wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

தெய்வத்துள் வைக்கப் படும்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

2.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.

a)

முழு மூச்சு

b)

முயல் கொம்பு

c)

கண்ணும் கருத்தும்

d)

கங்கணம் கட்டுதல்

3.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?

a)

கண்ணும் கருத்தும்

b)

கரடு முரடு

c)

சுற்றும் முற்றும்

d)

தான தர்மம்

4.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை

நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நல்லவர்

b)

மூடர்

c)

உறவினர்

d)

நண்பர்

5.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

a)

குறையான சொற்கள்

b)

தீமை பயக்கும் சொற்கள்

c)

நன்மை பயக்கும் சொற்கள்

d)

இனிமை பயக்கும் சொற்கள்

6.

படம் உணர்த்தும் செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

ஐயம் புகினும் செய்வனச் செய்

7.

படத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆறுவது சினம்

b)

ஓய்தல் ஒழி

c)

ஊண்மிக விரும்பு

d)

ஏற்பது இகழ்ச்சி

8.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

a)

நண்பர்கள்

b)

பணக்காரர்கள்

c)

சகோதரர்கள்

d)

உறவினர்கள்

9.

ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.


தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.

a)

பேரும் புகழும்

b)

பழக்க வழக்கம்

c)

பேரும் புகழும்

d)

இன்ப துன்பம்

10.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

b)

நீதிநெறி - ஔவையார்

c)

நல்வழி - குமரகுருபர சுவாமிகள்

d)

வாக்குண்டாம் - பாரதியார்

11.

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

a)

சிலை மேல் எழுத்து போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

நகமும் சதையும் போல

d)

காட்டுத் தீ போல

12.

ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சங்கரன் ஓர் ஏழை குடியானவன். தன்னை நாடி வருவோர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்.

a)

ஏற்பது இகழ்ச்சி

b)

அறம் செய விரும்பு

c)

இயல்வது கரவேல்

d)

உடையது விளம்பேல்

13.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

மேடு பள்ளம்   -  சமமான நிலப்பகுதி

b)

அங்கும் இங்கும்  -  சில இடங்களில்

c)

அரை குறை  -  முழுமை பெறாத நிலை  

d)

மூலை முடுக்கு  -  எவ்விடத்திலும்

14.

படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

15.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

b)

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

c)

வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்

d)

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்

16.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

முன் வைத்த காலைப் பின் எடுக்காதே

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

d)

தனிமரம் தோப்பாகாது

17.

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தனிம்மரம் தோப்பாகாது

b)

தனிமரம் தோப்பாகா

c)

தனிமரம்தோப்பாகாது

d)

தனிமரம் தோப்பாகாது

18.

'அவனன்றி ஓரணுவும் அசையாது'

மேற்காணும் பழமொழியின் கருப்பொருள் யாது?

a)

மனிதனின் பேராற்றல்

b)

கடவுளின் பேராற்றல்

c)

உலகின் பேராற்றல்

19.

மேற்காணும் படம் எந்தப் பழமொழியைக் குறிக்கிறது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

d)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

20.

கோடிட்ட சொல்லின் வேறொரு பொருளைக் கண்டறிக.


அவனன்றி ஓரணுவும் அசையாது

a)

இறைவன்

b)

ஆழி

c)

நதி

d)

கணினி

21.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


கடவுள் நம்பிக்கை கொண்டிராத குமரன், தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்த பொழுது இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தித்தான்.

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்

d)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

22.

கீழ்க்காணும் சூழல் அடிப்படையாகக் கொண்ட பழமொழியைத் தெரிவு செய்க.


உறவினர்களுடனும் தோழர்களுடனும் சண்டையிட்டு அவர்களிடமிருந்து பிரிந்த கனியமுதன், வெளிநாட்டிற்குச் சென்று தனிமையில் வாடினான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

முன் வைத்தக் காலைப் பின் வைக்காதே

d)

அவனன்றி ஓரணுவும் அசையாது

23.

மேற்காணும் படத்தை மையமாகக் கொண்டுள்ள பழமொழி யாது?

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது

d)

தனிமரம் தோப்பாகாது

24.

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?


பொருள்: ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை


மேற்காணும் இணை சரியா?

a)

சரி

b)

தவறு

25.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?


பொருள்: உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.


மேற்காணும் இனை சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

26.
  1. 1. அடை எத்தனை வகைப்படும்?

a)

3

b)

4

c)

1

d)

2

27.
  1. 2. பெயரடை பெயர்ச்சொல்லின் தன்மையைக் குறிக்கும்.

a)

சரி

b)

தவறு

28.
  1. 3. விவசாயி தனது நிலத்தில் ______________ கிணறு ஒன்றைத் தோண்டினார்.

a)

ஆழமாக

b)

ஆழமான

c)

ஆழமிக்க

29.
  1. 4. படத்திற்குப் பொருத்தமான பெயரடையைத் தேர்வு செய்யவும்.

a)

உயரமாக மலை

b)

உயரமுள்ள மலை

c)

உயரமான மலை

30.
  1. 5. அடர்த்தியான காட்டில் வனவிலங்குகள் வசிக்கின்றன.

a)

சரி

b)

தவறு

31.
  1. 6. வகுப்பறையில் மாணவர்கள் ___________ அமர்ந்திருந்தனர்.

a)

அமைதியுடன்

b)

அமைதியாக

c)

அமைதியான

32.
  1. 7. நாம் அனைவரிடமும் ________ பேச வேண்டும்.

a)

அன்புடன்

b)

அன்பாகப்

c)

அன்பான

33.

  1. 8. மயில் தன் (a)   தோகையை விரித்து ஆடுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ந்தோம்.

34.

  1. 9. கவிஞர் (a)   காட்சிகளைக் கண்டு இரசித்தார்.

35.
  1. 10. படத்திற்குப் பொருத்தமான பெயரடையைப் பயன்படுத்தி 1 வாக்கியம் அமைக்கவும்.

4 lines
36.

ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க

a)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

37.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

38.

ஐயோ! கால் வலிக்கிறதே!

மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

39.

சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக


உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.

a)

எழுந்த

b)

எழுதிய

c)

எழுதும்

d)

எழுத்து

40.

கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.


பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.

a)

பறந்தனர்

b)

நுழைந்தனர்

c)

பாய்ந்தனர்

d)

வந்தனர்

41.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

42.

கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?


அ, இ , உ

a)

வினா எழுத்து

b)

மெய் எழுத்து

c)

நெட்டெழுத்து

d)

சுட்டெழுத்து

43.

கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.


I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

a)

I, II, IV, III

b)

I, IV, III, II

c)

I, II, III, IV

d)

II, I, III, IV

44.

மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

45.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?

b)

சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?

c)

நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?

d)

உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?

46.

கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.


செய்தி 1 :

கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.


செய்தி 2 :

ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.

a)

இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்

b)

ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்

c)

இயல்வது கரவேல், அறம் செய விரும்பு

47.

தமிழ்மொழி தேர்வில் மல்லிகா எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

பதறாத காரியம் சிதறாது

48.

பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.

a)

சலசல

b)

மளமள

c)

தகதக

d)

மடமட

49.

ஈகை திறன் எனும் புதிய ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

b)

அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்

c)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

d)

நலமாக வாழ உடலினைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

50.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று