான சினைப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.

a)

அலகு

b)

கால்

c)

காது

d)

வால்

46.

கருமை நிறக் காகம் கரைந்தது.


இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?

a)

காகம்

b)

நிறக்

c)

கருமை

d)

கரைந்தது

47.

சுகந்தி அழகான உடை அணிந்திருந்தாள்.


இவ்வாக்கியத்தில் எழுவாய் எது?

a)

உடை

b)

சுகந்தி

c)

அணிந்திருந்தாள்

d)

அழகான