wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

2.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

3.

ஐயோ! கால் வலிக்கிறதே!

மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

4.

சரியான எச்சத்தைத் தெரிவு செய்க


தேடி அலைந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

5.

சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக


உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.

a)

எழுந்த

b)

எழுதிய

c)

எழுதும்

d)

எழுத்து

6.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

7.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

8.

ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.

a)

கு , ஓடு

b)

இல் , உடன்

c)

ஐ , ஓடு

d)

இல் , கு

9.

மாணவர்கள் யாழ் பயிற்சி நூல்களை நேற்று _____________.

a)

வாங்கும்

b)

வாங்கினர்

c)

வாங்குகின்றனர்

d)

வாங்குவோம்

10.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

11.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

12.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.

a)

ஆயினும்

b)

ஏனென்றால்

c)

ஏனெனில்

d)

இன்னும்

13.

கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?


அ, இ , உ

a)

வினா எழுத்து

b)

மெய் எழுத்து

c)

நெட்டெழுத்து

d)

சுட்டெழுத்து

14.

வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.


_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.

a)

மீனவர், ஆறு, மீன்களைப்

b)

மீனவரது, ஆற்றை, மீனைப்

c)

மீனவர், ஆற்றில், மீன்களைப்

d)

மீனவரின், ஆற்றில், மீனுக்குப்

15.

கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.


I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

a)

I, II, IV, III

b)

I, IV, III, II

c)

I, II, III, IV

d)

II, I, III, IV

16.

தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.

a)

கல் + தூண் = கற்றூண்

b)

கண் + இமை = கண்ணிமை

c)

செம்மை + கோல் = செங்கோல்

d)

தெற்கு + மேற்கு = தென்மேற்கு

17.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?


மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

18.

சரியான இரண்டு செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.

a)

கவிதை தேவியால் பாடப்பட்டது.

b)

அந்த ஓவியம் கவினால் வரையப்பட்டது.

c)

விஷால் பள்ளிப் போட்டி விளையாட்டில் கலந்து கொண்டான்.

d)

அம்மா சந்தைக்குச் சென்று பழங்கள் வாங்கி வந்தார்.

19.

கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்

a)

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.

b)

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

c)

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.

d)

நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.

20.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)


சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

21.

மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

22.

கீழ்க்காணும் படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

23.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க.

தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல்

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்

c)

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

d)

ஈசன் எந்தை இணைய்டு நீழலே

24.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?

b)

சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?

c)

நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?

d)

உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?

25.

கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.


வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

a)

தேடிச் சென்றான்

b)

மூச்சுப் பயிற்சி

c)

போய்ப் பார்த்தான்

d)

பட்டுப் புடவை

26.

கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.


வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

a)

தேடிச் சென்றான்

b)

மூச்சுப் பயிற்சி

c)

போய்ப் பார்த்தான்

d)

பட்டுப் புடவை

27.

பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?


நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,

புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

a)

ஒளவியார்

b)

சமண முனிவர்

c)

பாரதியார்

d)

குமரகுருபர சுவாமிகள்

28.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.

a)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

c)

விளையும் பயிர் முளையிலே தெரியும்

d)

இளங்கன்று பயமறியாது

29.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

தெய்வத்துள் வைக்கப் படும்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

30.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.

a)

முழு மூச்சு

b)

முயல் கொம்பு

c)

கண்ணும் கருத்தும்

d)

கங்கணம் கட்டுதல்

31.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?

a)

கண்ணும் கருத்தும்

b)

கரடு முரடு

c)

சுற்றும் முற்றும்

d)

தான தர்மம்

32.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நல்லவர்

b)

மூடர்

c)

உறவினர்

d)

நண்பர்

33.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

a)

குறையான சொற்கள்

b)

தீமை பயக்கும் சொற்கள்

c)

நன்மை பயக்கும் சொற்கள்

d)

இனிமை பயக்கும் சொற்கள்

34.

படம் உணர்த்தும் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

ஐயம் புகினும் செய்வனச் செய்

35.

படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

ஓய்தல் ஒழி

c)

ஊண்மிக விரும்பு

d)

ஏற்பது இகழ்ச்சி

36.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

a)

நண்பர்கள்

b)

பணக்காரர்கள்

c)

சகோதரர்கள்

d)

உறவினர்கள்

37.

ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

a)

பேரும் புகழும்

b)

பழக்க வழக்கம்

c)

பேரும் புகழும்

d)

இன்ப துன்பம்

38.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

b)

நீதிநெறி - ஔவையார்

c)

நல்வழி - குமரகுருபர சுவாமிகள்

d)

வாக்குண்டாம் - பாரதியார்

39.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

நகமும் சதையும் போல

d)

காட்டுத் தீ போல

40.

ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சங்கரன் ஓர் ஏழை குடியானவன். தன்னை நாடி வருவோர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

அறம் செய விரும்பு

c)

இயல்வது கரவேல்

d)

உடையது விளம்பேல்

41.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

மேடு பள்ளம்   -  சமமான நிலப்பகுதி

b)

அங்கும் இங்கும்  -  சில இடங்களில்

c)

அரை குறை  -  முழுமை பெறாத நிலை  

d)

மூலை முடுக்கு  -  எவ்விடத்திலும்

42.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

43.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

b)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

d)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

44.

பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

சலசல

b)

மளமள

c)

தகதக

d)

மடமட

45.

திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.

_____________________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

b)

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

c)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

d)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

46.

ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

b)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

c)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

d)

நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

47.

கொடுக்கப்பட்டுள்ள உவமைத்தொடருக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

a)

துன்பத்தால் மனம் உருகுதல்

b)

எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்

c)

ஒரு பொருள் சேதமடைவதை தடுக்க முடியாமை

48.

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

புதிய ஆத்திசூடி

d)

வெற்றிவேற்கை

49.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

50.

சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.

a)

இலைமறை காய் போல

b)

சிலை மேல் எழுத்து போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

d)

காட்டுத் தீ போல