Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6
Total questions: 60
Worksheet time: 30mins
படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.
கடகட
கிடுகிடு
மடமட
சரசர
கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.
இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.
ஆயினும்
ஏனென்றால்
ஏனெனில்
இன்னும்
கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?
அ, இ , உ
வினா எழுத்து
மெய் எழுத்து
நெட்டெழுத்து
சுட்டெழுத்து
வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.
_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.
மீனவர், ஆறு, மீன்களைப்
மீனவரது, ஆற்றை, மீனைப்
மீனவர், ஆற்றில், மீன்களைப்
மீனவரின், ஆற்றில், மீனுக்குப்
கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.
I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
I, II, IV, III
I, IV, III, II
I, II, III, IV
II, I, III, IV
தோன்றல் விகாரத்தைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
கல் + தூண் = கற்றூண்
கண் + இமை = கண்ணிமை
செம்மை + கோல் = செங்கோல்
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
சரியான இரண்டு செயப்பாட்டுவினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.
கவிதை தேவியால் பாடப்பட்டது.
அந்த ஓவியம் கவினால் வரையப்பட்டது.
விஷால் பள்ளிப் போட்டி விளையாட்டில் கலந்து கொண்டான்.
அம்மா சந்தைக்குச் சென்று பழங்கள் வாங்கி வந்தார்.
கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்
அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.
நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.
கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)
சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
கீழ்க்காணும் படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற செய்யுள் அடியைத் தெரிவு செய்க.
தாமரை மலர்களிலுள்ள தேனை உறிஞ்ச வண்டுகள் ரீங்காரமிடும் குளிர்ச்சியான தடாகம் போல்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்(கு)இள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணைய்டு நீழலே
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நீங்கள் மாம்பழம் பறித்தீர்களா?
சுமதி மலர்களை மாலையாகத் தொடுத்தாளா?
நான் சாலை ஓரத்தில் விளையாடலாமா?
உங்கள் நாட்டின் மீது எதிரிகள் படையெடுக்கின்றனரா?
கொடுக்கப்பட்ட இலக்கண விதிக்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவு செய்க.
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.
தேடிச் சென்றான்
மூச்சுப் பயிற்சி
போய்ப் பார்த்தான்
பட்டுப் புடவை
சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .
சித்திரம் , வேண்டாம்
சித்திரம் , வேண்டும்
ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
சிறு வயதிலிருந்தே தந்தை கொடுத்த நம்பிக்கையே சங்கரி நீச்சல் போட்டியில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தது.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும். இப்பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?
நம் உடல் நலமாக இருந்தால்தான் மற்றவருடைய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
முருகன் தினமும் காலையுணவை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். தனது உடல் நலமாக இருந்தால்தான் சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உறுதி கொண்ட ரோஜா, காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கு கொண்டாள்
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
பணத்தை வாங்கிக் கொடுத்த தன் நண்பனின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான் குமரன்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தர வேண்டியதில்லை. இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
தமிழ்மொழி தேர்வில் மல்லிகா எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
பதறாத காரியம் சிதறாது
பாடல் பாடுவதைத் தன் அன்னையிடமே கற்றுக் கொண்ட பாலா, பள்ளி நிகழ்வுகளில் பாடல்கள் பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தான்.
சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.
முழு மூச்சுடன்
ஓட்டை வாயுடன்
அங்கும் இங்குமாய்
ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்
சிக்கனம் சீரளிக்கும்
இளங்கன்று பயம் அறியாது
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
முயற்சி திருவினையாக்கும்
கொன்றை வேந்தனை நிறைவு செய்க
சூதும் வாதும் _____________________________
மந்திரம் இல்லை
வார்த்தை அமிர்தம்
திரவியம் தேடு
வேதனை செய்யும்
ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
ஐயோ! கால் வலிக்கிறதே!
மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக
உள்நாட்டு படைப்பாளர்கள் __________________சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
எழுந்த
எழுதிய
எழுதும்
எழுத்து
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ______________________.
பறந்தனர்
நுழைந்தனர்
பாய்ந்தனர்
வந்தனர்
இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழைக் குடும்பம் பிறந்தாலும் இளமாறன் முயற்சி படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு , ஓடு
இல் , உடன்
ஐ , ஓடு
இல் , கு
பள்ளிக்கு அதிகாரி வருகிறார் என்பதை அறிந்ததும், மாணவர்கள் ___________ என வகுப்பறையைச் சுத்தம் செய்தனர்.
சலசல
மளமள
தகதக
மடமட
திருக்குறளின் விடுபட்ட பகுதியை நிறைவு செய்க.
_____________________________________________
எண்ணுவம் என்பது இழுக்கு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது. இக்கருத்து எந்த செய்யுளில் இடம் பெற்றுள்ளது
கொன்றை வேந்தன்
ஆத்திசூடி
புதிய ஆத்திசூடி
வெற்றிவேற்கை
சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சிறுவயதில் தன் குடும்பத்தை பழிவாங்கிய அந்தப் பயங்கர சாலை விபத்து, சுமதியின் மனதில்_________________ பதிந்து விட்டது.
இலைமறை காய் போல
சிலை மேல் எழுத்து போல
அனலில் இட்ட மெழுகு போல
காட்டுத் தீ போல
சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.
எனினும்
ஆகவே
இருந்தாலும்
இருப்பினும்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.
ஐயோ... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.
! !
! ;
: ;
! .
நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.
முழு மூச்சு
முயல் கொம்பு
கண்ணும் கருத்தும்
கங்கணம் கட்டுதல்
கீழ்க்காண்பனவற்றுள் எஃது இணைமொழி அல்ல?
கண்ணும் கருத்தும்
கரடு முரடு
சுற்றும் முற்றும்
தான தர்மம்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குறையான சொற்கள்
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
இனிமை பயக்கும் சொற்கள்
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
கோடிட்ட சொல்லின் பொருள் :
துன்பம்
இன்பம்
சரியான பொருளைத் தெரிவு செய்.
"அறஞ்செய விரும்பு"
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் செய்வதைத் தவிர்த்து விடுதல் விரும்பத்தக்க ஒன்று.
அறம் செய்வது நாம் விரும்பக்கூடாத செயல்.
அந்த + கடை
அந்த கடை
அந்தக்கடை
அந்தக் கடை
அந்தகடை
எங்கு + சென்றாய்?
எங்குச் சென்றாய்?
எங்குச்சென்றாய்?
எங்கு சென்றாய்?
எங்குசென்றாய்?
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
சின்கம்
பன்டம்
தங்கம்
மஞ்ஞள்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அம்மா அப்பா சொன்னதைக் கேட்டு மளமளவென சிரித்தார்.
பாட்டி கதவை கலகலவென தட்டினார்.
புத்தகங்கள் தகதகவென சரிந்து விழுந்தன.
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
இது என்ன?
இரும்பு ஆணி
இருப்பு ஆணி
இறும்பு ஆணி
இறுப்பு ஆணி
மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
வோ, ரீ, வு, ளை
ங், ஞோ, மெள, னா
தோ, றீ, செ, கூ
மூ, பெள, வை, யோ
வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!
விழைவு வாக்கியம்
தொடர் வாக்கியம்
வேண்டுகோள் வாக்கியம்
கட்டளை வாக்கியம்
கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?
கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.
உழத்தி
உழச்சி
உழவி
உழவள்
மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?
ஆண்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
பெண்பால்
பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?
நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
மூன்றாம் வேற்றுமை உருவு
ஆறாம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருவு
கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?
கரம் + தா = கரந்தா
கல் + சுவர் = கற்சுவர்
கண் + இமை = கண்ணிமை
மலர் + மாலை = மலர்மாலை
சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.
அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.
எனினும்
எனவே
இருந்தாலும்
இருப்பினும்
கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.
ஐயோ.... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.
! !
! ;
: ;
! .
