wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 6

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

சுடர் விளக்காயினும் ______________________________

a)

தூண்டுகோல் வேண்டும்

b)

தூண்டுகோல் தேவை

c)

தேற்றுதல் தேவை

2.

சுவரை வைத்துத்தான் ______________________________

a)

சித்திரம் வரைய வேண்டும்

b)

ஓவியம் வரைய முடியும்

c)

சித்திரம் வரைய முடியும்

d)

ஓவியம் வரைய வேண்டும்

3.

கீழ்க்கண்ட பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

நம் உடல் நலமாக இருந்தால்தான் நம் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தை சிறப்பாகச் செய்ய முடியும்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

பதறாத காரியம் சிதறாது

c)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டுத்

4.

ஆற்றல் கொண்டு இயங்குபவருக்கு ___________________________________________________________

a)

தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவருக்குத் தன்னம்பிக்கையைத் தரும்.

b)

தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஓங்கச் செய்யும்.

c)

தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அவரால் எதையும் சாதிக்க இயலாது.

5.

மித்ரா இனிமையான குரல்வளம் படைத்தவள். ஆனாலும் தன் குருவின் வழிகாட்டலினால் சங்கீதம் பயின்று, இன்று சிறந்த பாடகியாகத் திகழ்கிறாள்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

பதறாத காரியம் சிதறாது

6.

தேசிகன் சிறுவயதிலேயே தன் மாமாவிடமிருந்து பல அரிய கலைகளைக் கற்றார். இருந்தாலும் உரிய வயதில் தன் ஆசிரியரிடமிருந்து பல கலைகளைக் கற்றுப் பெரிய வித்வானாகத் திகழ்ந்தார்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

பதறாத காரியம் சிதறாது

7.

பாடகி சித்திரா எப்போதும் தன் குரல்வளத்தைக் கவனித்துக் கொள்வார். தன் குரலின் இனிமையைக் கெடுக்கும் உணவு வகைகளை அவர் முற்றும் தவிர்த்தார். நல்ல குரல் வளம் இருந்தால் மட்டுமே அனைவரையும் கவரும் வண்ணம் பாட முடியும் என அவர் அடிக்கடி கூறுவார்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

பதறாத காரியம் சிதறாது

8.

தன் பள்ளியின் காற்பந்து அணியின் 'கோல்' காப்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட கண்ணன், கால்களையும் கைகளையும் வலுப்படுத்த அதிகமாகப் பயிற்சிகள் செய்தான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

பதறாத காரியம் சிதறாது

9.

சுதேவி இயற்கையிலேயே பேச்சாற்றல் மிக்கவள். எனினும் தன் தந்தையின் உந்துகோலால் தன்னால் தேசிய அளவிலான பேச்சுப் போட்டியில் சாதனை படைக்கவிருக்கிறாள்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

பதறாத காரியம் சிதறாது

10.

மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

பதறாத காரியம் சிதறாது