Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6 எச்சம்
Total questions: 55
Worksheet time: 28mins
படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.
கடகட
கிடுகிடு
மடமட
சரசர
கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.
ஆயினும்
ஏனென்றால்
ஏனெனில்
இன்னும்
கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?
அ, இ , உ
வினா எழுத்து
மெய் எழுத்து
நெட்டெழுத்து
சுட்டெழுத்து
வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.
_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.
மீனவர், ஆறு, மீன்களைப்
மீனவரது, ஆற்றை, மீனைப்
மீனவர், ஆற்றில், மீன்களைப்
மீனவரின், ஆற்றில், மீனுக்குப்
கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.
I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
I, II, IV, III
I, IV, III, II
I, II, III, IV
II, I, III, IV
தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
கல் + தூண் = கற்றூண்
கண் + இமை = கண்ணிமை
செம்மை + கோல் = செங்கோல்
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
சரியான இரண்டு செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.
கவிதை தேவியால் பாடப்பட்டது.
அந்த ஓவியம் கவினால் வரையப்பட்டது.
விஷால் பள்ளிப் போட்டி விளையாட்டில் கலந்து கொண்டான்.
அம்மா சந்தைக்குச் சென்று பழங்கள் வாங்கி வந்தார்.
கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்
அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.
நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.
கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)
சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
கீழ்க்காணும் படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க.
தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைய்டு நீழலே
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?
சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?
நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?
உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?
கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
தேடிச் சென்றான்
மூச்சுப் பயிற்சி
போய்ப் பார்த்தான்
பட்டுப் புடவை
கபிலன் ___________________ வார்த்தை அவன் தாயின் மனத்தை ________________ செய்தது. *
பேசிய .......... நெகிழ்ந்த
பேசிய ........... நெகிழச்
பேசி ......... நெகிழ்
கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
மாலை வேளையில் வீசிய காற்று இதமாக இருந்ததால், யாமினி அதிக நேரம் கடற்கரையோரமாக நடந்தாள். *
மாலை வேளையில்
அதிக நேரம்
இதமாக இருந்ததால்
வீசிய காற்று
ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.
பாடிய
பாடும்
பாடினான்
பாடல்
எச்சம் என்றால் என்ன?
முற்றுப்பெற்ற வினைச்சொல்
வினைச்சொல்லுடன் பெயர்சொல் இணைதல்
முற்றுப்பெறாத வினைச்சொல்
ரவி கிழிந்த சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றான்.
மேற்காணும் வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
பள்ளிக்குச் சென்றான்
கிழிந்த சட்டை
சட்டையை அணிந்து
பறவைகள் வானில் பறந்து திரிந்தன.
கோடிடப்பட்டச் சொல் குறிக்கும் எச்சம் எது?
பெயரெச்சம்
வினையெச்சம்
அம்மா ஒரு ................. வாழைப்பழத்தை வாங்கினார்.
சீப்பு
கொத்து
தார்
ஒரு .......... ரம்புத்தானின் விலையைக் கண்டு அதிர்ந்து போனேன்.
கொத்து
சீப்பு
குவியல்
பிழையான இணையைத் தெரிவு செய்க.
சீப்பு - வாழைப்பழம்
கொத்து - பூக்கள்
குவியல் - ரம்புத்தான்
.................ப் பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொத்தாக
குவியலாக
சீப்பாக
யானை ........... வாழும் விலங்கு.
மந்தையாக
கூட்டமாக
குவியலாக
கோவிட் 19 பரவுதலைத் தடுக்க மக்கள் ........... இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கூட்டமாக
மந்தையாக
குவியலாக
மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று பூங்............. வழங்கி ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
கொத்து
சீப்பு
கன்று
விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
குலைகளை
கொத்துகளை
கதிர்களை
இரமணி திராட்சைக்........ வாங்கினான்.
குவியல்களை
குலைகளை
கதிர்களை
எஸ்தர் முற்றிய சோளக் ____________ களை வாங்கி வந்தாள்.
குலைகளை
கதிர்களை
குவியல்களை
கண்ணகி மதுரையை எரித்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
திருக்குறள் உலக மக்களால் புகழப்படுகிறது.
செய்வினை
செயப்பாட்டுவினை
மலேசியா ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
ஆசிரியர் மகிழினியைப் பாராட்டுவார்.
செய்வினை
செயப்பாட்டுவினை
சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
மாணவர்கள் தேர்வு எழுதினர்.
செய்வினை
செயப்பாட்டுவினை
பாம்பு கீரிப்பிள்ளையால் துரத்தப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
பாடல் அருணால் பாடப்பட்டது.
செய்வினை
செயப்பாட்டுவினை
காமினி கவிதையைப் புனைந்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
செங்கோடன் விலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவான்.
செய்வினை
செயப்பாட்டுவினை
மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய பாடங்களைச் செய்தனர்.
செய்வினை
செயப்பாட்டுவினை
விமலா கைப்பேசியை எடுத்து வைக்கிறாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
நர்மதாவின் தங்கை புத்தகத்தைக் கிழித்தாள்.
செய்வினை
செயப்பாட்டுவினை
பிரதமர் நாட்டை நல்வழியில் நடத்துகிறார்.
செய்வினை
செயப்பாட்டுவினை
தம்பி பந்தை வேகமாக அலியிடம் உதைத்தான்.
செய்வினை
செயப்பாட்டுவினை
பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?
நாய், மயில்
கடவுள், பூமி
முருகன், அப்பா
தேவர், தாவரம்
பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?
தோட்டக்காரர்
மனித குரங்கு
காவல்நாய்
மாட்டு வண்டி
பால் எத்தனை வகைப்படும்?
3
2
5
4
விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?
இறந்த காலம்
நிகழ் காலம்
எதிர் காலம்
'நான்' என்ற சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல் எது?
நீ
எங்கள்
நாங்கள்
நீங்கள்
ஒன்றன் பால் சொற்களைத் தெரிவு செய்க.
நண்பன்
மேசை
நாய்
விதைகள்
முன்னிலை சொற்களைத் தெரிவு செய்க.
நாம்
அவர்
நீ
என்
திணை என்பது ................
பகுப்பு
குழு
ஒழுங்கு
ஒருமையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
மரம்
மரங்கள்
மனிதர்கள்
