wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

2.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

3.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

a)

ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

4.

நிரைவு செய்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

_________ __________ __________.

a)

யாண்டும் இடும்பை இல.

b)

இடும்பை இல

c)

இல இடும்பை யாண்டு

d)

யாண்டும் இடும்பை இருக்கு

5.

மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

c)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

d)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

6.

அன்று கனத்த மழை. சிவா வேகமாகத் வாகனத்தைச் செலுத்தியதால் அவனுடைய வாகனம் விபத்துக்குள்ளாகியது. அவ்வழியாக வந்த சிவாவின் நண்பன் காயமடைந்த சிவாவை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தான்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு

7.

இராமுவுக்குச் சுயமாகத் கைத்தொழில் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆதலால், வியாபார நுணுக்கங்களை அறிந்த பின்னரே, இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

8.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் : முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

d)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

9.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி

சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

c)

C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்

நற்றால் தொழா அர் எனின்

d)

D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

10.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

11.

ராமு மிகவும் ஒழுக்கமான மாணவன். பள்ளியில் நன்னடத்தைப் பேணுவதோடு தன் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் மாரியாதையாக நடந்து கொள்வான்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

தீயினாற் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

12.

திருக்குறள் அடியைப் பூர்த்திச் செய்யவும்


வையத்துள் வாழ்வாங்கு___________________________

a)

வானுறையும் தெய்வத்துள்

b)

தெய்வத்துள் வைக்கப்படும்

c)

வாழ்பவன் வானுறையும்

13.

வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்

a)

உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

d)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.

14.

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

a)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.

b)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

15.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

a)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.

b)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

16.

கொடுக்கப்பட்ட பொருளுக்கேற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு.

உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

b)

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

c)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

d)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

17.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது ழுக்கு

a)

குறைவு

b)

துன்பம்

c)

கொடுமை

d)

குற்றம்

18.

திருக்குறள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் _______________ புண்ணுடையர் கல்லா தவர் (393)

a)

வாலறிவன்

b)

நன்றல்லது

c)

கற்றபின்

d)

முகத்திரண்டு

19.

நிறைவு செய்க

____________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

b)

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார்

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

20.

திருக்குறளுக்கான பொருளை தெரிவு செய்க.


இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று (100)

a)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது

கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

21.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

c)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

22.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


நன்மைத் தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

a)

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

b)

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்த் தற்று.

c)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

23.

தீயவை தீய பயத்தலால் தீயவை

______________________________________

a)

தீயினாற் சுட்ட புண்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

தீயினும் அஞ்சப் படும்

d)

தீமை இலாத சொலல்

24.

கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் யாது?


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

a)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

b)

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

c)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

d)

ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.

25.

தீயவை தீய பயத்தலால் தீயவை

______________________________________


இக்குறளின் அடுத்த அடியின் பொருள் என்ன?

a)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்

b)

நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

c)

முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்

d)

ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

26.

கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


கபிலன் தனது கலைக்கல்வி தேர்வுக்கான உபகரணங்களை எடுத்து வந்தான். ஆயினும் தன் அருகில் அவனுடன் பயிலும் நண்பன் சிவா, தன் உபகரணங்களை மறந்து வைத்து விட்டதை அறிந்து அவனுடன் பகிர்ந்து கொண்டான். சிவா தக்க சமயத்தில் கபிலன் தனக்கு உதவியதை எண்ணி நன்றி கூறினான்.

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

27.

கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


சரண் தனது வகுப்புத் தோழர்கள் போதைப் பொருள் உட்கொள்வதை அறிந்தான். அவர்கள் சரணையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி ஆசை வார்த்தைகளைக் கூறினர். ஆயினும் போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து சரண் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டான்.

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

28.

கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


சங்கீதா அன்றைய தினம் கூடுதல் வகுப்பிற்கான மதிய உணவைக் கொண்டு வர மறந்து விட்டாள். தன் தந்தை கொடுத்த செலவுப் பணத்தில் சில நோட்டுப் புத்தங்கங்களை வாங்கி அவற்றையும் செலவு செய்து விட்டாள். பசி வயிற்றைக் கிள்ளியது. அவளின் நிலமையை உணர்ந்த அவளின் தோழி மீனா, தான் கொண்டு வந்த மதிய உணவை அவளுடன் பகிர்ந்து உண்டாள்.

a)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

b)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

c)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

29.

காலத்தி னாற்செய்த நன்றி என்பதன் பொருள் என்ன ?

a)

ஒருவருக்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி

b)

அதன் தன்மையை ஆராய்ந்தால்

c)

இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாகக் கருதப்படும்

30.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் என்பதன் பொருள் என்ன ?

a)

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும்

b)

அதனைக் கேட்டவாறே

கொள்ளாமல்

c)

அதில் உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

31.

மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் குறள் யாது ?

a)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

b)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

32.

மேற்காணும் சூழலுக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

33.

மேற்காணும் கதைக்கேற்ற திருக்குறள் யாது ?

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு

b)

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

34.

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக் கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

a)

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை

b)

ஒருமைக்கன் தான்கற்ற கல்வி ஒருவருக்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

35.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

b)

செல்வத்துள் எல்லாம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் செல்வம் தலை.

c)

செல்வத்துள் செல்வம் செல்வத்துள் அச்செல்வம்

செவிச்செல்வம் எல்லாம் தலை.

36.

கருமையாக்கப்பட்ட சொல்லினக்சரியான பொருளைத் தெரிவு செய்க.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

இன்பம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

நன்மை

37.

விளக்கத்திற்கேற்ற திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.


உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்த கணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.

a)

இடுக்கண் களைவதாம் நட்பு

b)

உடுக்கை இழந்தவன் கைபோல

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

d)

அச்செல்வம் செல்வத்துள் எல்லம் தலை

38.

விளக்கத்திற்கேற்ற திருக்குறளின் முதல் அடியைத் தெரிவு செய்க.


உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்த கணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.

a)

இடுக்கண் களைவதாம் நட்பு

b)

உடுக்கை இழந்தவன் கைபோல

c)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்

d)

அச்செல்வம் செல்வத்துள் எல்லம் தலை

39.

விளக்கத்திற்கேற்ற திருக்குறளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.


ஒருவர் அடையத்தகுந்த செல்வங்களுள் சிறந்த செல்வம் செவிவழி பெறும் அறிவுச் செல்வமாகும். அவ்வறிவுச் செல்வம் மற்றச் செல்வங்களைவிடச் சிறந்த்தாகக் கருதப்படுகின்றது.

a)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

b)

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

c)

செல்வத்துள் எல்லாம் தலை

d)

இடுக்கண் களைவதாம் நட்பு

40.

திருக்குறளில் மொத்தம் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

130

b)

131

c)

132

d)

133

41.

திருக்குறளை வேறு எப்படி அழைக்கலாம்?

a)

பொதுமறை

b)

தமிழ்மறை

c)

பழமொழி

d)

பொய்யாமொழி

42.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

.................................................................................................

a)

தோன்றலின் தோன்றாமை நன்று.

b)

தோன்றாமை தோன்றலின் நன்று

c)

தோன்றின் தோன்றாமை நன்று.

d)

தோன்றாமை நன்று

43.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

______________ சுட்ட வடு.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

நாவினாற்

b)

கண்களினாற்

c)

நாக்கினாற்

d)

கையினாற்

44.

'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும்' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தேர்ந்தெடுக.

a)

நெருப்பினால் சுட்ட புண் வெளியிலும் உள்ளேயும் ஆறிவிடும். அதே போல் நாம் பேசியதும் மறைந்து போகும்.

b)

நெருப்பினால் சுட்ட புண் வெளியிலும் உள்ளேயும் தழும்பு இருக்கும். ஆனால், பேசுகின்ற சொற்கள் விரைவாக மறைந்து போகும்.

c)

நெருப்பினால் சுட்ட புண் வெளியில் தழும்பு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால், உள்ளம் புண்படும்படி பேசுகின்ற பேச்சால் ஏற்படுகின்ற பாதிப்பு என்றும் மறையாது.

45.

முயற்சி திருவினையாக்கும்........ என்ற திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும் முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்

b)

முயற்சி ஒருவனுக்கு பணத்தை அதிகரிக்கும் முயற்சி இல்லாமை அவனை ஏழ்மையில் ஆழ்த்திவிடும்

46.

மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

c)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

d)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

47.

திருக்குறளுக்கு ஏற்ற பொருளைக் கண்டுபிடிக்கவும்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

a)

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறிய செய்வதுதான் அறிவு

b)

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய எழு

பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

48.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

a)

எப்பொருள் யார் யாரிடம் கேட்டாலும்

அதனைக் கேட்டவாறே கொள்ளாமல்

அதில் எது உண்மை என்பதைக்

கண்டறிய செய்வதுதான் அறிவு.

b)

ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய எழு

பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

49.

யாகாவா ராயினும் நாகாக்க _______

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

a)

செய்யாக்கால்

b)

கவக்கால்

c)

காவாக்கால்

50.

திருக்குறளை நிரைவு செய்க.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

a)

தீமை இலாத சொலல்

b)

மெய்ப்பொருள் காண்பது அறிவு.