wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் ஆண்டு 6

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.

தம்பி, பிறர் மனம் புண்படப் பேசாதே. இல்லையேல், துன்பத்திற்கு ஆளாவாய்.

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

2.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

a)

எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.

b)

ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

3.

யாரொருவர் நேர்மையாக நடந்து கொள்கிறார்களோ அவர்களை மக்கள் எப்போதும் மதித்திடுவர்.

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

4.

அகமது மற்றவர் மனம் அறியாது தன் விருப்பம் போல் வார்த்தைகளை அள்ளி வீசுவான். ஒரு நாள் அப்படிப் பேசுகையில் பெரியவர் ஒருவர் அவனிடம் “உன் பேச்சை நிறுத்து அகமது!,” என அனைவரின் முன்னிலும் உத்தரவிட்டார்.

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

5.

செல்வன் : முகுந்தா, அன்று சந்திப்புக் கூட்டத்தில் நீ உண்மையைத்தான்  

                  சொன்னாய். நான் நன்கு அறிவேன். இருப்பினும், நீ ஆத்திரத்தில்

                  பயன்படுத்திய வார்த்தைகளினால் பிறரின் மனம் புண்பட்டு உன் 

                  கருத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

முகுந்தன் : ஆமாம், நண்பா. அடுத்த முறை அவ்வாறு நடக்காமல் முயல்கிறேன்.

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

6.

பேரன் : ‘ஒரு சொல் வெல்லும்; பிரிதொரு சொல்  

        கொல்லும்’ என்று கூறுவதன் பொருள் என்ன தாத்தா ?

தாத்தா : முரளி, நாம் பேசும் சொல் மனத்தை நெகிழ வைக்கவும் 

        செய்யும், காயப்படுத்தவும் செய்யும். பேசுபவரே பண்பறிந்து

        பேச வேண்டும். இல்லையேல், பல சிக்கல்களைச் சந்திக்க

        நேரிடும். 

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

7.

உலகநீதியின் பொருளுக்குத் தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

8.

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்

a)

எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்பட நேரிடும்.

b)

ஒருவர் தம் மனசாட்சிக்குப் பொய்யில்லாமல் நடந்துகொண்டால், அவர் உலகத்தாரால் மதிக்கப்படுவார்.

9.

கீழ்க்காணும் பாடலில் முதல் இரண்டு வரிக்குத் தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும் போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை வணங்கும்                       - கவிஞர் கண்ணதாசன் 

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

10.

‘சோகாப்பர்’ என்ற சீரின் பொருள் என்ன?

a)

குற்றம்

b)

துன்பப்பட நேரிடும்

c)

அடக்கியாளுதல்

d)

உலகமக்கள் 

11.

‘உளன்’ என்ற சீரின் பொருள் என்ன?

a)

உள்ளம் 

b)

பொய்மை இல்லாது

c)

உலகமக்கள் 

d)

இருப்பான்

12.

கீழ்க்காணும் பாரதியார் கவிதை வரிக்குத் தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.

பொய் சொல்லக்கூடாது பாப்பா!- என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா!

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

13.

மரபுத்தொடருக்குத் தொடர்புடைய திருக்குறளைத் தெரிவு செய்க.

நாக்கு நீளுதல்

a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

    உள்ளத்து ளெல்லாம் உளன் (294)

b)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)